முத்துப்பேட்டைக் காத்துக்கு,காசு கொடுக்கும் சுவிட்சர்லாந்து!"
|
|
|
காட்டு வாழ்க்கை பேசும் ஜனநாதன் |
'சினிமா' என்கிற பலமான ஊடகத்தை 'சமூகப் பார்வை' என்கிற கண்ணாடி கொண்டு
பார்ப்பவர்கள் மிகமிகக் குறைவு. அருகிக் கிடக்கும் அத்தகையக் கூட்டத்தில்,
எளிதில் அடையாளம் கண்டுகொள்ளப்படக் கூடியவர் ஜனநாதன். 'இயற்கை' மற்றும் 'ஈ'
என்று இரண்டு படங்களை இதுவரை இயக்கியிருக்கும் ஜனநாதனின் சமூக அக்கறையை
'ஈ' படத்தின் வாயிலாக நன்றாகவே உணர முடியும். கதைகளுக்காக வித்தியாசமான
களங்களைத் தேடித் திரிவதில் ஆர்வம் கொண்ட ஜனநாதன், 'பேராண்மை' என்கிற
படத்தை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் களம்
(பேக்டிராப்).... காடு! இதற்காக தென்னகத்தின் பல்வேறு காடுகளை வலம்
வந்ததினால், கிட்டத்தட்ட காடுகளின் காதலனாகவே மாறிப் போயிருக்கிறார்
மனிதர்.
பொதுவாக சினிமாக்காரர்களிடம் பேச்சுக் கொடுத்தால், தான் எடுத்துக் கொண்டி
ருக்கும் படங்களைப் பற்றித்தான் அதிகம் பிரஸ்தாபிப்பார்கள்... ஜனநாதனோ
தன்னு டைய கதைக் களமான காடுகளைப் பற்றியே மணிக்கணக்கில் நம்மிடம்
கதைத்தார். |