Pages

Monday, October 7, 2013

நட்பு எல்லைகளையும் நாடுகளையும் கடந்தது -குலசை வின்மணியார்


Post
விஞ்ஞானம் வளர வளர மனிதர்களிடம் அன்பு குறைந்து
ரோபோக்களாக மாறி வருகிறோம்.

லஞ்சம் வாங்காமல் வேலை செய்யும் அதிகாரிக்கு
வாய்விட்டு நன்றி சொல்லுங்கள்.

பணத்தை எதிர்பார்த்து பழகும் நண்பர்களை விட அன்பை
எதிர்பார்திருக்கும் நண்பர்களை அருகில் வைத்திருப்பது
நல்லது.

தினமும் படிக்கும் படிப்பும் ஒரு தவம் தான் நன்றாக
செய்து முடித்தால் வெற்றி நிச்சயம்.

ஆட்சிக் காலத்தில் தவறு செய்பபனை வீழ்ச்சி காலத்தில்
இறைவன் தண்டிக்கிறான்.

மது அருந்துபவர் தன்னை மட்டுமல்ல தன் குடும்பத்தினருக்கும்
மிகப்பெரிய துரோகம் செய்கிறார்.

நம் அருகில் இருப்பவர் நம்மை பற்றி குறை கூறினால் அவரிடம்
இருந்து விலகி இருப்பது நமக்கு நன்மையைத் தரும்.

வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மனநிலையில் இருக்கப்
பழக வேண்டும். பிறரை குறை கூற கூடாது.

அடுத்தவர் துன்பப்படுவதை பார்த்து மனதுக்குள் வருத்தப்படும்
மனிதன் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை.
பலன் எதிர்பாராமல் சில நேரங்களில் நாம் செய்யும் உதவி
என்றாவது ஒரு நாள் நமக்கு பலனைக் கொடுக்கும்.
வின்மணியார்

No comments:

Post a Comment