Pages

Saturday, September 28, 2013

ராக்கெட் ஏவு தளம் மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்?

மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்?
இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிலேயே மிகச் சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரோ விண்வெளி கமிட்டியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் திட்டம் கடந்த ஆறு மாதங்களாக இழுபறியில் நிற்கிறது. மேலும், பெரும்பான்மை ஆந்திர அதிகாரிகள் லாபகரமான இத்திட்டத்தை ஆந்திராவுக்குக் கடத்திச் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

ஈஸியா செய்யலாம் இஞ்சி பிஸ்கெட்




நொறுக்குத் தீனி என்றாலே நம் பிள்ளைகள் தராமலே சாப்பிடுவார்கள். ஆனால் விலை உயர்ந்த தீனிகளை நாம் அவர்களுக்கு வாங்கி தந்தாலும் அதில் சேர்க்கப்பட்ட செயற்கை கலவைகளால் பிள்ளைகளின் உடலுக்கு கேடு ஏற்படும். டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று. எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது. ஏன் இதனை நாமே வீட்டில் சுவையாகவும் எளிதாகவும் செய்ய கூடாது.

சைனஸ் தொல்லைக்கு வேப்ப எண்ணெய்!


வேம்பின் மருத்துவ பயன்கள் இன்றியமையாதது. பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் வேம்பின் குணநலன்களை அறிந்துகொள்வோமா....

* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.