Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, October 18, 2014

பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளம் பனம்பழம்



தமிழகத்தின் தேசிய மரம் எதுவென்று எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்? பனைமரத்துக்குத்தான் அந்தப் பெருமை என்பது பலருக்கும் ஆச்சரியமூட்டும் தகவலாக இருக்கும். 
வளமிக்க தமிழ் பூமியில் எண்ணற்ற மரங்கள் விளைந்து செழிக்க, அப்படி என்ன உசத்தி இந்த பனைமரத்துக்கு என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழும். பசேலென்று தழைத்திருக்கும் வாழையின் அத்தனை பாகங்களையும் பயன்படுத்தத் தெரிந்த தமிழ் இனம் வாழையை விடவும் கூடுதலாக பயன்படுத்திய மற்றொரு தாவரம் பனை தான். அதுமட்டுமின்றி இந்தியாவில் விளையும் மொத்த பனை மரங்களில் 80 சதவிகிதம் தமிழகத்தில் தான் இருக்கின்றன. தமிழின் மதிப்புமிக்க சொத்துக்களான இலக் கியங்களை தனது பழுத்த இலைகளில் (ஓலை) பல தலைமுறைகள் கடந்து தாங்கி வந்ததால் ஒரு வேளை பனைக்கு இந்த அங்கீகாரமாக இருக்குமோ?

பழமே பலம்...

பழமே பலம்!
துபாய்: சர்வதேச அளவில் மிக உயரமான கட்டிடமான  துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் உயரமான  இடத்தில் பார்வையாளர் கூடம்  திறக்கப்பட்டது. இதன் மூலம் உலகின் மிக உயர்ந்த பார்வையாளர் தளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பார்வையாளர் தளம், தரைமட்டத்திலிருந்து 555 மீட்டர் உயரத்தில் 148வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பார்வையாளர்களுக்கான் தளம் 124வது மாடியில் அமைக்கப்பட்டிருந்தது. 

Friday, October 17, 2014

ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...!


‘கிச்சனைப் பார்த்தால் அந்த ஹோட்டலில் சாப்பிட முடியாது!’ என்பார்கள். சென்னையில் உள்ள சில ஹோட்டல்களில் சமையல்காரராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க ஒருவர், அளித்த அதிர்ச்சித் தகவல்கள் இங்கே...
‘‘பொதுவாக ஹோட்டல்களில் ஒருநாளைக்கு 150 கிலோ மட்டன் வாங்கப்படுகிறது என்றால், அதில் 100 கிலோ பயன்படுத்தப்பட்டால், மீதம் இருக்கும் 50 கிலோ, மதியம் வரை ரூம் டெம்ப்பரேச்சரிலேயே இருக்கும்.

பழமையைப் பேசும் திண்ணைப் புராணம்!

‘‘ண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும்...’’ கிராமங்களில் புழங்கும் இந்த சொலவடையே திண்ணைகளின் முக்கியத்துவத்தை சொல்கிறது. ஆனால், இன்று அண்ணன்களுடன் சேர்ந்து திண்ணைகளே காலியாகி விட்டது என்பதுதான் ஒரு வரலாற்று சோகம்.
ஓலைக்குடிசையின் ஒட்டுத்திண்ணை தொடங்கி, ஓங்கி உயர்ந்த மச்சுவீட்டின் வரவேற்பு திண்ணை வரை அன்றைய மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நீக்கமற நிறைந்திருந்தன திண்ணைகள். இன்று திண்ணைகள் இருக்கும் இடத்தில் வண்டிகளும், வாடகைக்கு கடைகளும் இருக்கின்றன.
திண்ணையில் தொடங்கிய பள்ளிக்கூடம்

Thursday, October 16, 2014

எளிதாகத் தொடங்கக் கூடிய 5 தொழில்கள்

நம்பிக்கை... வளர்ச்சி... லாபம்...

எளிதாகத் தொடங்கக் கூடிய 5 தொழில்கள்!
நீரை.மகேந்திரன்
சிறு, குறு தொழில்களை ஊக்குவிப்பது மட்டுமல்ல, புதிய தொழில்களைத் தொடங்கு வதற்கான வழிகாட்டுதல்களையும் நாணயம் விகடன் தொடர்ந்து அளித்து வருகிறது. என்றாலும், என்ன தொழில் தொடங்கினால், நல்ல வளர்ச்சியும் லாபமும் காண முடியும் என்கிற குழப்பம் பலருக்கும் இருப்பது இயற்கைதான்.
எல்லோரும் மிக எளிதாகவும்,  அதிக மூலதனம் தேவைப்படாத வகையிலும் செய்யக்கூடிய ஐந்து தொழில்களை இந்தக் கட்டுரையில் கொடுத்துள்ளோம். இந்த ஐந்து தொழில்களில் உங்களால் சிறப்பாக செய்ய முடியும் என்கிற ஒரு தொழிலை தேர்வு செய்யுங்கள். எந்தக் கஷ்டம் வந்தாலும் பரவா யில்லை; தொழிலில் ஜெயிப்பது தான் ஒரே நோக்கம் என்கிற வெறியோடு, அந்தத் தொழிலை செய்ய ஆரம்பித்தால், நீங்கள் அதில் வெற்றி காண்பது உறுதி!

மங்காத தமிழென்று சங்கே முழங்கு

 தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி

ஆண் என்ன? பெண் என்ன? அறிவியல் சொல்வதென்ன?



உலகம் முழுவதும் ஒரே ஆண் (Man) ஆக அல்லது பெண் மயமாக இருந்தால் உலகம் என்னவாகும்?
ஈர்ப்பு இன்றி, உலகமே பொறுக்க இயலாத அறுவை (Boring) ஆக இருந்திருக்குமே!
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! பெண்களே இல்லாமல் உலகம் இருக்குமேயானால் அப்படிப்பட்ட வாழ்வும் ஒரு வாழ்வா?

Wednesday, October 15, 2014

‘மென்பொருளி‘ல் இருந்து ‘உண்பொருள்‘ நோக்கி!

ப த்தாம் வகுப்பு படித்து விட்டாலே மடிப்பு கலையாத சட்டை, பேன்ட் போட்டு... காலரை தூக்கி விட்டுக் கொண்டு ‘கலெக்டர் வேலை பார்க்கறதுக்காகத்தான் நான் பொறந்திருக் கேன்’ என்று ‘வெள்ளைச் சட்டை' வேலைக்காக அலைகிற காலமிது. ஆனால், கம்ப்யூட்டர் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஒருவர், திடீரென எல்லாவற்றையும் உதறிவிட்டு, குடும்பத்தோடு நாடு திரும்பி, பேருந்து போக்குவரத்து கூட இல்லாத குக்கிராமத்தில் நாலுமுழ வேட்டியோடு விவசாயம் பார்த்துக் கொண்டிருக் கிறார் என்றால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியுமா?
பெயரில் ஆத்தூர் இடம்பெற்றிருந்தாலும் அந்த ஊரிலேயே கிடைக்காத 'ஆத்தூர் கிச்சடி சம்பாவை' பொத்தி பாதுகாக்கிறார் பாலாஜி சங்கர் என்று கடந்த இதழில் படித்திருப்பீர்கள். 'அட' போட வைக்கும் அவரின் கதையை அடுத்த இதழில் பார்க்கலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். அந்த பாலாஜி சங்கர்தான் ஆச்சர்யத்துக்குரிய மனிதர்.

இயற்கை மாதுளை தரும் இனிப்பான லாபம்! குறைந்த தண்ணீர்... நிறைவான மகசூல்..

'திட்டமிட்டு முறையான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தினால், விவசாயம் போல கொட்டிக் கொடுக்கும் தொழில் வேறு எதுவும் இல்லை’ என்பதை நிரூபித்து வருகிற விவசாயிகள் பலர் உண்டு. இப்படிப்பட்டவர்களை 'பசுமை விகடன்’ தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறது. இந்த வரிசையில் இணைகிறார்... கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த குரியன் ஜோஸ். இவர், இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்து மகத்தான லாபம் ஈட்டி வருகிறார்.
தமிழகத்தின் தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள கழுதைமேடு பகுதியில், பொட்டல்காடாக இருந்த நிலத்தை வாங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் கடின உழைப்பின் மூலம் எழில்கொஞ்சும் தோட்டமாக மாற்றியிருக்கிறார், குரியன் ஜோஸ். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், தங்களின் பயணத்தினூடே இவருடைய பண்ணையையும் பார்வையிட வருமளவுக்கு, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்திருக்கிறார்... குரியன்.

Monday, October 13, 2014

சந்தோஷம் பொங்கும் சொந்த வீடு!






வாங்கும்முன் கவனிக்க வேண்டிய 10 கட்டளைகள்...
சங்கர ஸ்ரீனிவாசன், சி.ஓ.ஓ., Realtycompass.com
வீடு வாங்குவது என்பது பெரும்பாலான மக்களின் லட்சிய மாகவும், கனவாகவும் இருக்கிறது. வீடு வாங்குவது என்பது, ஒரு நபர் தனது வாழ்நாளில் எடுக்கும் மிக முக்கிய முடிவுகளில் ஒன்று. தெரியாத்தனமாக தவறான இடத்தில், தவறான பில்டரிடமிருந்து வீடு வாங்கி விட்டால் அது பெரும் சுமையாக மாறிவிடும்.
அதுவும் சென்னை முகலிவாக்கத் தில் 11 மாடிக் கட்டடம் கட்டும் போதே, சரிந்துவிழுந்து 61 பேர் பலியான சம்பவத்துக்குப்பின் வீடு வாங்குவதில், அதிலும் குறிப்பாக, ஃப்ளாட் வாங்குவதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டி உள்ளது. வீடு வாங்கும்போது பின் வரும் 10 விஷயங்களைக் கண்டிப்பாக நினைவில் கொள்ளுங்கள்.
1.கட்டுமான நிறுவனத்தின் தரம்!
கட்டுமான நிறுவனத் தின் தரம் / நம்பகத் தன்மையைத்தான் முதன்மையாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். தவறான கட்டுமான நிறுவனத்திடமிருந்து வீடு வாங்குவது, வாங்குபவரின் வாழ்க்கையைச் சீர்குலைத்துவிடும். கடந்த காலங்களில் அந்தக் கட்டுமான நிறுவனத்தால் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை நேரில் சென்று பாருங்கள். எவ்வளவு திட்டங் களை அந்த பில்டர் சரியான நேரத்தில் முடித்து வழங்கியுள்ளார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அத்துடன் அவர் கட்டித்தந்துள்ள வீடுகளில் குடியிருப்பவர்களிடம் கட்டுமானத் தரம், வாடிக்கையாளர் சேவை, அந்தத் திட்டங்களில் உள்ள அனுமதி மீறல்கள் போன்றவற்றையும் அறிந்துகொள்ளுங்கள்.

Sunday, October 12, 2014

குன்னூரில் குறிஞ்சி மலர்கள்



குன்னூர்: குன்னூரில் பூத்துள்ள அபூர்வ வகை குறிஞ்சி மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்கின்றன. நீலகிரி குறிஞ்சி மலர்கள் 30 முதல் 60செ.மீ., உயரம் வரை வளர்கிறது. இவற்றில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகள் முதல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கின்றன. 17 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மலர்களும் உள்ளன. ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை பூக்கும் ஊதா நிறம் மற்றும் வெள்ளை கலந்து இருக்கும் இந்த பூக்கள், 10 நாட்களில் வாடிவிடும்.