Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 15, 2014

திருச்சி டூ ஆஸ்திரேலியா! - பொள்ளாச்சி இளநீருக்கு புதிய வடிவம்


புதிதாக தொழில் தொடங்குபவர், பாரம்பரியமாக தொழில் செய்பவர் என யாராக இருந்தாலும் இன்றைய கால மாற்றத்துக்கு தகுந்தாற்போல ஏதாவது புதுமையான, அதிலும் எளிய வழியை கையாள வேண்டியது அவசியம் என்கிறார் திருச்சியில் இளநீர் மொத்த வியாபாரம் செய்துவரும் காஜாமுகமது (56).
தன்னுடைய தொழிலில் புகுத்திய புதுமையான முயற்சி குறித்து ‘தி இந்து’விடம் அவர் பகிர்ந்துகொண்டது:
கடந்த 25 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் இருந்து இளநீர் வாங்கி வியாபாரம் செய்கிறேன். இன்றைய இளம் தலைமுறையினர் குளிர்பானம் குடிப்பதை கவுரவமாக கருதுகிறார்கள். என்னதான் இளநீர் இயற்கை பானம் என்றாலும், மரத்தடியிலும் தள்ளு வண்டியிலும் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஷாப்பிங் மால் முதல் சிறிய பெட்டிக்கடை வரை இளநீரை கொண்டுசெல்லவேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவாக இருந்தது.

Friday, November 14, 2014

சோலைவனத்தில் ஒரு சோலார் சுடர்வனம்


னம் இருந்தால் இனம் இருக்கும் என்பது வெறும் சொலவடை அல்ல: நூற்றுக்கு நூறு நிஜம். பசுமை மாறா காடுகளும், பங்கமில்லா நீர்வளமும் கொண்டதுதான் மேற்குத்தொடர்ச்சி மலை. யானை, புலி, சிறுத்தை, கரடி, குரங்கு, காட்டெருமை, மான் போன்ற பலவித உயிரினங்களும் உயிர்ச் சங்கிலியின் ஓர் அங்கமாக ஒன்றையொன்று சார்ந்து வாழ்ந்து வருவதால்தான் இன்று வரை வனங்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
இந்த அடர்வனங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் பழங்குடி மக்கள்.

வரலாற்றில் பாபர் மஸ்ஜித் சர்ச்சை


கி.பி.
1526 : பாபர் அவர்களால் முகலாயப் பேரரசு நிறுவப்பட்டது.

1528 : பாபரின் தளபதி மீர்பக்கி அவர்களால் அயோத்தியில் பள்ளிவாசல் கட்டப்பட்டது.

1853 : முதன்முதலாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை எழுப்பப்பட்டது.

பற்களை பராமரிப்பது ஈஸி...

பல் போனால் சொல் போச்சு என்பார்கள். இந்தப் பொன்மொழி எப்போது தோன்றியது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பல காலமாக பற்களை சரிவர பராமரிக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்லி வருகிறார்கள். ஏனெனில் பற்கள் தான் ஆரோக்கியத்துக்கான வாசல் என்கிறார் பிரபல பல் மருத்துவமனையில் பல் நிபுணராக பணிபுரியும் டாக்டர் தீபாலட்சுமி. 

நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம்


உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.

காரணங்கள்:-

சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.

ஒன்று வாங்கினால்... ஒன்று இலவசமா?- ஆஃபர் ஆர்வலர்கள் கவனத்துக்கு!


மளிகைக் கடையில் மாதாந்திர பலசரக்கு வாங்கும்போது, எப்போதுமே கடந்த மாதத்தைவிட பில் அதிகமாகவே வரும். விலைவாசி உயர்வு மட்டும் அதற்குக் காரணமல்ல. நம் தேவைக்கு அதிகமான பொருட்களை நம்மை அறியாமலேயே நாம் வாங்குவதும் அதற்கு ஒரு காரணம்.
அப்படி வாங்க நம்மைத் தூண்டுவது, கடைகளில் வைக்கப்பட்டிருக்கு விளம்பரங்கள், கண்கவர் ஆஃபர் அறிவிப்புகள், கவர்ச்சிகரமான விலைச் சலுகைகள்.
அப்படிப்பட்ட விளம்பரங்களை பார்க்கும்போது, அவற்றில் ஏதாவது ஒன்றை வாங்குவதைவிட வேறு என்ன செய்ய முடியும்.

முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:


நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

நீங்கள் உண்பது பிளாஸ்டிக்கா?


'பிளாஸ்டிக் கரண்டிகளைக் கொண்டு உணவு சமைப்பதையும், பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவு வகைகளையும் மற்ற பானங்களையும் சூடாக போட்டு வைப்பதையும் மக்கள் அறவே தவிர்த்துவிட வேண்டும்'' என்கிறார் மலேசியாவில் செயல்பட்டு வரும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்.
 

Wednesday, November 12, 2014

ஃபிளாஸ்க்கில் வெப்பம் மாறாமல் இருப்பது ஏன்?



பொதுவாக, ஃபிளாஸ்க் எனப்படும் வெப்பக்குடுவை அல்லது புட்டிகளில் வைக்கப்படும் திரவம் நீண்ட நேரத்திற்கு அதன் தன்மை மாறாமல் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ இருக்கிறது.


வெப்பக்குடுவைகளின் உட்பகுதியின் மீது பூசப்பட்டிருக்கும் வெள்ளிப் பூச்சு, வெப்ப பரிமாற்றத்தை தடுக்கிறது. இந்த குடுவைகள் இரட்டைச் சுவர் கொண்டவையாக உள்ளன. இந்த இரண்டு சுவர்களுக்கும் இடையே உள்ள பகுதியில் காற்று இல்லாமல் வெற்றிடமாக இருக்கும். வெப்ப பரிமாற்றத்திற்கு காற்று அவசியம் என்பதால் குடுவையின் உட்புறத்தில் உள்ள திரவத்தின் வெப்பம் வெளியேறுவது இல்லை. அதைப் போலவே வெளியே இருக்கும் வெப்பமும் உள்ளே செல்வது இல்லை. இந்த குடுவைகளில் காணப்படும் ரப்பர் பொருத்தப்பட்ட மூடி வெளிப்புற வெப்பம் உள்ளே செல்வதை குறைக்கிறது. இதுவே திரவம் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ நெடுநேரம் இருப்பதற்கு காரணம். வெப்பைக்குடுவையை 1892ஆம் ஆண்டு ஜேம்ஸ் டீவார் என்பவர் கண்டுபிடித்தார்.

இனிப்பான லாபம் கொடுக்கும் 'ஸ்வீட் கார்ன்’

ஒரு ஏக்கர்... 90 நாட்கள்... ரூ.90 ஆயிரம்..!
காசி. வேம்பையன்
படங்கள்: கா. முரளி
"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்...
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்''
கவிஞர் வைரமுத்துவின் வரிகள் இவை. இது விவசாயத்துக்கும் பொருந்தும் என்பதை நிரூபிக்கும் விதமாக... புதுப்புது விஷயங்களைத் தேடி அலைந்து தெரிந்துகொண்டு, 'ஸ்வீட் கார்ன்’ எனப்படும் இனிப்பு மக்காச்சோளத்தை சாகுபடி செய்து, நேரடியாக விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், சு. கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர்.

Tuesday, November 11, 2014

சிகப்பரிசியின் அற்புதங்கள்



தென்னிந்திய உணவுகளில் முக்கிய இடம்பிடித்துள்ள அரிசியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
சிகப்பரிசி உடல்நலனுக்கு ஏற்ற சிறந்த உணவாக உள்ளது, இதில் ஏராளமான வைட்டமின்களும், சத்துக்களும் உள்ளன.
இதில் அதிகமான பைபர் உள்ளது, எனவே இரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுகிறது.
மேலும் சிகப்பரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது.
இந்த சாதத்தை சாப்பிட்டால் உணவில் சர்க்கரையின் அளவு சேர்வது மிக தாமதமாக நடைபெறும், எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..!

சென்னை:கல்யாண பிரியாணி
1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை

2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா

3. சிதம்பரம் கொத்சு

4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்

5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை

மூலிகை வளம் - நாயுருவி

சிறுநீரக சிக்கல்களுக்கு..செலவில்லாதத் தீர்வு...! 

கடுமையான பாறையையும் தனது மெல்லிய வேரால் துளைக்கும் இயற்கை அதிசயம் கொண்ட மூலிகை நாயுருவி. இப்படி மலைப்பாறைகளில் துளையிட்டு வளர்வதால், இதற்கு 'கல்லுருவி’ என்ற பெயரும் உண்டு. தரிசு நிலங்கள், வேலியோரங்கள், காடு, மலைகள் என அனைத்துப் பகுதிகளிலும் தானே வளரும் நாயுருவி... முட்டை வடிவ இலைகளைக் கொண்டிருக்கும். நெற்கதிர் போல் நீண்டிருக்கும் கிளைகளில், அரிசி போன்ற முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்தச் செடியின் அருகில் செல்லும் விலங்குகள், மனிதர்களின் உடல் மற்றும் உடைகளில் ஒட்டிக் கொள்ளும் இதன் விதைகள், வெவ்வேறு இடங்களில் விழுந்து பரவுகின்றன. 

உயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்?


உயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்?
மனிதன் உயிரிழந்த பின்பும்
அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்:
கண் - 31 நிமிடம்
மூளை - 10 நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - 20 நிமிடங்கள்

Sunday, November 9, 2014

ஆவாரை!


புராணங்களில் சொல்வதுபோல் ஏழு கடல், ஏழு மலைகளுக்கு அப்பால் கிடைப்பதல்ல மூலிகைகள். சாதாரணமாக, நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதையில், கைக்கெட்டும் தூரத்திலேயே ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருக்கின்றன. அந்த வகையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மஞ்சள் நிறப் பூக்களுடன் புன்னகைப்பவை... ஆவாரை. வறண்ட நிலத்தில் தான் வளர்ந்தாலும், மனிதர்களின் நோய்களை நீக்கி நீண்ட ஆயுளை கொடுக்கும் அற்புத மூலிகை ஆவாரை. இந்தச் செடி இருக்கும் இடங்கள்தான், உண்மையில் ஆரோக்கிய மையங்கள். இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி அலையும் மனித மனதுக்கு, செலவில்லாமல் கையருகே கிடைக்கும் இதன் அருமை தெரிவதில்லை. மனித சமுதாயத்துக்கு ஆவாரை அள்ளி அள்ளித் தரும் பலன்கள் சொல்லி மாளாது.

புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல்!

கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள், வெயிலின் சூட்டைத் தவிர்க்க, ஆவாரம் இலைகளை தலையில் வைத்துக் கட்டிக் கொள்வார்கள். இக்காட்சியை இன்றைக்கும் பார்க்கலாம். சூட்டிலிருந்து உடலைக் காத்து குளிர்ச்சியை அளிப்பதில் ஆவாரையின் பங்கு அலாதியானது. உலகை உலுக்கும் கொடிய நோய்களான புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் இரண்டுக்கும் எதிரான ஆற்றல் கொண்டது, ஆவாரை. அதனால்தான் உலகின் பல நாடுகளில் கேன்சருக்கான சின்னங்களில் ஆவாரம் பூ இடம் பிடித்திருக்கிறது. குறிப்பாக, 'கனடா கேன்சர் சொசைட்டி’ சின்னத்தில்இதைத் தெளிவாகப் பார்க்கலாம். உலகின் பல நாடுகளில் விளையும் ஆவாரையைவிட, நம் மண்ணில் விளையும் ஆவாரைக்கு ஆற்றல் அதிகம் என்கிறார்கள்.

ஆவாரை நீர்!

இன்றைக்கு தேநீர் அருந்தாமல் நம்மால் இருக்க முடியவில்லை. அதனால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்தப் பலனும் இல்லை. பணம் செலவாவதுதான் மிச்சம். ஆனால், அதைவிட ருசியான, மிகமிக செலவு குறைந்த, ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆவாரை நீரைப் பருகிப் பாருங்கள். பிறகு, அதை மட்டும்தான் பருகுவீர்கள். கையளவு ஆவாரம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, அதனுடன் தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து அருந்தினால்... உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன், சரும நோய்களும் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம்.

'கிரீன் டீ’ என்ற பெயரில் இன்றைக்கு அதிகமாக விற்பனையாகும் தேநீரை விட, ஆயிரம் மடங்கு அற்புதமானது, ஆவாரை நீர். இது மட்டுமல்ல... ஆவாரை இலையைப் பறித்து, கல்லில் வைத்து அரை குறையாகத் தட்டி, தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு, கண்களின் வழியே வெளியேறுவதை உணர முடியும். தலை முடி வளர, உடலை மினுமினுப்பாக்க, உடல் துர்நாற்றத்தைத் துரத்த... என அனைத்துக்கும் ஆவாரை பயன்படுவதால் இதனை, 'சகலநோய் தீர்க்கும் சர்வரோக நிவாரணி’ என்கிறார்கள்.

குப்பைமேனி


'குப்பையில் கிடக்கும் கோமேதகம்’, 'சேற்றில் முளைத்த செந்தாமரை’ எனச் சொல்வார்களே... அதற்கு முற்றும் பொருத்தமானது, குப்பைமேனி. வாய்க்கால், வரப்பு, சாலையோரங்கள், குப்பைமேடுகள் எனக் காணும் இடங்களிலெல்லாம் துளிர்த்துக் கிடக்கும் குப்பைமேனி... மனிதனைக்  காக்கும் அற்புத மூலிகை என்பது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?


அருகம்புல்

 
'மூர்த்தி சிறிது... கீர்த்தி பெரிது’ என்பார்களே, அது அருகம்புல்லுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். சிறிய புல்லில், புதைந்து கிடக்கும் மருத்துவ குணங்கள்தான் எத்தனை... எத்தனை? மனிதனின் பிணி நீக்கும் அத்தனை மூலக்கூறுகளும் அருகம்புல்லுக்குள் இருப்பதால்தான் அனைத்து இடங்களிலும் இதை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது, இயற்கை. எல்லாவிதமான மண்ணிலும் வளரும் அருகு, சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. நீரில்லாமல் அருகம்புல் காய்ந்து போனாலும் போகும். ஆனால், பல ஆண்டுகள் கழித்து அந்த இடத்தில் நீர் பட்டால், பட்டென்று செழித்து வளரத் தொடங்கிவிடும் தன்மை அருகுக்கு உண்டு. இந்தப் புல் உள்ள நிலம், மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்திலிருந்தும் காக்கப்படுகிறது. அதனால்தான் அருகம்புல்லால் வரப்பு அமைத்து நெல் சாகுபடி செய்கின்றனர்.