Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, July 10, 2012

நாமும் சூரியஒளிக்கு மாறலாம்

 


இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம், நெய்வேலி நிலக்கரி மின்நிலையம், எண்ணூர் அனல்மின் நிலையம் மற்றும் மேட்டூர் அணை மின் நிலையம், நரிமணம் இயற்கை எரிவாயு நிலையம் போன்றவற்றின் மூலம் மின்சாரம் கிடைக்கிறது.
தனியார் காற்றாலை மூலமும் மத்திய தொகுப்பிலிருந்தும் மின்சாரம் கிடைக்கிறது. இங்கிருந்தெல்லாம் கிடைக்கும் மின்சாரம் போக, இன்னும் நமக்கு 3,600 மெகாவாட் அளவுக்கு மின்சாரத் தேவை இருக்கிறது. இந்த அளவு மின்சாரத் தேவை எப்படி வந்தது என ஆய்வு செய்தால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதுதான் முதல் காரணமாக இருக்கிறது. சுமார் 4 கோடி மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.
பெரும்பாலான வீடுகளில் மின்சாதனங்கள் உற்பத்தியும் பலமடங்கு அதிகரித்துள்ளது. மாவு அரைக்கும் இயந்திரம், மிக்ஸி போன்றவற்றுடன் துணி துவைப்பது முதல் சமையல் வரை அனைத்து வீட்டுத்தேவைகளுக்கும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
இதுபோதாதென்று வீடுகள்தோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் வழங்கப்பட்டுவிட்டது. தற்போது மிக்ஸி, மின்விசிறி, மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏன் இன்றைக்கு சொந்த வீடுகளில் வசிப்போரில் 20 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் குளிர்சாதன வசதிகளுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. சமையல் எரிவாயு பிரச்னை தலைதூக்குவதால், சமையலுக்கு பலர் மின்சார அடுப்புகளை நாடுகின்ற நிலையும் இருக்கிறது.
இப்படி எதற்கெடுத்தாலும் மக்கள் சாதாரணமாக மின்சாரத்தைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தற்போது கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டாலும், முதல் ஓராண்டுக்கு 500 மெகாவாட் மட்டுமே கிடைக்கும், 2 அல்லது 3 ஆண்டுகள் கழித்து 1000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இந்த மின்சாரத்தை மட்டுமே வைத்து தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா?
மேலும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, மேலும் மின்தேவை அதிகரிக்கத்தான் செய்யும். இப்படி இனி வரும்காலங்களின் மின் தேவை பல மடங்கு அதிகரித்துக் கொண்டே போகத்தான் செய்யும்.
எனவே, மின்தேவையை பூர்த்தி செய்ய இந்தத் திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், காற்றாலை, சூரியஒளி மின்சக்திகள் மூலமே நிரந்தரத் தீர்வு காணமுடியும் என்கின்றனர் ஆய்வர்கள்.
பெரிய அளவிலான திட்டங்கள் தவிர்த்து காற்றாலை திட்டத்தை அனைத்து மக்கள் மத்தியிலும் கொண்டு செல்ல இயலாது. அதேசமயம் சூரியஒளி மின்சார உற்பத்தி ஒன்றே தமிழக மக்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் என்கின்றனர் வல்லுநர்கள்.
தமிழகத்தைப் போன்ற கந்தகபூமியில் அபரிமிதமான மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்கு சூரியஒளியைத் தவிர மாற்றுவழி கிடையாது என்பது விஞ்ஞானிகளின் வாதம். இன்றைக்கு அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் எல்லாம் சூரியஒளி மின்சார உற்பத்திக்கு மாறி வருகின்றன. இந்த மின்சக்தியைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த சக்தியைப் பெறுவதற்கு அந்த நாடுகளின் அரசுகளும் அதிக கவனம் செலுத்துகின்றன.
கறுப்பர் இனமக்கள் வாழும் கென்யாவில் சூரியஒளி மின்சாரத்தை மக்கள் 2009-ம் ஆண்டு முதல் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிலும் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்பின் மூலம் சூரியஒளி விளக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பிரேசில் தெற்குப் பகுதியில் கடலோரங்களில் மீனவர்கள் எரிவாயு விளக்குகளைப் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த விளக்குகளுக்குப் பதிலாக சூரியஒளி விளக்குகளை அமைத்து வருகின்றனர். இதன்மூலம் அந்த நாட்டில் ஆண்டுக்கு 45 ஆயிரம் டன் எரிவாயு சேமிக்கப்பட்டு மற்ற உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அதிலும் எரிவாயுவைவிட குறைந்த செலவில் சூரிய சக்தி கிடைக்கிறதாம். இந்த வகையில், ஒவ்வொரு மீனவக்குடும்பமும் ஆண்டுக்கு 2 ஆயிரம் டாலர் வரை சேமிப்பதாகவும் கூறப்படுகிறது.
அர்ஜென்டினாவில் சூரியஒளியை மக்கள் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இதை அரசும் ஊக்குவித்து வருகிறது. அங்குள்ள 10 வீடுகளில் 5-ல் சூரியஒளி பயன்படுத்துவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
இப்படி பல நாடுகளிலும் இயற்கையாகக் கிடைக்கும் சூரியஒளி மின்சக்தியைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். பொதுமக்களுக்குத் தேவையான மின்சாரமும் தாராளமாகக் கிடைக்கிறது.
தமிழ்நாட்டின் இன்றைய நிலை மட்டுமன்றி, எதிர்காலத் தேவையைக் கருத்தில்கொண்டு தேர்தலின்போது முதல்வர் அறிவித்த சூரியஒளி மின்சார உற்பத்தியில் அரசு தீவிரம் காட்டினால், தமிழகத்துக்கு நல்ல விடிவு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் சூரியஒளி மின் உற்பத்தியில் சில தனியார் நிறுவனங்கள் கூடங்களை அமைத்து வருகின்றன. கடைகளில் சூரியஒளி விளக்குகள், சமையல் அடுப்புகள் போன்றவை விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.
வீடுகளில் சூரியஒளி மின்சாரம் தயாரித்துப் பயன்படுத்த மிகக் குறைந்த செலவே ஆகும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த வகை மின்சாரம் தயாரிக்க மானியத்துடன் கூடிய சூரியஒளி தயாரிப்பு மின்சாதனங்களை அரசு வழங்க முன்வரலாம். இந்தத் திட்டத்துக்கான சாதனங்களை வழங்க ஜெர்மன் போன்ற நாடுகள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, தமிழக அரசும், மின்உற்பத்திக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும், வீடுகளில் சூரியஒளி மின் உற்பத்திக்கான திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ வழி கிடைக்கும். தொழில்வளமும் பெருகும் என்பதில் ஐயமில்லை.
நன்றி:தினமணி
Engr.Sulthan

Monday, July 9, 2012

பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ

பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு பெட்ரோல் 50 ரூபாயா? அதுவும் ஒரு லிட்டர் 100கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்குமா? இது நிஜமா?இதுல எங்க மன்மோகன் சிங் வந்து சதி பண்றார்னு தலையை பிய்த்துக்கொள்ளும் நண்பர்களே, படியுங்கள் மேலே.

“பெட்ரோலிய பொருட்களின் சர்வ தேச விலை அதிகரித்து விட்டது.”
“டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பாதாளத்துக்கு சென்று விட்டது.”
“எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன”
“வீட்டு சிலிண்டர்,கேரசின்னுக்கு கொடுக்கும் மானியங்களால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.”
“கச்சா எண்ணெய்யின் விலையை opec நாடுகள் தான் நிர்ணயிக்கின்றன – மத்திய அரசின் கையில் எதுவும் இல்லை”

மணி சங்கர அய்யர், முரளி தியோரா, ஜெய்பால் ரெட்டி கடந்த 8 ஆண்டுகளில் மேற்கண்ட வசனத்தை இவர்கள் எல்லாரும் முழங்கி இருக்கிறார்கள். காற்புள்ளி,அரை புள்ளி மாறாமல். ஆனால் உண்மை நிலைமைக்கும், இந்த பித்தலாட்ட மக்கள் விரோத காங்கிரஸ் அரசின் கூற்றுக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பது பால் குடிக்கும் குழந்தைக்கு கூட தெரிந்து,தெளிந்து விட்ட இந்த சூழலில், பெட்ரோலிய வளம் தொடர்ச்சியாக, மிக வேகமாக அருகி வரும் இன்றைய நாளில் பெருகி வரும் பெட்ரோலிய எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு என்ன? அந்த தீர்வு எட்டப்பட்டு விட்டதா? அப்படியாயின் அதை செயல் படுத்துவதில் என்ன தயக்கம்? இதில் நம் மன்னாரு மன்மோகன் எங்கே வருகிறார்? தியாகத் திரு விளக்கு சோனியா எங்கே சதி செய்கிறார்? எண்ணெய் நிறுவனங்களின் சதி என்ன? தனியார் நிறுவனங்களின் லாபி இதில் எங்கே இருக்கிறது?

லிட்டருக்கு 100 கிலோமீட்டர் போகும் பெட்ரோலின் விலை 50 ரூபாய், விவசாயிகளுக்கு பெருமளவு லாபம் கிடைக்கும், கழிவு மறு சுழற்சி ஏற்படும், வளிமண்டலத்தில் கார்பன் மாசின் அளவு அதிகரிப்பது குறையும்,மிக அதிகமாக அந்நிய செலாவணி மிச்சமாகும், நாட்டில் புதிய வேலை வாய்ப்பு உருவாகும், விவசாயம் சார்ந்த பொருள் ஆனாதால் பெருவாரியான மக்களுக்கு நேரடியாக பயன் தரும்.காய்கறிகள் விலை குறையும், ஸ்கூல் பஸ் கட்டணம் குறையும், ரூபாயின் மதிப்பு உயரும். முற்றிலும் சுதேசி தயாரிப்பு, யாரிடமும் கையேந்த வேண்டாம். பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவால் அனைத்து பொருட்களின் விலையும் குறையும், விவசாயிக்கு உரிய விலை கிடைக்கும்.அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.இத்தனையையும் தாண்டி எரிபொருள் தீர்ந்து போய்விட்டால் என்ன என்பது போன்ற கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் நலனில், நல்வாழ்வில் வேறு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடலாம். இது போன்ற நல்லதெல்லாம் இந்திய மக்களுக்கு ஏற்படும் அப்படினு தெரிஞ்சாலே ,மக்கள் நல்லாயிருந்துடுவாங்க அப்படிங்கற ஒரு கருதுகோள் போதுமே காங்கிரஸ் அரசு இதை தடுத்து நிறுத்த. நம்ம மன்னாரும், தியாக திரு விளக்கும் அதை கெடுத்து, குட்டி சுவராக்கி நாட்டை எப்பவும் கேவலமான பிச்சைக்காரன் நிலைமையில் வைத்திருப்பதற்கு குறுக்கே நிற்கும் எதையும் இவர்களால் தாங்க முடியாது என்ற அரிச்சுவடி உண்மையை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்கள். பெட்ரோல் 50 ரூபாயா? எப்படி?


எத்தனால் (CH3CH2OH)etoh என்றும் அறியப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 25-85% வரை கலந்து விற்பதன் மூலமாக நமக்கு பெருமளவு பணம் மிச்சமாகும். எத்தனால் சேர்க்கப்பட்ட பெட்ரோலியம் அதிகப்படியான ஆக்ஸிஜனை சுற்றுப்புறத்தில் வெளியிடுகிறது. மாசு படிந்த கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்கிறது. எனவே இது ஒரு சுற்றுச்சூழல் நேசமான(eco-friendly) ஒரு செயல். எத்தனால் என்பது விவசாய பொருட்களில் இருந்து பெறப்படும் ஒரு வகையான ஹைட்ரோகார்பன், ஆல்கஹால் வகையை சார்ந்தது. ஆகச்சிறந்த மாற்றாக இது நிச்சயமாக இருக்கும். இதை பஸ், கார் போன்ற வாகனங்களில் எரிபொருளாகப்பயன்படுத்தலாம். வழக்கமாக பெட்ரோல் மற்றும் டீசலை பயன்படுத்தும்போது, கார்பன் வெளியேறி, சுற்றுப்புற சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது. ஆனால் எதனாலை எரிபொருளாக பயன்படுத்தும்போது, கரும் புகை வெளிப்பாடு குறைந்து, ஆக்சிஜன் அதிக அளவில் வெளியேறி, சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது. இது பற்றி சொல்கின்ற, எழுதுகின்ற விஷயங்கள் எதுவும் புதிதல்ல – விஞ்ஞானிகளின் எதிர்காலக் கனவும் அல்ல.ஏற்கெனவே சில நாடுகளில் நடைமுறைக்கு வந்து அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நடைமுறையில் மிகச்சுலபமாக கொண்டு வரக்கூடிய ஒரு முறை தான்.

“எத்தனால்” இது கரும்பு, மக்காசோளம், உருளைகிழங்கு, குச்சிக்கிழங்கு, சில வகையான பாசிகளில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது.இதை பெட்ரோலுக்கு பதிலாக மாற்று எரிபொருளாக உபயோகிக்கலாம். பெட்ரோலுடன் குறிப்பிட விகிதத்திலும் கலந்து உபயோகிக்கலாம். இன்னும் சொல்லப்போனால் இது பெட்ரொலை விட சிறந்தது என்றே சொல்லாம். அதுமட்டுமல்லாது இதன் விலையோ மிக குறைவு. மொலாசஸ் எனப்படும் நெடியடைய கழிவுகளிலிருந்தும் இதனை பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும், பெருமளவு குறைக்கலாம். நம் நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு இதனால் பெருமளவு பொருளாதார பயன்கள் கிடைக்கவும், அவர்களின் வாழ்க்கை தரம் உயரவும் உள்ள வாய்ப்பை மத்திய காங்கிரஸ் அரசு மறுப்ப்பதாகவே கொள்ள வேண்டி இருக்கிறது.

எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் கரும்பு, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைச் சத்துள்ள எல்லா பொருள்களும். உற்பத்தியும், லாபகரமுமான பொருள்கள் கரும்பு மற்றும் மக்காச்சோளம் மட்டுமே. இவை இரண்டிலும் கரும்பின் திறனே அதிகம். இந்தியா, பிரேசிலில் கரும்பு உற்பத்தியே அதிகம். அமெரிக்காவில் மக்காச்சோளம் பரவலாகப் பயிரிடப்படுவதால் எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள். (கரும்பு ஒரு டன்னுக்கு விலை ரூ. 2,500) சர்க்கரை – 100 கிலோ; சக்கை – 280 கிலோ. இதிலிருந்து 50 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொலாஸஸ் – 40 கிலோ. இதிலிருந்து 12 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும். மட்டி – 50 கிலோ.
எத்தனாலைத் தமிழகம் பயன்படுத்தத் தொடங்கினால் 10 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் டன் தேவைப்படும். மொலாஸûஸ மட்டும் பயன்படுத்தி 40 லட்சம் டன் எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் 4,156 கோடி டன் சர்க்கரையும் உடன் உற்பத்தியாகும். எனவே, இத்திட்டம் சாத்தியப்படாது.
ஆகவே, இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். அதற்கு கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யாமல் நேரடியாக எத்தனாலை உற்பத்தி செய்வோமானால் இது சாத்தியமான திட்டம் மட்டுமன்றி, உடன் அமல்படுத்தவும் முடியும்.
இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் – 25 கிலோ; கழிவு (தீவனம்) – 330 கிலோ. மக்காச்சோளத்தை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மக்காச்சோளத்திலிருந்து மிக உயர்ரக குடிசாராயத்தைத் தயாரிக்கலாம்.
தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது. இதிலிருந்து 1,15,200 டன் குடிசாராயம் தயாரிக்க முடியும். மக்காச்சோளத்துக்கு டன்னுக்கு ரூ. 12,000 உறுதி செய்யப்பட்டால் உற்பத்தியை 8 லட்சம் டன்னாக உயர்த்த இயலும். தமிழகத்தின் குடிசாராயத் தேவையே 2,50,000 டன்தான். இப்போது குடிசாராயம் மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.
தமிழகத்தில் 7.2 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஏக்கருக்கு 40 டன் விளைகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும். ஆல்கஹால் 2,76,400 டன். இது குடிசாராயத்துக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குடிசாராயத்துக்கு மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவோமேயானால் மொலாஸûஸ முழுமையாகப் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் ரசாயனத் தொழிற்சாலை அபரிமிதமான வளர்ச்சியை அடையும். உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.
கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏக்கருக்கு 120 டன் என்பது பெரிய செய்தியல்ல. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.

இந்தியாவில் கரும்பு உற்பத்திக்கு பஞ்சமே இல்லை.அபரிமிதமான உற்பத்தி காரணமாக தகுந்த விலை கிடைக்காமல் விவசாயிகள் போராடுகிறார்கள்.இங்கு கரும்பானது, சர்க்கரை ஆலைகளில், சர்க்கரை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதால் இந்த நிலை.கரும்பின் கழிவுப்பொருளாகக் கருதப்படும் கரும்புச்சக்கையிலிருந்து எத்தனால் தயாரிக்கவும்,அந்த எத்தனாலை பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களுடன் கலந்து வாகனங்களுக்கு பயன்படுத்தவும் துவங்கினால் உற்பத்தியாகும் கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும். இவ்வளவு நாட்களாக கழிவுப் பொருளாக கருதப்பட்ட கரும்புச்சக்கை இதன் மூலம் நல்ல விலை போகும் என்பதால் சர்க்கரை விலை கணிசமாக குறையும். கரும்பு உற்பத்தியாகும் நிலங்களின் அளவு அதிகரிக்கும். இன்னும் அதிக அளவு விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். சர்க்கரை ஆலைகளில் சர்க்கரையோடு, உபபொருளாக எத்தனாலும் தயாரிக்க வேண்டி இருப்பதால், அதன் பொருட்டு அதிக நபர்களுக்கு வேலை கிடைக்கும். எத்தனாலை உற்பத்தி செய்ய, கையாள, மற்ற இடங்களுக்கு அனுப்ப, எண்ணை நிறுவனங்களில் இவற்றை கலந்து புதிய சதவீதத்தில் எரிபொருளை உற்பத்தி செய்ய – என்று ஏகப்பட்ட புதிய தொழில்களும்,வேலைகளும் உருவாகும்.பெட்ரோலின் விலையில் 4ல் 1 பங்கு விலைக்கு எத்தனால் கிடைக்கும் என்பதால் பெட்ரோல், டீசலின் விலை கணிசமாக குறையும். கச்சா எண்ணை இறக்குமதி பெரும் அளவில் குறையும்.இதனால் பெரும் அளவில் டாலர் – அந்நியச் செலாவணி மிச்சமாகும். டாலர் கையிருப்பு அதிகம் ஆவதால் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்.

எரிபொருளின் விலை குறைவதால் – சரக்கு போக்குவரத்து எளிதாகும் – மலிவாகும். எனவே, தரை வழியாக கொண்டு வரப்படும், காய்கறி,மளிகை சாமான்கள், பால் – அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் குறையும்.எத்தனால் கலந்த புதிய, மலிவான, எரிபொருளை பயன்படுத்துவதால் ஆட்டோ, பஸ், லாரி போக்குவரத்து செலவு குறையும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. 1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆனால் எத்தனால் உற்பத்தி என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது.100% எத்தனால் அல்லது மெத்தனால் கொண்டும் வாகனங்களை இயக்க முடியும். நாம் நாட்டில் குடிக்க மட்டுமே பயன்ப்படுகிறது, பிரேசில் போன்ற நாடுகளில் எத்தனால் பெருமளவில் வாகன எரிபொருளாக பயன்ப்படுகிறது. ஆனால் நிலையை நாம் மனது வைத்தால் உடனடியாக மாற்றலாம்.

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

 


Home Remedies Ear Ache
காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் ஒன்று. ஆனால் கைக்குழந்தைகளுக்கு காது வலி வந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த காது வலி பெரும்பாலும் சளி பிடிப்பதாலும், மூக்கை சிந்துவதாலுமே வரும். மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி காது வலி வந்தால் உடனே காது‌க்கு‌ள் எதையாவது போ‌ட்டு நுழைக்கக் கூடாது. இதனால் காது‌க்கு‌ள் ‌கிரு‌மி‌‌த்தொ‌ற்று தான் ஏ‌ற்படுமே தவிர சரியாகாது. மேலும் இந்த காது வலி பொதுவாக இரவிலேயே வருவதால், என்ன செய்வதென்று தெரியாது. அப்போது இதற்கு நம் முன்னோர்களின் வீட்டு வைத்தியம் நன்கு கை கொடுக்கும். அது என்னென்னவென்று பார்க்கலாமா?

1. காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு, மிதமான சூட்டில் காதில் விட்டால், காதில் இருக்கும் புண் ஆறி, வ‌லி குறையு‌ம்.

2. தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரைக் குடித்தால் காது வலி குறையும்.

3. தாழ‌ம்பூவை நெரு‌ப்பு‌த் தண‌லி‌ல் கா‌ட்டி கச‌க்‌கி சாறு ப‌ி‌‌ழி‌ந்து அ‌தி‌ல் ‌சில து‌ளிகளை கா‌தி‌ல் ‌விட்டால் காது வ‌லி, கா‌தி‌ல் தோ‌ன்று‌ம் க‌ட்டி ஆ‌கியவை குணமாகு‌ம்.

4. மருதா‌ணியின் வேரை நசு‌‌க்‌கி‌ அதில் வரும் சா‌ற்‌றினை கா‌தி‌ல் ‌விட்டால், காது வ‌லி ‌தீரு‌ம்.

5. கொஞ்சம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் ஒரு ‌கிரா‌ம்பை போட்டு சூடு செ‌ய்து, பின் அ‌ந்த எ‌ண்ணெய்யை வ‌லி உ‌ள்ள கா‌தி‌ல் விட்டா‌ல் ‌விரை‌வி‌ல் வ‌லி குறையு‌ம்.

இவ்வாறெல்லாம் செய்து பாருங்க, காது வலி பறந்தே போகும்.
நன்றி: தமிழ் போல்ட்ஸ்கை

Engr.Sulthan

DRINK WATER ON EMPTY STOMACH


>
>It is popular in Japan today to drink water immediately after waking up
>every morning. Furthermore, scientific tests have proven a its value. We
>publish below a description of use of water for our readers. For old and
>serious diseases as well as modern illnesses the water treatment had been
>found successful by a Japanese medical society as a 100% cure for the
>following diseases:
>
>Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy,
>excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine
>diseases, vomiting, gastritis, diarrhea, piles, diabetes, constipation, all
>eye diseases, womb, cancer, ear nose and throat diseases.
>
>METHOD OF TREATMENT
>
>1. As you wake up in the morning before brushing teeth, drink 4 x 160ml
>glasses of water
>
>2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45
>minutes
>
>3. After 45 minutes you may eat and drink as normal.
>
>4. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink
>anything for 2 hours
>
>5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at
>the beginning may commence by taking little water and gradually increase it
>to 4 glasses per day.
>
>6. The above method of treatment will cure diseases of the sick and others
>can enjoy a healthy life.
>
>The following list gives the number of days of treatment required to
>cure/control/reduce main diseases:
>
>1. High Blood Pressure - 30 days
>2. Gastric - 10 days
>3. Diabetes - 30 days
>4. Constipation - 10 days
>5. Cancer - 180 days
>6. TB - 90 days
>7. Arthritis patients should follow the above treatment only for 3 days in
>the 1st week, and from 2nd week onwards - daily.
>
>This treatment method has no side effects, however at the commencement of
>treatment you may have to urinate a few times.
>
>It is better if we continue this and make this procedure as a routine work
>in our life.
>
>Drink Water and Stay healthy and Active.
>
>This makes sense .... the Chinese and Japanese drink hot tea with their
>meals ..not cold water. maybe it is time we adopt their drinking habit
>while
>eating!!! Nothing to lose, everything to gain...
>For those who like to drink cold water, this article is applicable to you.
>
>It is nice to have a cup of cold drink after a meal. However, the cold
>water
>will solidify the oily stuff that you have just consumed. It will slow down
>the digestion.
>
>Once this "sludge" reacts with the acid, it will break down and be absorbed
>by the intestine faster than the solid food. It will line the intestine.
>Very soon, this will turn into fats and lead to cancer. It is best to drink
>hot soup or warm water after a meal.
>
>A serious note about heart attacks: Women should know that not every heart
>attack symptom is going to be the left arm hurting. Be aware of intense
>pain
>in the jaw line. You may never have the first chest pain during the course
>of a heart attack. Nausea and intense sweating are also common symptoms.
>60%
>of people who have a heart attack while they are asleep do not wake up.
>
>Pain in the jaw can wake you from a sound sleep. Let's be careful and be
>aware. The more we know, the better chance we could survive...
>
>A cardiologist says if everyone who gets this mail sends it to everyone
>they
>know, you can be sure that we'll save at least one life.

சுய தொழில்கள்-36 நோட்டுப் புத்தகம் தயாரிப்பு

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு!


நோட்டுப் புத்தகத்தின் தேவை என்ன என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பள்ளி, கல்லூரிகள் அலுவலகங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் இதற்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. சாகாவரம் பெற்ற இந்தத் தொழிலைப் பற்றிதான் இந்த வாரம் நாம் பார்க்கப் போகிறோம்... கம்ப்யூட்டர், லேப்டாப் என தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவிட்டாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்றும் நோட்டுப் புத்தகங் களில்தான் எழுதி வருகின்றனர். எனவே, எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரை நோட்டுப் புத்தகங்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. குழந்தைகளுக்குப் பாடங்கள் அதிகமாக ஆக, நோட்டு களுக்கான தேவையும் எதிர்காலத்தில் இருந்து கொண்டே இருக்கும். பள்ளி, கல்லூரிகளை நேரடியாக அணுகி, ஆர்டர் பெறுவதன் மூலம் நோட்டுக்களை விற்கலாம். அல்லது உரிய டீலர் மூலம் கடைகளில் சப்ளை செய்துவிடலாம். நோட்டு தயாரிப்பின்போது மீதமாகும் கட்டிங் வேஸ்டுகளை மறுசுழற்சி முறையில் இரண்டாம் தர நோட்டுகளைத் தயார் செய்பவர்களுக்கு விற்பனை செய்யலாம்.

நிலம் மற்றும் கட்டடம்!

இந்தத் தொழில் தொடங்க 1,000 முதல் 1,500 சதுர அடி வரை இடம் தேவை. இதில், குறைந்தது 750 சதுர அடி அளவில் கட்டடம் இருக்க வேண்டும்.

மூலப் பொருள்!

நோட்டுப் புத்தகம் தயாரிக்கத் தேவைப்படும் பேப்பர் சுருள் வடிவிலும், பெரிய ஷீட் வடிவிலும் கிடைக்கிறது. கிலோ கணக்கில் கிடைக்கும் இந்த மூலப் பொருளின் விலை கல்வி ஆண்டின் ஆரம்ப காலத்தில் அதிகமாகவும், பின்னர் ஆறு மாதம் குறைவாகவும் இருக்கும். பொதுவாக கிலோ 52-55 ரூபாய் வரையில் கிடைக்கிறது. இந்த மூலப் பொருட்கள் டி.என்.பி.எல்., எஸ்.பி.பி. போன்ற கம்பெனிகளிடம் கிடைக்கிறது.

இயந்திரம்!

மூலப் பொருள் தொடங்கி நோட்டுக்களாக மாறுகிற வரை மொத்தம் ஐந்து இயந்திரங்கள் தேவை. ரூலிங் மெஷின், பைண்டிங்க் மெஷின், கட்டிங் மெஷின், பின்னிங் மெஷின் மற்றும் பிரின்டிங் மெஷின் என்கிற இந்த ஐந்து இயந்திரங்களை வாங்க மொத்தம் 14 லட்சம் ரூபாய் வேண்டும். இதில், முதல் நான்கு இயந்திரங்களும் கேரளா மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் கிடைக்கின்றன. பிரின்டிங் இயந்திரம் இங்கு கிடைத்தாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது நல்லது. இந்த பிரின்டிங் மெஷினை தேவைப்பட்டால் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். அட்டையில் படங்களையும் எழுத்துக்களையும் பிரின்ட் செய்வதற்காகவே இந்த மெஷின். ஏற்கெனவே பிரின்ட் செய்யப்பட்ட அட்டைகள் சந்தையில் கிடைப்பதால், அதை வாங்கி, நோட்டுடன் பைண்ட் செய்து தந்துவிடலாம். தவிர, இந்த மெஷினின் விலையும் அதிகம். பிரின்டிங் இயந்திரத்துடன் சேர்த்து இந்தத் தொழில் தொடங்குவதற்கு இருபது லட்ச ரூபாய்க்கு மேல் தேவைப்படும்.

தயாரிப்பு முறை!

நோட்டுப் புத்தகங்கள் இரண்டு வகையாகத் தயாரிக்கப்படுகிறது. 40-90 பக்கம் கொண்ட நோட்டு புத்தகம் ஒரு வகை. 192-400 வரையிலான பக்கங்களைக் கொண்ட நோட்டுப் புத்தகம் மற்றொரு வகை. இந்த இரண்டு வகையைப் பொறுத்தே தயாரிப்பு வேலைகள் மாறும்.

ரூலிங் மெஷின்!

இந்த மெஷினில் பேப்பரை வைத்து நமது தேவைக்கேற்ப நோட்டுப் புத்தகத்தில் வரிகளைப் போட பயன்படு கிறது. இந்த மெஷின் முதலில் மார்ஜின் லைனும், பின்னர் தேவையான வரிகளையும் போடுகிறது. இந்த வேலை செய்ய இரண்டு ஆட்கள் தேவைப்படுவார்கள். இப்படி வரிகளுடன் அச்சாகி வரும் பேப்பர்கள் எண்ணப்பட்டு தனியாக வைக்கப்படும். அன்ரூல்டு நோட்புக்கை மட்டுமே தயாரிப்பவர்களுக்கு இந்த மெஷின் தேவையிருக்காது.

கட்டிங் மெஷின்!

எண்ணப்பட்ட பேப்பர்கள் தேவைப்படும் அளவுக்கு ஏற்ப வெட்டப்படுகிறது. சின்ன நோட்டு, பெரிய நோட்டு என்று தேவைப்படும் அளவுகளில் வெட்டிக் கொள்ளலாம். இந்த வேலையினைச் செய்ய இரண்டு ஆட்கள் தேவை.

பின்னிங் மெஷின்!

வெட்டப்பட்ட பக்கங்கள் பின்னிங் மெஷின் மூலம் பின் அடிக்கப்படுகிறது. இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவைப்படுவார்கள். பின் அடிக்கப்பட்ட நோட்டுகள் கட்டிங் மெஷின் மூலம் வெட்டுகிறார்கள்.

பைண்டிங் மெஷின்!

இப்படி வெட்டப்பட்டு வருகிற பெரிய நோட்டுகளில் வெளிப்பக்கமாக அட்டை வைத்து 300 செல்சியஸ் அளவுக்கு சூடாக்கப்பட்ட பசையை (நிuனீ) கொண்டு ஒட்டுகிறார்கள். இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவை. பின்னர் மீண்டும் கட்டிங் மெஷினில் வைத்து பிசிறில்லாமல் சீராக வெட்டி சரி செய்கிறார்கள்.

பிரின்டிங் மெஷின்!

இந்த மெஷின் மூலம்தான் நோட்டின் அட்டைகள் பிரின்ட் செய்யப்படுகிறது. இந்த மெஷினைக் கொண்டு முகப்பு அட்டையில் வேண்டிய டிசைன் அல்லது படங்களை பிரின்ட் செய்து கொள்ளலாம். இந்த மெஷினை புத்தகங்களை அச்சடிக்கவும், வேறு பல பிரின்டிங் வேலை செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மைனஸ் :

இந்தத் தொழிலைப் பொறுத்தவரை மே மாதம் தொடங்கி ஆறு மாதம் வேலை இருக்கும். அடுத்துவரும் சில மாதங்களுக்குப் பெரிதாக வேலை இருக்காது. இதுதான் இந்தத் தொழிலில் இருக்கும் பாதகம். தவிர, தொழில் நன்றாக இருக்கும்போது மூலப் பொருளின் விலை உச்சத்தில் இருக்கும் என்பதும் பாதகமான விஷயமே.பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால், தயாரித்த நோட்டுக்கள் விற்க முடியாத நிலை நிச்சயம் உருவாகாது. எனவே, புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்தி குழந்தைகளை ஈர்த்தால் இந்தத் தொழிலில் நிச்சயம் வெற்றிதான்!

Engr.Sulthan