மக்களின் முதல்வர்’ ஆட்சியில் முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் பதவிக்கு வந்து ஒரு மாதம் உருண்டோடிவிட்டது. தலைமைச் செயலகமோ... சட்டமன்றமோ... வரலாற்றுக் கட்டடங்களோ ஒரு மாநிலத்தின் அடையாளம் அல்ல. ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கும் முதல்வர்தான் மாநிலத்தின் முகம். ஆனால், அந்த முகம் தமிழகத்தில்கூட தெரியவில்லை. அமைச்சராக இருந்தபோது புன்னகைக்க முடிந்த ஓ.பன்னீர்செல்வம், சிரிப்பைக்கூட தொலைத்துவிட்டு நிற்கிறார். அம்மாவின் ஆட்சி நடத்தும் பன்னீரின் ஒரு மாத ஆட்சியின் காட்சிகளைப் பார்ப்போம்.