Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, June 9, 2012

Chinese health secret

Chinese health secret
green-tea.jpgவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் சீனர்களின் ஆரோக்கிய இரகசியம் –
உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவே போற்றப்படுகிறது. இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம். குறிப்பாக 1. கொழுத்த சரீரம் உருவாகாது. 2. இதய நோய்களுக்கான அறிகுறியே காணப்படாது.
இந்த இரண்டு தன்மைகளும் ஒருவரிடம் தொடர்ந்து இருந்தால் அவர் ஆரோக்கியமாக வாழலாம். ஆரோக்கியம் தொடர்வதால் வாழ்நாளும் நீடிக்கிறது. பிறநோய்கள் இருந்தாலும் எளிதில் அவற்றைக் குணப்படுத்தலாம்.
ஹாங்காங்கின் சீனப்பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஊகாம்ஸாங் (Woo-Kam-Sang) என்பவர் தனது ஆய்வின் மூலம் இந்த உண்மையைக் கண்டுபிடித்துள்ளார்.
சரி. சீனர்கள் அப்படி என்னதான் சாப்பிடுகிறார்கள்?
பால் சேர்க்காத கிரீன் டீ யை நாலைந்து தடவை தினமும் அருந்துகின்றனர். நீராவியில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் சில நேரங்களில் காய்கறிகளை சிறிய அளவில் எண்ணெயில் வறுத்தும் சாப்பிடுகின்றனர்.
சோயா பீன்ஸ், தயிரையும் நிறையச் சேர்த்துக் கொள்கின்றனர்.
மேற்கத்திய பாணி உணவு முறையில் அவ்வப்போது கோழி வறுவல் அல்லது மீன் வறுவல் ஒன்றிரண்டு துண்டுகள் மட்டும் சாப்பிடுகின்றனர்.
காலையில் முட்டை ஆம்லட் அல்லது கொத்துக்கறி சேர்த்துக் கொள்கின்றனர். இதில், இஞ்சி, வெள்ளைப் பூண்டு உட்பட மசாலா வகைகள் சேர்த்துவிடுகின்றனர். இதுவே காலை நேரத்திற்கும் பகல் உணவிற்கும் எற்ற ஒரே உணவாகும்.
மற்ற நேரமெல்லாம் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுடன் சோயா மற்றும தயிர் சேர்த்த சாதம் ஒரு முறையும், பச்சையான காய்கறிகளை ஒரு முறையும் சாப்பிடுகின்றனர்.
இவர்கள் அடிக்கடி விரும்பியும் போற்றியும் குடிப்பது கிரீன் டீதான். இது முதுமை அடைவதை தடுக்கும் தேநீர். மேலும் இந்தத் தேநீரில் இளமையை நீடிப்பதுடன் இதயத்துக்குப் பாதுகாப்பையும் வழங்கும் பாலிபெனால் என்ற சத்துப் பொருள் இருக்கிறது.
மேற்கண்ட அனைத்து உண்மைகளும் உலகிலேயே இதய நோயாளிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள பான்யு என்ற சீனக்கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களாகும். சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் இந்தக் கிராமம் இருக்கிறது.
சீனர்கள் ஹாங்காங், சிட்னி, சான்பிரான்ஸிஸ்கோ ஆகிய நகர்களில் பெருமளவில் வாழ்கின்றனர். பத்து ஆண்டுகள் மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றிய சீனர்களை அல்ட்ரா சவுண்டு மூலம் பரிசோதித்ததில் இவர்களின் இரத்தக்குழாய்களில் 5 இல் ஒரு பங்கு என்ற விதத்தில் தடிப்பாகிவிட்டது தெரிந்தது. எனவே, இவர்கள் இதயநோய் அபாயத்தில் உள்ளனர்.
வெளிநாடு சென்று கடந்த பத்தாண்டுகளுக்குப்பிறகு சீனா திரும்பிய 417 பேர் இதய நோய் அபாயத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதே டாக்டர் ஊ சீனர்களின் மெயின்லாண்ட் பகுதி மக்கள் தாங்கள் சாப்பிடும் உணவில் பாதி இறைச்சியாகவும், மிகச்சிறிய அளவிலேயே பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் சாப்பிடுவதையும் கண்டு பிடித்துள்ளார்.
“சீனர்கள் தங்களின் மரபு வழி உணவுத் திட்டத்தையே பின்பற்ற வேண்டும். சோயா தயிரில் உள்ள லெசித்தின் என்னும் நார்ப்பொருள் உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் இதய நோய் அபாயம் இல்லை. உடலும் கொழுத்த சரீரமாக உருவாகாது” என்கிறார்.
ஹாங்காங்கில் வறுத்த கோழிக்கறி என்ற மேற்கத்திய உணவால் இங்குள்ள சீனர்கள் குண்டாக உள்ளனர். செல்வச் செழிப்பான சிங்கப்பூரில் வாழும் சீன இளைஞர்கள் 25 வயதுக்குள்ளேயே இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, இதய நோய்கள் அபாயத்தில் உள்ளனர் என்கிறார் டாக்டர் ஊ.
கிரீன் டீக்கும் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுக்கும் நீங்களும் முக்கியத்துவம் கொடுங்கள். உலகின் மிகச்சிறந்த இந்த உணவால் ஆரோக்கியம் தொடர்வது உறுதி. உலக சுகாதார நிறுவனம் சிபாரிசு செய்துள்ள உணவுமுறை இது என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் 2000ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்.
குளிர்ந்த நீரில் குளியுங்கள்!
இந்தக் கோளில் 70% தண்ணீர் தான் மூன்று பக்கமும் சுற்றிப் பரவியுள்ளது. அதே போல் மனித உடலும் 75% தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது. எனவே, உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் குளியுங்கள்.
இதற்காகப் பத்து அங்குல ஆழமுள்ள தொட்டியில், 16 செல்சியஸ் மட்டுமே வெப்பம் உள்ள அதாவது ‘ஜில்’ தண்ணீர் நிரப்பிக் கொண்ட தொட்டிக்குள் உட்காருங்கள். ஒரு நிமிடம் தண்ணீருக்குள் முழு உடலும் இருக்கும் விதத்தில் மூழ்கிக் கொண்டு உடலை அங்கங்கே தேய்த்து விடவும். ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது. குளித்ததும் உடலை நன்கு துடைத்துவிடுங்கள். இதனால் அடுத்த பல மணிநேரம் சுறுசுறுப்பாகப் பணிபுரியலாம். வெளியூர் சென்று திரும்பியதும் உடன் அலுவலகம் செல்ல வேண்டும் எனில் பிரிட்ஜில் உள்ள ஐஸ்கட்டிகளை தொட்டியில் போட்டு உடன் குளிர்ந்த நீராக மாற்றி இந்த சக்திக் குளியலை எடுக்கலாம்.
வாய் நாற்றமா?
தோலில் வறட்சி மற்றும் வாய் நாற்றம் உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு நாளாவது வெண்டைக்காய்ப் பச்சடியை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன்கள் கிட்டும். அமெரிக்கர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து வெண்டைக்காய்களை அதிகம் வரவழைத்துச் சாப்பிடுகின்றனர்.


Engr.Sulthan

Monday, June 4, 2012

HEART AND DIABETICS

HEART AND DIABETICS
A Power Point Show from Engr.Sulthan
http://sulthanjune.webs.com/heart.pps
Click the above link
Save the file in your desktop
Then press Show button...

chelation therapy for heart

chelation therapy for heart
chelation therapy click here
Click the above link
Save the file in your desktop
Then press Show button...

Sunday, June 3, 2012

மார்பகப் புற்று நோய்

வயது வந்த ஒவ்வொருப் பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் அடங்கிய மின் நூல்.
"மார்பகப் புற்று நோய்"(முதன்முறையாக தமிழில்)
மின் நூல் ஆக்கம்:
Engr.Sulthan

மரணிக்கும் போதும்,மண்ணறையிலும் நிகழ்பவைகள்

மின் நூலில் காணுங்கள்:

மரம் வளர்ப்போம் வாங்க!

மரம் வளர்ப்போம் வாங்க!
மின் நூலில் காண்க....

ஒலிம்பிக்-ஒரு தலைமுறைக்கான உத்வேகம்!

ஒலிம்பிக்-ஒரு தலைமுறைக்கான உத்வேகம்!

மிரட்டும் லண்டன்!


மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முதல் நகரம் என்பது லண்டனுக்குக் கிடைக்கவிருக்கும் கௌரவம். மெக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கள் கூடும் இடமாக லண்டன் ஒலிம்பிக் சாதனை படைக்கும் என்பது ஒலிம்பிக் கமிட்டியின் எதிர்பார்ப்பு. 'ஒரு தலைமுறைக்கே உத்வேகம் கொடு’ (Inspire a Generation) - இதுதான் லண்டன் ஒலிம்பிக்கின் பஞ்ச் வாசகம்! 2005-ம் ஆண்டு '2012 ஒலிம்பிக் போட்டிகள்’ நடத்துவதற்கு லண்டன் தேர்வு செய்யப்பட்ட மறுநாளே, லண்டனின் பாதாள ரயில்களில் குண்டுகள் வெடித்தன. அதிர்ந்துபோன இங்கிலாந்து அரசு ஒலிம்பிக் பாதுகாப்புச் செலவுகளுக்கு மட்டுமே பல்லாயிரம் கோடிகளைச் செலவழித்துவருகிறது.ஒலிம்பிக் பார்வையாளர்களைக் கூடுதலாக ஈர்க்க, உலக அதிசய ஈஃபிள் கோபுரம்போலவே லண்டனில் ஒரு வித்தியாசமான கோபுரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். 376 அடி உயரத்தில் சுருள் வடிவத்தில் அமைந்திருக்கும் இதற்கு 'ஒலிம்பிக் கோபுரம்’ என்றே பெயர். இந்திய ஓவியர் அனீஷ் கபூர் வடிவமைத்திருக்கிறார். 455 வளைவான சுருள் படிக்கட்டுகளுடன் இருக்கும் இந்தக் கோபுரத் துக்கு உள்ளே உணவகங்கள் உண்டு. மைதானங்களின் அருகி லேயே இருக்கும் இந்தக் கோபுரங்களில் ஏறி ஒலிம்பிக் போட்டி களை ரசித்தபடியே உணவருந்தலாம்.

ஒலிம்பிக் போட்டிகளின் பிரமாண்ட தொடக்க விழா மற்றும் இறுதி விழா நிகழ்ச்சிகளை அரங்கேற்றும் பொறுப்பு 'ஸ்லம் டாக் மில்லியனர்’ பட இயக்குநர் டேனி பாய்ல் தலைமையிலான குழுவினரின் பொறுப்பு. ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ டேனியல் க்ரேய்க் நடிக்கும் ஐந்து நிமிட ஸ்டேஜ் ஷோ, ஷேக்ஸ்பியரின் 'தி டெம்பஸ்ட்’ நாடகத்தை மையமாகக்கொண்டு இசை நிகழ்ச்சிகள், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட உலகின் பிரபல இசைஞர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் என கலர்ஃபுல் மேளாவாக நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகளை உலகம் முழுக்க 100 கோடிப் பேர் கண்டு ரசிப்பார்கள் என்பது தற்போதைய கணக்கு. தொடக்க விழாவுக்கான ஒரு டிக்கெட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 1.7 லட்சம் ரூபாய்!லண்டனின் 200 பழமையான பாரம்பரியமிக்க கட்டடங்களை இடித்து வீரர்கள் தங்குவதற்கான விளையாட்டுக் கிராமத்தை அமைத்திருக்கிறார்கள். மைதானங்களை அதிகபட்சம் 20 நிமிடங்களில் வீரர்களை அடைந்துவிடும் வசதிக்காகவே பாரம்பரியக் கட்டடங்களைக்கூடத் தியாகம் செய்திருக்கிறது லண்டன்!விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், பத்திரிகை யாளர்கள் என ஒலிம்பிக் போட்டிகள் சம்பந்தமாக லண்டனுக்குள் வரும் எவரும் இங்கிலாந்து குடிமக்களை 'கரெக்ட்’ செய்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற உத்தரவாதம் பெற்ற பிறகே, விசா கொடுத்திருக்கிறது இங்கிலாந்து அரசு. இதற்கு முந்தைய ஒலிம்பிக் போட்டிகளுக்கு வந்த பலரும் காதல் வலையில் சிக்கியோ அல்லது விரித்தோ இங்கிலாந்தின் மருமகன்/மருமகள் ஆக நிரந்தரக் குடியுரிமை பெற்று மக்கள் தொகையை ஏகமாக அதிகரித்துவிட்டார்கள் என்பதால்தான் இந்த உஷார் உத்தரவாத நடவடிக்கை!1928 முதல் ஒலிம்பிக் போட்டிகளின் ஸ்பான்சராக இருக்கும் கோக் நிறுவனம் 2012 ஒலிம்பிக்கில் 2.30 கோடி பாட்டில்கள், டின்களை விற்பனை செய்யத் திட்டமிட்டு இருக்கிறது. ஒலிம்பிக் மைதானத்தில் பணிபுரியும் ஒரு கோக் நிறுவன ஊழியர் தினமும் 100 கேஸ் பாட்டில்களைச் சுமந்து செல்ல வேண்டியிருக்குமாம்.

விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் ஒலிம்பிக் கிராமத்துக்கு அருகே அமைந்திருக்கும் வீடுகளின் மொட்டை மாடிகளில் ஏவுகணைகளை நிறுத்திவைத்திருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் லண்டனை வளைய வந்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு 500 அடிக்கும் ஒரு காவல் நிலையம், கழிப்பறைகளைத் தவிர மற்ற அனைத்து இடங் களிலும் ரகசியக் கண்காணிப்பு கேமரா என உச்சகட்ட உதறலில் இருக் கிறது லண்டன் பாதுகாப்புப் படை!

இந்த ஒலிம்பிக்கின் உயர்வெளிச்சத் துளிகள்...


2008 ஒலிம்பிக்கில் அமெரிக்கா 110 பதக்கங்களுடன் முதல் இடம் பிடிக்க, ஒலிம்பிக்கை நடத்திய சீனா 100 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்தது. ரஷ்யா மூன்றாம் இடம். இங்கிலாந்துக்கு நான்காவது இடம். இம் முறை போட்டிகள் லண்டனில் நடப்பதால், அமெரிக்காவுக்கு இங்கிலாந்து கடும் நெருக்கடி கொடுக்கலாம்!

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களை வேட்டையாடிய அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் இந்த முறையும் செம ஃபார்மில் இருக்கிறார். ஒலிம்பிக் பந்தயங்களில் மட்டுமே இது வரை 16 பதக்கங்களை வென்றிருக்கும் ஃபெல்ப்ஸ், லண்டன் ஒலிம்பிக்கில் 3 பதக்கங்கள் வென்றாலே, ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்றவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்!

100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் ஒலிம்பிக் சாதனை படைத்திருப்பவரும், உலக சாம்பியனுமான உசேன் போல்ட் தான் லண்டன் ஒலிம்பிக்கின் மாஸ் ஹீரோ. இவர் பங்கேற்கும் தடகளப் போட்டிகளைக் காணத்தான் லட்சக்கணக்கான மக்களால் லண்டன் களைகட்டும் என்கிறார்கள். 100 மீட்டரை 9.58 விநாடிகளிலும், 200 மீட்டரை 19.19 விநாடிகளிலும் கடந்து சாதனை படைத்த உசேன், இந்த ஒலிம்பிக்கில் 100, 200 மீட்டர்களை தலா 9.54, 19.00 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைப்பேன் என்கிறார்!மலேசியாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை நுர் சுர்யானி டெய்பி எட்டு மாதக் கர்ப்பிணியாகப் போட்டியில் கலந்துகொள்வார். ''15 நிமிடங்கள்தான் போட்டி நடக்கும். அப்போ மட்டும் வயித்துக்குள் ஆடாம, அசையாம இருக்கணும்னு பாப்பாகிட்ட சொல்லியிருக்கேன்!'' என்கிறார் நுர் சுர்யானி வயிற்றை மென்மையாகத் தடவிக்கொடுத்துக்கொண்டே. ஜப்பானின் வில் வித்தை வீரர் ஹிரோஷிதான் இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் மிக மூத்த வீரர். அவருக்கு வயது 70. இந்த ஒலிம்பிக்கிலேயே மிகவும் உயரம் குறைந்த பெண்ணாகக் கலந்துகொள்ளும் சீனாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லி லுவின் உயரம் 1.36 மீட்டர். இவர் 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் என்பது கூடுதல் தகவல்!

நம்பிக்கை இந்தியர்கள்!


கிருஷ்ண பூனியா, வட்டு எறிதல்: 2010 டெல்லி காமென் வெல்த் போட்டியில் வட்டு எறிதலில் தங்கம் வென்றவர். உலக சாம்பியன் ஆஸ்திரேலிய வீராங்கனை டேனி சாமுவேல்ஸுக்கே சவால்விட்ட கிருஷ்ண பூனியா, கடந்த இரண்டு வருடங்களாக அமெரிக்காவில் தீவிரப் பயிற்சியில் இருக்கிறார். 'தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் என் மூலம் கிடைக்கும்!’ என்பது கிருஷ்ண பூனியாவின் சபதம்.

சாய்னா நெய்வால், பேட்மிட்டன்: 13 முறை உலக சாம்பியனான சீனாவின் ஸியாங் குவாபோ, 'சாய்னா தான் சீன வீராங்கனைகளுக்கு ஒரே அச்சுறுத்தல்!’ என்று சொல்லியிருப்பது அந்த இந்தியாவின் பதக்க நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது!

மேரி கோம், குத்துச் சண்டை: முதல்முறையாக ஒலிம்பிக்கில் இணைந்திருக்கும் பெண்கள் குத்துச்சண்டையில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு!

'சுட்டேபுடுவோம்’ கேங்க்: துப்பாக்கி சுடுதல் பிரிவில் மொத்தம் 11 இந்திய வீரர்கள் ஒலிம்பிக் வேட்டையில் இருக்கிறார்கள். 2008 ஒலிம்பிக்கில் பதக்கம் தட்டிய அபினவ் பிந்த்ரா, ககன் நரங், ரஞ்சன் சிங் சோதி, மனவ்ஜித் சிங் சோதி என ஆண்கள் பிரிவிலும் ஹீனா, அன்னு ராஜ் என பெண்கள் பிரிவிலும் வலுவான ப்ளேயர்கள் இருப்பதால் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் பதக்கம் உத்தரவாதம்!

விஜேந்தர் சிங், குத்துச்சண்டை: 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர், டெல்லி காமென் வெல்த் போட்டியில் அரையிறுதியிலேயே தோல்வியடைந்தார். கடும் விமர்சனத்துக்கு உள்ளான விஜேந்தர், அதன் பிறகு தனது பயிற்சி நேரத்தை நாளன்றுக்கு 10 மணி நேரமாக அதிகரித்தார். கஜகஸ்தான் ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியில் வென்று கடைசித் தருணத்தில் ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்றிருக்கிறார்.

தீபிகா குமாரி, வில்வித்தை: கடந்த மாதம் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்று உலகின் நம்பன் ஒன் வீராங்கனையாக உயர்ந்துஇருக்கும் தீபிகா குமாரி, நிச்சயம் தங்கம் தட்டுவார் என்பது பாசிட்டிவ் எதிர்பார்ப்பு!
 
விகடன்
Engr.Sulthan

தேங்காய் தேகத்துக்கு நல்லது!

தேங்காய் தேகத்துக்கு நல்லது!

தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

“தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.

தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து.

சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென் னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.

தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான்.

தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.

தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் :

ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை. தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?
தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு.

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள்:
தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி?

மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆண்மைப் பெருக்கி : முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக..... குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.

இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

(மாற்று மருத்துவம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)
Engr.Sulthan

டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி...


டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி...
டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்
டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.
ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.
அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும்.
(சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)
வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும். இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.
இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.
இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.(அடையனும்..ஹூம்....நமக்கு இவ்வளவு அறிவு இருப்பதை தெரிந்து இதிலிருந்தும் தப்பிக்க ஒருவேளை பாழாய்ப் போன கொசுக்கள் புதிய யுக்தி எதையாவது கடைப் பிடிக்க ஆரம்பித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவ்வளவு தான் இப்போதே சொல்லிப்புட்டேன்.)
நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
இதன் பலனை 4x5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.
எப்படியோ இந்த வழியிலாவது கொசுக்கள் ஒழிந்தால் சரி தான். இந்த எமன்களிடமிருந்து நம்மை காப்பாற்ற இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும் என இறையை வேண்டும் உங்கள்,
Engr.Sulthan.



டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்
'ஏடிஸ்' தென் மாவட்ட மக்களை அதிரவைத்த அதிபயங்கர கொசு! தற்போது திருப்பூர், கோவையிலும் தனது கைவரிசையை நீட்டியிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோரை பாரபட்சமில்லாமல் கடித்து டெங்கு காய்ச்சலால் படுக்க வைத்திருக்கும் பயங்கர 'வியாதி'க்கான காரணகர்த்தாதான் இந்த ஏடிஸ் கொசு!
ஏடிஸ் கொசு எப்படி பிறக்கிறது? இது கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன? வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தடுப்பது எப்படி? என்பது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார் 'மாலை மலர்' நிருபரிடம் கூறியதாவது:-
வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது. தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.
இந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர்.
ஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.
இந்த நோய் எளிதில் குணப்படுத்த கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம் உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும். இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும்.
அதனால் இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மூலமாகவும் வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில் கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவ தன் மூலமும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல் தடுக்கலாம்.
கோவை, திருப்பூரில் தென் மாவட்டங்களை போல டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கூட இங்கு குறைவுதான். இருந்தாலும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட சுகாதாரத்துறை போத்தனூர் உள்பட மாவட்டம் முழுவதும் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. மாநகர பகுதியிலும் மாநகராட்சி சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. புகை மூலம் கொசுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் சகாதாரமாக, விழிப்புணர்வோடு இருந்தால் டெங்கு கொசுவை ஒழித்து காய்ச்சல் வராமல் தற்காத்து கொள்ளலாம்.
இவ்வாறு செந்தில்குமார் கூறினார்

அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு!

அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு!

இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் படைத்தது. கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு சீசன் தொடங்கிவிடும். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. நுங்கு பனை மரம் தரும் அரிய பொருளாகும். இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

குளுமை தரும் நுங்கு

கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

துவர்ப்பு சுவை

பனங்காயை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

அம்மைநோய்

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.

பதநீரும் நுங்கும்

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும்.

வேர்குரு போக்கும் நுங்கு

கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.
நன்றி:தமிழ் போல்ட்ஸ்கை
Engr.Sulthan

The Top Ten Of Everything