Pages

Tuesday, December 24, 2013

சவூதி அரேபிய மன்னர் சவூத் பின் ஃபைஸல் இந்தியாவிற்கு வந்த போது....



சவூதி அரேபிய மன்னர் சவூத் ஒருமுறை இந்தியவுக்கு பயனம் வந்தார். சில ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்வதைப் பற்றி இந்திய உயர் மட்ட
அரசு அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருந்தார்.

தொழுகைக்கு நேரமானதால் ஜும்ஆ பள்ளிக்கு விரைந்து சென்றார். 


அன்று வெள்ளிக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாரிகள் மன்னரை முன் வரிசைக்கு அழைத்து சென்றுவிடலாம் என்று முற்பட்டார்கள்.

மன்னர் கோபத்தை வெளிப்படுத்த அதிகாரிகள் அந்த முயற்சியை
கைவிட்டார்கள். ஜும்ஆ பள்ளிவாசலில் இறுதி வரிசையில் அருகில் கடை போட்டிருப்பவர்களும்,உதவிக்காக வேண்டிநிற்பவர்களும், இறுதி வேளையில் வருபவர்களும்  தொழுவது வழக்கம்.

என்ன செய்வது என்று யோசித்தார்கள் அதிகாரிகள் ஆனால் மன்னர் எதைப் பற்றியும் சிந்திக்காமல் பிச்சைக்காரர் வரிசையில் நின்று தொழுகையை முடித்தார்.

மன்னருக்காக வெளியில் காத்திருந்த பத்திரிக்கையாளர்கள் நடந்த சம்பவங்களைப் பற்றி கேட்கும் பொழுது மன்னர் மிகவும் கூலாக ஒற்றை வரியில் சொன்னார் ?

This is Islam (இதுதான் இஸ்லாம்)

No comments:

Post a Comment