Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 8, 2015

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் நஞ்சு : அதைக் குடிக்காதீங்க!


ஒரே ஒரு நாள் வெளியில் தண்ணீர் குடித்துவிட்டாலும்கூட, உடனே சிலருக்குச் சளி பிடித்து மூக்கு ஒழுக ஆரம்பித்துவிடும், தொண்டை கட்டிக்கொள்ளும், காய்ச்சலும்கூட எட்டிப்பார்க்கலாம். டாக்டரிடம் போனால், அவர் முதலில் கேட்கும் கேள்வி, “வெளியே தண்ணீர் குடித்தீர்களா?” என்பதுதான்.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை பாட்டில் குடிநீரை வாங்கிக் குடிப்பதைப் பரவலாகப் பார்க்க முடிந்ததில்லை. போகுமிடத்தில் கிடைத்த தண்ணீரைத்தான் எல்லோரும் குடித்துக்கொண்டிருந்தோம். எல்லா நேரமும் பெரிய நோய்கள் தொற்றிக்கொண்டிருக்கவில்லை. ஆனால், இன்றைய நிலைமை தலைகீழாக இருக்கிறது. என்ன நோய் தொற்றிவிடுமோ என்ற அச்சத்தில், பலரும் லிட்டருக்கு 15 ரூபாய் கொடுத்து பாட்டில் குடிநீரை நம்பிக் குடிக்கிறோம்.

சீனிமிட்டாய் என்ற வீதிமிட்டாய் என்ற சுத்துமிட்டாய்.





       


          திருநெல்வேலி மாவட்டத்திற்கு உரியசிறப்பு இனிப்பு பலகாரம் இதுவீதி மிட்டாய்,தேங்காய் எண்ணெய் மிட்டாய்சுத்து மிட்டாய்,சீனிமிட்டாய்என்றெல்லாம்இதைக்குறிப்பிடுவர்ஆரம்ப கட்டத்தில்திருவிழாக் காலங்களில் வீதிகளில்முளைக்கும் திடீர் மிட்டாய் கடைகளில்விற்பனை செய்யப்பட்டதால் இது வீதிமிட்டாசிஆனது.

தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள்

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!

இளநீரின் நன்மைகளைப் பற்றி

Friday, August 7, 2015

ஹஜ் செய்யவிருக்கும் ஹாஜிமார்களுக்கு டாக்டரின் அறிவுரை.!


 


ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!
Dr.ஜெ.முஹ்யித்தீன்அப்துல் காதர் MBBS, MS




உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர். அது, உடல்நலம்!

மது உள்ளே.. மதி வெளியே..

ளவுக்கு அதிகமாக மது அருந்தினால், அடுத்த நாள் காலை தாங்க முடியாத தலைசுற்றல் ஏற்படும் என்பது 'குடிமகன்கள்’ அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால், தொடர்ந்து மது குடிப்பதால், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் எந்த அளவுக்குப் பாதிப்பு அடைகின்றன என்பது குறித்து நீரிழிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் கருணாநிதி அளிக்கும் அதிர்ச்சிப் பட்டியல் இது...

Tuesday, August 4, 2015

வெள்ளந்தி மனுஷன் விஜயகாந்த்


விஜயகாந்த்  குறித்து இண்டர்நெட், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் என்று எல்லாவற்றிலும், ரவுண்டுகட்டி ரவுஸ் பண்ணுவது தொடர்கதை யான சமாச்சாரம். குறிப்பாக 24 மணிநேர குடிமகனாக அவரை ஆளாளுக்கு தங்கள் பாணியில் வறுத்து எடுத்து வந்தார்கள். அவரது பாணியில் சொல்வதென்றால் 'ஏதோ பக்கத்தில் இருந்து ஊற்றிக் கொடுத்ததைப் போல"  அவரவர் கற்பனை கதைகளை கட்டிவிட்டனர். அப்படியே அவர் மதுப்பழக்கம் உடையவர் என்றாலும் அது ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயமாகிவிடு கிறது. அப்படி இருக்கை யி்ல் அவரை மட்டும் குறிவைத்து நடக்கும் இந்த தாக்குதல் எந்த வகையில் நியாயம்.