Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, December 21, 2013

Power of Nanotechnology


கத்தரிக்காய்


குறைந்த கலோரியும் நிறைய சத்துக்களும் அடங்கியது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. கத்தரிக்காயின் தாயகம் இந்தியாதான். ஆண்டு முழுவதும் விளையக்கூடியது. உலகம் முழுவதுமுள்ள வெப்பமண்டல பகுதிகளில் கத்தரிக்காய் விளைகிறது. பச்சை, வெள்ளை, அடர் நீலம் என பல நிறங்களிலும், முட்டை வடிவம், நீள வடிவம், உருண்டை வடிவம் என பல வடிவங்களிலும் கத்தரி விளைகிறது.

Friday, December 20, 2013

கூந்தலுக்கு நலம் தரும் தேங்காய் பால்


பெண்களின் அழகை தீர்மானிக்க கூந்தலும் ஒரு மிக முக்கிய காரணியாக விளங்குகிறது. அழகான கூந்தலை பெறுவதற்கு கூந்தல் பராமரிப்புகளை பற்றி பெண்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கையான முறையில் அழகிய கூந்தலை பெறுவதற்கு நீங்கள் சில வீட்டு சிகிச்சைகளை கையாளலாம்.  கூந்தல் பிரச்சனைக்கு தீர்வாக பல இயற்கை மூலப்பொருட்கள் உள்ளது.

இயற்கை தரும் ஆரோக்கியம்



தொண்டைப்புண் குறைய: சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.
 
தலைவலி குறைய: கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.
 
மூட்டு வலிகுறைய: கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலிஉள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டுவலி குறையும்.

முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்தும், மாங்காயை தட்டிப்பார்த்தும் வாங்கவும்.


கோவைக்காய்: பொரியல் செய்யப் பயன்படுத்தும் கோவைக்காய்களை முழுக்க பச்சை நிறத்தில் இருந்தால் மட்டும் வாங்குங்கள். கோவைக்காயில் ஆங்காங்கே லேசாக சிவப்பு இருந்தால் அது உடனே பழுத்துவிடும். ருசியும் குறைவாகத்தான் இருக்கும்.
முருங்கைக்காய்: முருங்கைக்காயை சற்றே முறுக்கிப் பார்த்து வாங்க வேண்டும். முறுக்கும்போது நன்றாக வளைந்து கொடுத்தால் காய் முற்றவில்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

பனியில் இருந்து பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்.

மழையை தாங்கி கொள்ளலாம் அதுவும் எலும்பை ஊடுருவும் கார்த்திகை, மார்கழிப் பனியை  கண்டால் பயப்படுவோம். மழையும் குளிரும் வாட்டும் இந்த காலக்கட்டங்களில் காய்ச்சலும் சளித் தொந்தரவும் எளிதில் வந்துவிடும்.உதடுகளில்  வெடிப்பு, கை, கால்களில் வறட்சி ஏற்படும். இதற்காக நாம் கவலைப்பட வேண்டாம். நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் பனியும்  குளிரும் நம்மை எதுவும் செய்யாது.
ஒரே சீரான தட்ப வெப்பநிலை இல்லாமல் வெப்பமும் பனியும் கலந்து இருக்கும் நாட்களில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். பனிக்காலத்தில்  ஏ டிபிக்கல் வகை வைரஸ் அதிகமாக தாக்கும். ht2315இந்த வைரஸ் கிருமிகள் தாக்கினால் 10 முதல் 13 நாட்கள் வரை வலி நீடிக்கும். சுற்றுச்சூழல்  மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து வருவதுதான் இதற்குக் காரணம். இந்த வைரஸ்  குழந்தைகளையும், வயதானவர்களையும்தான் அதிகம் தாக்குகிறது.
இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் காரத்தைத் தவிர்த்துவிட வேண்டும். இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசி கஞ்சி, பிரெட்  ஆகியவற்றைச் சாப்பிடலாம். சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப்பிடலாம்.
புளிப்புச் சுவை நிறைந்த பழங்களைக் கட்டாயம் தவிர்க்க  வேண்டும்.வெயில் காலங்களில் நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் இந்தப் பழங்கள், குளிர் காலங்களில் ஒத்துக்கொள்ளாது. காரணம், தட்பவெப்ப  நிலைக்கு ஏற்றமாதிரி நம் உடல் செயல்பாடுகள் மாறுவதுதான்.
வெயில் காலங்களில் நமக்கு அதிகமாக வியர்க்கும். அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரைட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து  வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக அமிலச் சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் மற்றும் மோர், பானகம் போன்ற புளிப்புச்சுவை நிறைந்த  பானங்களைப் பருகுவோம்.
குளிர் காலத்தில் அதிகமாக வியர்க்காத நிலையில் இவற்றைக் குடிக்கும்போது, நம் உடலில் அதிக அளவில் அமிலச் சத்து  சேர்ந்து, சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். முக்கியமாக பச்சை திராட்சையையும், பச்சை வாழைப்பழத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பனிக்காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். குளிக்க வேண்டும்.  வெந்நீரில் கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து,
அந்த தண்ணீரைக் குடித்தால் சளி பிடிக்காது, தொண்டை  வலியும் வராது. துளசி கிடைக்கவில்லை என்றால் கற்பூரவல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்தும் குடிக்கலாம். எந்தக் கீரையும்  கிடைக்கவில்லையென்றால் இரண்டு வெற்றிலையை மென்று சாப்பிடலாம்.
கற்பூரவல்லி கஷாயம் குடிக்கப் பிடிக்கவில்லையென்றால் அதில் பஜ்ஜி, மோர்க் குழம்பு செய்து சாப்பிடலாம்.  குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு  முன்பு காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தைலம் தேய்த்தால் சளி பிடிக்காது. எந்த உணவாக இருந்தாலும் சுடச்சுட சாப்பிடத் தர வேண்டும்.  கடுகுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து அரைத்து, தினமும் பூசி வர, சருமம் மென்மையாகி, பளபளக்கும். ஒரு கரண்டி ஆலிவ் ஆயிலை ஒரு  பக்கெட் நீரில் கலந்து குளிக்கலாம்.
சருமம் மிகவும் வறண்டிருந்தால், ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி, மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம். சிறிது பஞ்சை காதில்  வைத்துக் கொண்டு சென்றாலும், குளிர் காற்றிலிருந்து தப்பிக்கலாம். குளிர்ச்சியான பானங்களை அருந்துவதை தவிர்க்கவும். சூப் அருந்தலாம்.
குழந்தைகளுக்கு குல்லா, ஸ்வெட்டர், சாக்ஸ் அணிவித்து, வெளியே அழைத்துச் செல்வதும் அவசியம். எண்ணெய் மற்றும் மசாலா ஐட்டங்கள் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும் காலையில், துளசி இலை நான்கை தண்ணீரில் ஊற  வைத்து அருந்துவது நல்லது.
குளிக்கும் போது சோப்பு பயன்படுத்தாமல், கடலை மாவு அல்லது பயத்தம் பருப்பு மாவு தேய்த்து குளிக்கலாம். தொண்டை வலி, கமறல், இருமல்  போன்றவற்றுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும், ஒரு சிறு துண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும் போது, அரை தேக்கரண்டி  மிளகுப் பொடி போட்டு, அடுப்பை அணைத்து. சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டு கொண்டால் இதமாக இருக்கும்; இருமலும் அடங்கும்.
பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்
பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில்  நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது  நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஷ் கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும்.  இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும். வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து  அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும்.
விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில்  வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து  பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.
உதடுகளை பாதுகாப்பது எப்படி
சோற்றுக் கற்றாழை சாரையோ அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லையோ உதடுகளில் தடவினால் உதடு ஈரப்பதத்துடன் வெடிக்காமல்  இருக்கும். பொதுவாக நாம் குளிர் காலங்களில் தண்ணீர் குடிப்பதில்லை.
உடம்பில் தண்ணீர் சத்து குறைந்தாலும் உதடுகள் வெடிக்கும். அதனால் குளிர்  காலங்களில் தாகம் எடுக்கவில்லையென்றாலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறையினாலும் உதட்டில் தோல்உரிந்து,  வெடித்துப் புண்ணாகும். அதனால் சத்துள்ள பழங்கள்,காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெந்தயத்தில் இருப்பது என்ன..?..நீரிழிவுக்காரர்களுக்கு மிக நல்லது..

அஞ்சறைப் பெட்டியின் அதிசயம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு நமது கைக்கெட்டிய தூரத்தில், எப்போதும் உதவக் காத்திருக்கிற அற்புத மருந்து  வெந்தயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது வெந்தயம். சாம்பாரோ, வத்தக்குழம்போ, புளிக்குழம்போ… எதுவானாலும்,  தாளிக்கும்போது சிறிது வெந்தயம் தூக்கலாகச் சேர்த்துப் பாருங்கள். முழுதாக வெந்தயம் சாப்பிடப் பிடிக்காதவர்கள், கொதித்து இறக்கும் முன்  வெந்தயப் பொடியைத் தூவிப் பாருங்கள்… உங்கள் சமையலறை வாசம், தெருக்கோடி வரை வீசும். மணத்தில் மட்டுமின்றி, குணத்திலும் மிகச்  சிறந்தது வெந்தயம்!

ht2299
வெந்தயத்தில் என்ன இருக்கிறது? (100 கிராமில்)

Homemade Light Bulb.


ஏழைகளோடு எழுப்புவாய் இறைவா!


வயிறார உண்ண உணவில்லை. விதவிதமாக உடுத்த நல்ல ஆடைகள் இல்லை. ஆனாலும் ராஜா அவர்! ஏழையாகவே இறப்பதற்கு வித்தியாசமான பிரார்த்தனை செய்தவர்! வெறும் தலையணை, மண்பாத்திரங்களை மகளுக்குச் சீதனமாகக் கொடுத்தவர்! யார் அவர்? அவர்தான் நபிகள் நாயகம்.
நபிகள் நாயகம் தமது வாழ்வை மனித இனத்துக்கு ஒரு முன்மாதிரியாக விட்டுச் சென்றவர்கள். பசிப்பிணி, துயரங்கள் இவற்றை எல்லாம் சுயமாக அனுபவித்தவர்கள்.

மாமரம்


எமது கிராமங்களில் அக்காலத்தில் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தது. மாமரம் போன்ற சில வகை மரங்கள் நன்றாக காய்க்காது போனால் தும்புத்தடியினால் மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து தடவுவார்கள், மாமரம் பூத்துக் குலுங்கும் காலத்தில் தும்புத் தடியின் தும்புப் பகுதியினால் பூந்துணர் உள்ள பகுதிகளை மெதுவாக தட்டித் தட்டி விடுவர்.

மாமரத்துக்கு ரோஷம் வந்து விடுமென்றும் அதன்பின்னர் மாமரம் நன்கு காய்க்கத் தொடங்குமென் றும் அன்றைய கிராமத்து பாமர மக்கள் நம்பினார்கள்.

"நுரை‌யீரலு‌க்கு உக‌ந்த ‌பீ‌ன்‌ஸ்"



நமது உடலில் உள்ள முக்கியமான பாகங்களில் நுரையீரலும் ஒன்று. இதில் உள்ள மூச்சுப் பைகளே சுவாசத்தில் பங்கு வகிக்கின்றன. நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் உயிருக்கு உலைவைக்கும் அளவுக்கு ஆபத்தானவை.

குறிப்பாக புகை பிடிக்கும் பழக்கமும், சுற்றுச்சூழல் மாசுகளும் நுரையீரலை அதிகமாக பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் நுரையீரல் புற்று நோய் மற்றும் நெஞ்சு சளி, சுவாசக் கோளாறுகள், மூச்சுத் திணறல் போன்ற வியாதிகள் ஏற்படுகின்றன.

பச்சைப் பயறு


பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.

இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

கிராம்பு கஷாயம்


தொண்டைக்கு இதமான
கிராம்பு கஷாயம்

செய்முறை: 10 கிராம்புகளைப் பொடித்துக்கொள்ளவும். நான்கு அல்லது ஐந்து கிராம்புடன் பொடித்த கிராம்புத் தூளை சேர்த்து மூன்று கப் தண்ணீர் விடவும். அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து ஒரு கப்பாகச் சுண்டியதும், வடிகட்டி பனை வெல்லத்தை சேர்க்கவும். கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பருகலாம். 

ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை

அவசியம் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும்.

எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.

பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.


சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.

நோய் எதிர்ப்பு சக்தியும் உடல் ஆரோக்கியமும்


காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒத்துக்கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.

வைட்டமின் ஏ, சி, இ:

வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன் மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

Thursday, December 19, 2013

7 Simple Science Tricks With Household Items

These are some simple to do science tricks that I found online from various sources. I took the coolest ones and put them in this video!

Wednesday, December 18, 2013

தங்கம் கடந்து வந்த பாதை


''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!''


சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர்

லஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது 'சட்டப் பஞ்சாயத்து’ என்ற  இயக்கம்.
 இந்த அமைப்புக்கான தொலைபேசி சேவை தொடக்க விழா சென்னை, தி.நகரில் நடந்தது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ இளங்கோ விழாவில் பேசும்போது, ''ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், கேஸ் இணைப்பு, மின் இணைப்பு, பட்டா மாற்றம், கல்விக் கடன் போன்ற அரசு சேவைகளை எப்படி லஞ்சம் தராமல் பெறுவது என்ற வழிகாட்டுதலை எங்கள் சேவை மையம் வழங்கும்!'' என்றார்.

10 Amazing Illusions


10 Amazing Science Experiments you can do with Eggs


Coca Cola For Rust Removal...what????



This is insane. We were drinking coca cola all this while and this video says...If you need to remove rust from your car’s bumper, don’t buy expensive cleaners – use Coca-Cola instead!

அழகிய பூக்களின் மருத்துவக் குணங்கள்





மலர்கள் நிறமும் மணமும் நிறைந்தவை மட்டும் அல்ல. சில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும் உள்ளன. இதோ அவ்வாறன மலர்களும் அதில் உள்ள குணங்களும் எவை என பார்ப்போம்.

செம்பருத்திப்பூ : இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்புவலியால் அவதிப்படுபவர்கள் செம்பருத்திப்பூக்களை தண்ணீரில் இட்டு காய்ச்சி காலையும் மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும். குழந்தைகளுக்கு இப்பூவை சிறிது சுடுநீரில் தலையில் தேய்த்துக் குளிப்பாட்டி வந்தால் தலையில் உள்ள அழுக்குகள் நீங்கி முடி நன்கு வளரும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.

வேப்பம் பட்டையின் மருத்துவப் பயன்


முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

ஆந்தைகளுக்கு ஆபத்து


எங்கள் வீட்டிற்கு முன்புறமுள்ள புங்கை மரத்துக்கு ஆந்தை ஜோடி ஒன்று வர ஆரம்பித்துள்ளது. மாலை இருள் கவிழும் நேரத்தில் அவை குரல் கொடுக்கத் தொடங்கும். பண்டிட் ஹரிபிரசாத் செளராஸியா கச்சேரி ஆரம்பிக்கும் முன் புல்லாங்குழலை ஊதிஊதிப் பார்ப்பது போன்ற மனதைக் கவரும் ஒலி. டார்ச் ஒளியைப் பொருட்படுத்தாமல் இவை மாறிமாறிக் குரலெழுப்பும் அழகை, நாங்கள் அருகிலிருந்து பார்க்க முடிகின்றது. நம் நாட்டிலுள்ள ஆந்தை வகைகளில் மிகச் சிறியது இது (Scops owl), புல்புல் அளவுதானிருக்கும்.

வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா? - இதப் படிங்க மொதல்ல!


‘சிங்கப்பூரில் சித்தாள் வேலைக்கு ஆட்கள் தேவை.. சவுதியில் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை..’ கண்ணைப் பறிக்கும் கலரில் ஒட்டப்படும் இந்த போஸ்டர்களை நம்பி இன்னமும் பலபேர் போலி ஏஜென்ட்களிடம் ஏமாந்து கொண்டி ருக்கிறார்கள். இப்படி எல்லாம் இஷ்டத் துக்கு போஸ்டர் ஒட்டி, வெளிநாட்டுக்கு ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் எடுப் பவர்கள் குடிபெயர்வோர் பாதுகாவலரி டம் (Protector Of Emigrants) லைசென்ஸ் பெறவேண்டும். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா இந்த நான்கு மாநிலங் களுக்குமான குடிபெயர்வோர் பாதுகாவ லர் (பி.ஓ.இ) அலுவலகம் சென்னையில் இருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல் படும் இந்த அலுவலகத்தில் ஐ.ஏ.ஏஸ். அதிகாரி பி.ஓ.இ-யாக இருக்கிறார்.

ஒரு முட்டை உற்பத்திக்கு தேவை 196 லிட்டர் 'மறை நீர்'!


பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

Sunday, December 15, 2013

பிரியாணியின் வரலாறு தெரியுமா உங்களுக்கு ?



நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணியின் வரலாறு உங்களுக்கு தெரியுமா ?

பேரரசர் அக்பர் ஒரு உணவு பிரியர், அவருக்கு எப்பொழுதும் உணவு சுவையாக இருக்க வேண்டும். உணவு சுவையாக இல்லையெனில் சமையல் காரர்களை ரொம்பவும் கடிந்து கொள்வார்.

82 வயது பாட்டியின் வயிற்றில் 40 வயது 'கல்' குழந்தை

கொலம்பிகயாவைச் சேர்ந்த 82 வயது மூதாட்டியின் வயிற்றில் இருந்து 40 வயதான கல் குழந்தை வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவைச் சேர்ந்த மூதாட்டி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வயிற்று வலிக்கான காரணத்தை கண்டறிய எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அப்போது மூதாட்டியின் அடி வயிற்றுப் பகுதியில் குழந்தை வடிவில் ஒரு கட்டி இருந்ததை கண்டறிந்தனர். அதனை ஆப்ரேசன் மூலம் அகற்றினர்.

மலையைப் பாதுகாப்போமா; பறிகொடுப்போமா?


கடந்த நவம்பர் மாதம் 13-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், கஸ்தூரிரங்கன் தலைமையிலான, மேற்குத்தொடர்ச்சி மலைகள் தொடர்பான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளைக் கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தவுடன், கேரளத்தின் எதிர்க் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் மலைப்பகுதியை ஒட்டிய மக்களிடம் தாங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என்ற அச்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழகமும் மோடி மதச்சார்பின்மையும்

இந்தியாவில் மதச்சார்பின்மை என்ற அரசியல் சமூகப் பார்வை மிக ஆழமாக வேர்விட்டிருக்கும் மாநிலமாகத் தமிழகம் பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் முக்கியமான மாநிலக் கட்சிகளில் எவையும், த.மு.மு.க. நீங்கலாக, மதச்சார்புடைய கட்சிகள் இல்லை. இந்நிலை திராவிட இயக்கத்தின், குறிப்பாகப் பெரியாரின் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
மோடிக்கு எதிர்நிலை
இந்திய அரசியலில் ஒப்பீட்டளவில் ஆதிக்கச் சாதியினரின் அரசியல் ஆதிக்கம் குறைவாகக் காணப்படும் மாநிலங்களுள் தமிழகமும் ஒன்று. மண்டல் ஆணையத்துக்குப் பின்னர் இந்திய அரசியலில் ஓரளவுக்கு ஏற்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினரின் அரசியல் அதிகாரம், தமிழகத்தில் அதற்கு முன்னரே ஏற்பட்டுவிட்டது. அத்தோடு, இந்தி ஆதிக்கம், இந்துத்துவம், அதி வலுவான மத்திய அரசு, கார்ப்பரேட் ஆதிக்கம் போன்றவற்றைக் கொள்கை அளவில் எதிர்ப்பவை தமிழக அரசியல் கட்சிகள். மேற்படி எதிர்நிலைகளை மோடியைப் போலப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் இந்திய அரசியலில் அதிகம் இல்லை.

பாரதி: வெடித்து அணைந்த விண்மீன்


சரியாக, 38 ஆண்டுகள், 9 மாதங்களே வாழ்ந்த பாரதி தன் மொழிக்கும் சமூகத்துக்கும் விட்டுச்சென்றது ஏராளம். தனது குறுகிய வாழ்நாளுக்குள் எவ்வளவு செய்திருக்கிறார் பாரதி. கவிதைகள் மட்டும்தான் அவரது சாதனை என்று இன்றைய தலைமுறையினர் பலர் நினைக்கக்கூடும். கிட்டத்தட்ட, கவிதைகளுக்கு நிகரான சாதனையை பாரதி உரைநடையிலும் செய்திருக்கிறார்.

மின்னணு கழிவு: புதிதாய் முளைத்த வில்லன்


உலகில் எந்தத் துறையில் ஏற்படும் வளர்ச்சியும் சுற்றுச்சூழலைப் பாதிக்கத் தவறுவதில்லை. இதற்கு அண்மைக்கால உதாரணம் மின்னணுக் கழிவு(E waste).
இன்றைக்குத் தொழிற்சாலைகள், வீடுகள், நிறுவனங்களில் எலெக்ட்ரானிக் சாதனங்கள் குவிந்து கிடக்கின்றன. டி.வி, கம்ப்யூட்டர், பிரிண்டர், மிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மொபைல், ஏ.சி., ஜெராக்ஸ் இயந்திரம், ஆடியோ-வீடியோ கருவிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவை பழுதானால்..? பழைய பொருள் கடையிலோ, குப்பையிலோ எறிந்து விடுகிறோம். தூக்கியெறியப்படும் பழைய மின்னணுக் கருவிகள்தான் மின்னணு குப்பைகள்.

கலக்கங்களுக்கும் கலகங்களுக்கும் மத்தியில்...


அரபு இலக்கியத்தில் நவீன மரபு என்பது மேற்கின் தாக்கத்தோடு உருவானது. அரபு இலக்கியத்தில் புனைவைவிடக் கவிதைதான் அதிக தூரத்தைக் கடந்தது. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தொடங்கி, வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டது அரபுக் கவிதை. அதன் செவ்வியல் மரபு பல்வேறு பரிணாமங்களைக் கடந்து, மத்தியக் கிழக்கின் இலக்கிய உலகில் பயணம் செய்து வந்திருக்கிறது. அது பல்வேறு தொடர்ச்சிகளையும், நெளிவு, சுளிவுகளையும் உட்கொண்டிருந்தது.