Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, December 14, 2013

53,901 – மணிநேரங்களில் 33 கணினி மொழிகளைக் கண்டுபிடித்த சூப்பர் தமிழன்

ஒரு தமிழனின் கண்டுபிடிப்பு உலகத்தை வியப்படையவைத்துள்ளது
jayaprabuஜெயபிரபு என்பவர் உலகில் யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்றை கண்டுப்பிடித்து பெரும் சாதனை படைத்துள்ளார். அப்படி என்ன சாதனை அது சொன்னால் நீங்களும் பெருமைப்படுவீர்கள்
அவர் 55 தொழில்நுட்பம் மற்றும் 33 கணினி மொழிகளை(Progrmming language ) பயன்படுத்தி உலகமே திரும்பிப பார்க்கும் வகையில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கி உள்ளார்.
அவர் இந்த சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்க எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு தெரியுமா ???
53,901 மணி நேரங்க‌ள் தான் !

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் எலுமிச்சை!



நோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழம் புளிப்பு சுவை கொண்டது.

புளிப்பு சுவையுள்ளவை ஜீரணத்தை தூண்டி உணவை நன்கு செரிக்க செய்யும். உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மையும், புளிப்பு சுவைக்கு உண்டு. எலுமிச்சை புளிப்பு சுவையுடையதாக இருந்தாலும், இதில் காரத்தன்மையும் இருக்கிறது. அதனால் ரத்தத்தை தூய்மை செய்யும் சிறப்பு இதில் இருக்கிறது.

அளவுக்கு மீறினால் காபியும் நஞ்சு



மெட்ராஸ் ஃபில்டர் காபி, கும்பகோணம் டிகிரி காபி, டிக்காக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, மைசூர் மங்களூர் காபி, பிளாட்பாரக் காபி என்று காபிகள் பல ரகம்.

இந்தக் காபியைக் கண்டுபிடித்தது நோபல் விஞ்ஞானிகள் அல்ல. காபி நிறத்தில் ஓர் இடையர். முன்னொரு காலத்தில் அபிசீனியா நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கால்தி என்பவர். அவர் மேய்த்துச் சென்ற ஆட்டு மந்தை காட்டில் எதையோ தின்றுவிட்டு அதிக உற்சாகத்துடன் துள்ளி ஓடி ஆடி நடந்தன. "இது என்னடா, ஆட்டுக் கூட்டம் துள்ளாட்டம் போடுதே"! மேய்ப்பவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஆடுகளின் தீவனத்தை ஆராய்ந்தார். ஏதோ சிறுகனிகளைக் கொட்டையோடு அசைபோடுவதைக் கண்டார்.

Friday, December 13, 2013

உடல் நலத்தை காக்கும் உருண்டை கொய்யா!



உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா அனைவருக்கும் பிடிக்கும். சுவையான கொய்யாப்பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போமா!

அரை ஸ்பூன் சர்க்கரை போதும் டென்ஷன் பஞ்சாய் பறக்கும்



தலையை பிய்த்து கொள்ள வைக்கும் டென்ஷனான நேரங்களில் கொஞ்சம் சர்க்கரை சாப்பிட்டால் டென்ஷன் பஞ்சாய் பறந்து விடும் என்கிறார்கள் அமெரிக்காவின் ஒஹியோ மாநில ஆராய்ச்சியாளர்கள்.மன உளைச்சல் அதிகம் ஏற்படும் போது உடல், மனம் மட்டுமின்றி மூளையும் களைப்படைகிறது. இதனால் வேறு எந்த வேலையைப் பற்றியும் சிந்திக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து உடனடியாக வெளிவர உடனடி மருந்து சர்க்கரை தானாம். இந்த ஆராய்ச்சிக்காக அதிகப்படியான டென்ஷன் பாதிப்புக்குள்ளான சுமார் 2000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் மூளை செயல்பாடுகளை கண்காணித்தனர். இவர்களை 2 பிரிவுகளாகப் பிரித்து, முதல் பிரிவினருக்கு மன உளைச்சல் அதிகமாகும் போது சர்க்கரை அல்லது சர்க்கரை கலந்த தண்ணீரை கொடுத்தனர். இன்னொரு பிரிவினருக்கு இது கொடுக்கப்படவில்லை. இதில் சர்க்கரை கொடுக்கப்பட்டவர்கள், உடனடியாக தங்கள் கவலையில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெற்றது கண்டறியப்பட்டது.

Thursday, December 12, 2013

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!



இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்!



பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் "மால்" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.

Wednesday, December 11, 2013

அப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்!


மதுரைஅப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகமதுரையில் பீபீகுளம் பகுதியில் வசிக்கும் நாற்பத்தியோரு வயதாகும் அப்துல் ரஜாக், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தினசரி கூலி வேலைக்குச் செல்லும் வறியவர். அதே நேரத்தில் இராணுவத்தினருக்கான சூடான உடை,    2-இன் – ஒன் குக்கர்,    இரு பக்கம் காற்றினைத் தரும் டேபிள் ஃபேன், துளை விழாத டயர், வயரில்லாத ஃபோன் சார்ஜர் உட்பட 20 க்கும் மேற்பட்ட நூதன கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.
சாதாரண எலக்ட்ரீஷியனாக நிலையில்லாமல் கிடைக்கும் இடங்களில் அங்கும் இங்கும் அலைந்து வேலை செய்து காலத்தை ஓட்டிக் கொண்டு வரும் அப்துல் ரஜாக், தான் வசிக்கும் பகுதியில் வாகனங்களில் டயர்கள் அதிக அளவில் திருட்டு போவதை அறிந்தார். அதனைத் தொடர்ந்து இத்திருட்டுக்களைத் தடுக்க “சேஃப்டி லாக்’ ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

வயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற



வயிறு உப்பலாக இருக்கிறது என்று, நன்றாக "கண்டதையும்" சாப்பிட்டவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். "கண் மண் தெரியாமல் சாப்பிட்டால் இப்படித் தான் நேரும்" என்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவர்.

வயிற்றுக்கு வேண்டிய அளவு தான் சாப்பிட வேண்டும்; காய்கறி, "பழங்கள் சாப்பிடுகிறேன்" என்று அதையே மிக அதிகமாக சாப்பிட்டாலும், நார்ச்சத்து அதிகமாகி, வயிறு உப்பிவிடும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் இப்படி ஏற்படும். அடிக்கடி இப்படி ஏற்பட்டால், டாக்டரிடம் காட்டுவது முக்கியம். குடலில் தங்கக்கூடாது! சாப்பிடும் எந்த உணவும், அதிக பட்சம் ஐந்து மணி நேரத்தில் செரிமானம் ஆகி விடும். இதையடுத்து, அடிவயிற்றில் உள்ள தசைகளும், குடல் தசைகளும் இயங்கி, மலத்தை வெளியேற்றுகின்றன.

இரட்டைப் பலா!


மறக்க முடியுமா???

மறக்க முடியுமா???
அது ஒரு காலம்
அழகிய காலம்!!!

எலுமிச்சை சாறு


தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !

1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...

எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது...

மணப் பாடு கடற்கரை


மணப் பாடு கடற்கரையை உலகத் தரத்துக்கு உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, இங்கு வாட்டர் சர்பிங் விளையாட்டு தொடங்கப்பட்டுள்ளது. உடன்குடி அருகேயுள்ள கடற்கரை கிராமமான மணப்பாடு. இங்கு மணல் குன்றின் மீது மிகவும் புகழ்பெற்ற திருச்சிலுவை ஆலயம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இங்கு கிளைடர் பயிற்சியாளர்கள் வந்து பயிற்சியில் ஈடுபட்டனர். பின்னர் கிளைடர் பயிற்சி அப்படியே முடங்கியது.

கடற் படையில் உபயோகப் படுத்தப்படும் கப்பல்கள்


கடற் படையில் உபயோகப் படுத்தப்படும் கப்பல்கள் பல வகைப்படும். அவை;

* ரோந்துக் கப்பல்.(CRUISER)

* நாசகாரி (DESTROYER)

* விமானம் தாங்கிக் கப்பல்.(AIRCRAFT CARRIER.)

ஆம்புலன்சுக்கு வழி விடவும் !!!


இந்தியாவின் 7 அதிசயங்கள்!



உலகின் 7 அதிசயங்களாக பைசா சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிசின் ஈஃபிள் டவர், சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசீயும், அமெரிக்காவின் எம்பெயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவை அறியப்படுகின்றன.
இவையெல்லாவற்றையும்விட உலகின் 8-வது அதிசயமாக உலக அழகி ஐஸ்வர்யாராயை நாம் எல்லோருக்கும் தெரியும்!!!
அதேவேளையில் இந்தியாவின் 7 அதிசயங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வதில் சாதாரணமாக எலோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும்.
எவையெல்லாம் இந்தியாவின் 7 அதிசயங்களாக பார்க்கப்படுகின்றன, அப்படி பார்க்கப்படும்படி என்ன அதிசயம் அவற்றில் காணப்படுகின்றன என்று பார்ப்போம்.

கலப்படம்!

பெற்ற தாய்தந்தையை தவிர அனைத்துப் பொருட்களும் கலப்படமாக உள்ளது என்று கூறும் அளவுக்கு இன்று கடைகளில் வாங்கும் பொருட்களில் கலப்படம் கலந்துள்ளது. உப்பு முதல் உயர்ந்த தங்கம் வரை கலப்படம் இல்லாத பொருட்களே இல்லை. நுகர்வோர்களாகிய நாம்தான் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

 மஞ்சள்தூள், மிளகாய்தூய், மிளகு, சர்க்கரை, பருப்பு என எல்லாவற்றிலும் கலப்படம் உள்ளது. இதனை தவிர்க்கவேண்டுமெனில் அக்மார்க் முத்திரையிடப்பட்ட பொருட்களையும், ஐ.எஸ்.ஐ. தரம் உள்ள பொருட்களையும் கேட்டு வாங்கவேண்டும்.

யார் இந்த வன்சாரா?


ந்திய காவலர்களில் கிரண்பேடி போன்ற சிலர் மட்டுமே ‘Super Cop’ என்று அழைக்கப்பட்டனர்.
2007ல் சிறையில் அடைக்கப்படும் வரை குஜராத்தின்  ‘Super Cop’ ஆக       எல்லா அதிகாரமும் பெற்று திகழ்ந்தவர் தான் டி. ஜி. வன்சாரா.
1987 பேட்ச் குஜராத் கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான வன்சாரா குற்றவியல் பிரிவு தலைவராக பணியாற்றிய நாளிலிருந்தே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக அறியப்பட்டவர். பல்வேறு என்கவுண்டர்களை நடத்தி மீடியாவின் புகழ் வெளிச்சத்தில் இருந்த வன்சாரா மத்திய பிரதேசத்தை சார்ந்த சொஹ்ராபுதீனை என்கவுண்டரில் சுட்டதிலிருந்து அவரின் சரிவு தொடங்கியது.

நாம் மண்ணைக் காத்தால், மண் நம்மை காக்கும்!

னம் இனத்தோடுதாம் சேரும் என்பது ஒவ்வொரு நபருக்கும், உயிரினத்திற்கும் சாலப் பொருந்தும் போல் இருக்கிறது.
ஆம்! நான் சட்ட ஆராய்ச்சியை விட்டு வெளியில் வந்து எட்டிப்பார்த்தால், கிடைக்கும் நட்புகளில் ஆராய்ச்சியாளர்களே அதிகமாக கிடைக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் என்றால், எல்லோரும் முனைவர் பட்டம் பெற்ற முட்டாள்கள் என நினைக்காதீர்கள்.

என்னைப் போன்ற பள்ளிப்படிப்பையும், தொழிற்படிப்பையும் முடித்தவர்களே!

படிப்பிற்கும் செய்யும் ஆராய்ச்சிக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதவர்களே!!

நான் எப்படி நீதித்துறையில் நடக்கின்ற எல்லாமே தவறு என்று தெளிவாக குறிப்பிடுகிறேனோ, இதுபோலவே அவரவர்கள் செய்யும் ஆராய்ச்சி பற்றி பேசும் போது, இவர்களின் பேச்சும், செயல்பாடும் அத்துறையில் நடக்கின்ற எல்லாமே தவறு, பித்தலாட்டம் என்றே தோன்றுகிறது.

மாத்தி யோசி!!


சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் சிறந்த மருந்து!


இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் பற்றிய விபரங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி. எம்.ஆர்.) சேகரித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் 6.2 கோடிப் பேர் (62 மில்லியன்) சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரு வேளையும் பல் தேய்ப்பதால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்



காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதயத்தில் ரத்தம் உறையும் நோய் ‘த்ராம்போசிஸ் எனப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது. மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய் காக்கர் கூறியதாவது.

என் அரசியல் களம்- உயிர் மூச்சும் உயிர் துடிப்பும்!!

அரசியலில் இங்கு எனது நிலைப் பாட்டினை விவரித்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க என்னைச் சார்ந்தது. சம்பந்தபட்டவர்களுக்கு மட்டும்....

உயிர் மூச்சும் உயிர் துடிப்பும்…பாகம்1

October 28, 2013 at 3:21pm
என்அன்பு உடன் பிறப்புகளே!
1967 ல் தி.மு.க வை அரியணை ஏற்றி அழகு பார்த்தவர்களில் எமக்கும் பெரும் பங்குண்டு என்ற உரிமையோடும், அது எம் கடமையென்ற எண்ணத்தோடும் உங்களிடம் சில தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நேரம் இது. நாடாளு மன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. நாற்பதும் நமக்கே என்று மீண்டும் சரித்திரம் படைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

Tuesday, December 10, 2013

சில்லென்ற உடலுக்கு செம்பருத்தி!


அனைத்து வயதினரையும் பாதித்து வரும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், இதயநோய் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றிற்கு கோபமே காரணமாக உள்ளது. கோபத்தினால் உடலின் வெப்பம் அதிகப்பட்டு, ரத்த அழுத்தம் கூடி, நாளமில்லா சுரப்பிகளில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி, ஹார்மோன்களை சீர்குலைத்து பல நோய்களை உண்டாக்கிவிடுகின்றன.

நுரையீரலுக்கு வேட்டு வைக்கும் பாப்கார்ன் வாசனை!



மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர் ஆகட்டும்...
மெகா ஷாப்பிங் மால்கள் ஆகட்டும்...
நிரம்பி வழிகிற பெரிய்ய்ய்ய்ய்ய பாப்கார்ன் பாக்கெட்டுடன் வலம் வருவது குட்டீஸ், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லாருக்கும் இன்று ஒரு ஃபேஷன். பாக்கெட் 100 ரூபாய் என்றாலும் வாங்கத் தயங்குவதில்லை. அதன் மணமும் சுவையும் ஒரு காரணம் என்றால், ‘சோளப்பொரிதானே... உடம்புக்கு ரொம்ப நல்லது’ என்கிற நினைப்பு இன்னொரு காரணம். ‘நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குது’ என்பது போல இதன் பின்னே நிறைய பிரச்னைகள்!

மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு



கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

அபாய அறிகுறிகள்


சர்க்கரை நோய்க்கும் பிற நோய்களுக்கும் மிக முக்கியமான வித்தியாசம் ஒன்று உண்டு. மற்ற நோய்களுக்கு அறிகுறிகள் வெளியே தெரியும். அவற்றை வைத்து குறிப்பிட்ட நோய் வ்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.ஆனால், சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால் அந்த நோயின் தாக்கம் உடனடியாக வெளியே தெரியாது. இதனால், தங்களுக்கு நோய் இருப்பதையே பலரால் அறிந்துகொள்ள முடிவதில்லை.

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி



எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள்



சிறுவர்கள் முதல் பெரியவர் வரை எல்லோரும் கட்டாயமாக பழங்கள் சாப்பிட வேண்டும் .பல விட்டமின் சத்துக்கள் இந்த பழங்களில் இருந்து கிடைக்கிறது . பல நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி பழங்களுக்கு உண்டு. 

எல்லோரும் திராச்சை பழம் உண்ணலாம் . ஆனால் வாழைபழம் எல்லோரும் சாப்பிட மாட்டார்கள். தோடம்பழம் எல்லோரும் சாப்பிடலாம்.பப்பா பழம் எல்லோரும் சாப்பாட்டுக்கு பின் உண்டால் மிகவும் நல்லது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த பழத்தை வாங்கி சாப்பிடலாம். நமது ஊர்களில் என்றால் மரத்தில் இருந்து சும்மா விழுந்து கிடக்கும். சாப்பிட ஆக்கள் இல்லை. ஆனால் இங்கு பப்பா பழம் எண்பது ரூபாய் ஒன்று . ம்ம்ம்ம்ம் அது இருக்கட்டும் . இடத்துக்கு இடம் எல்லாம் வித்தியாசம் தானே.

How to Light a Burnt Match


Monday, December 9, 2013

நாவறட்சி, உடல் வெப்பம் தணிக்கும் அத்திக்காய்


அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும். சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீலங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்



எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.

The street food mela

Masala Kart brings together more than 130 varieties of street food from across the country

 

Parathas from Delhi. Ice gola from Mumbai. Jhal muri from Kolkata. All in one place. Sounds too good to be true. Hopefully not. Last year’s ‘Eat Chennai’ on Elliots Beach, which brought together famous street cooks from around the country, rapidly descended into chaos when it was swamped by about 67,000 people over the space of three days. This year the organisers, Red Chariots, are attempting it again. Only this time it’s at Island grounds, in an area designed for exhibitions such as these, and they’re armed with experience.

விடுதலையை நோக்கி நீண்ட பயணம்

 

(நாசவேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு 1964, ஏப்ரல் 20-ம் தேதி தென்னாப்பிரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது நெல்சன் மண்டேலா ஆற்றிய உரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு)
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் நான்தான். அனுமதி இல்லாமல் நாட்டை விட்டுச் சென்றது, 1961-ம் ஆண்டு மே மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டியது ஆகிய காரணங்களுக்காகக் குற்றவாளியென்று அறிவிக்கப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிறைத்தண்டனையை அனுபவித்துவருகிறேன்.
ஆரம்பத்திலேயே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் போராட்டங்களின் பின்னணி யில் அயல்நாட்டவர்களும் கம்யூனிஸ்ட்டு களும் இருக்கிறார்கள் என்று அரசு சொல்வதை முற்றிலும் நான் மறுக்க வில்லை. அதே நேரத்தில், ஒரு தனிநபராக வும் எனது மக்களின் தலைவனாகவும் நான் எது செய்திருந்தாலும் தென்னாப்பிரிக்கா வில் எனக்கு நேர்ந்த அனுபவங்களாலும் ஆப்பிரிக்கன் என்ற எனது உணர்வின் அடிப்படையிலுமேயன்றி, ஏதோ அந்நியர்களின் தூண்டுதலால் அல்ல.

ஆம் ஆத்மி கட்சி வெற்றி - இடதுசாரிகளின் சிந்தனைக்கு…


டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான இந்த சட்டப் பேரவைத் தேர்தல்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக இந்தியத் தேர்தல் வரலாற்றில் இடம்பெறும் என்றால், அது டெல்லி தேர்தலில் ‘ஆம் ஆத்மி’ கட்சி பெற்றுள்ள அசாதாரணமான வெற்றிக்காகவே இருக்கும்.

இந்தியாவில் இஸ்லாம்19

யார் அஞ்சுவண்ணத்தார்?
அஞ்சுவண்ணத்தாரைப் பற்றியும், மணிக்கிராமத்தாரைப் பற்றியும் இரண்டாவது செப்பேட்டின் முதல் பக்கத்தில் 34, 35 வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அஞ்சுவண்ணமும் மணிக்கிராமமும் இரு வியாயார அமைப்புக்கள் என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடில்லை. ஆனால் எது யாருடைய அமைப்பு என்பதில்தான் குளறுபடிகள்.
இந்த இடத்தில் சற்று நிதானமாகவும், அறிவுப்பூர்வமாகவும் இதை அணுகவேண்டும்.

இந்திய முதல் பெண் மணிகள்...


இந்தியாவின் முதல் பெண் பிரதமர்.... இந்திரா காந்தி.
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி... பிரதீபா பாடேல்.
இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்.... சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்). 
இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்... சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்). இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி... பாத்திமா பீவி.

Magic Tricks Revealed: Fist Squeeze Coin Vanish


How to perform the two dollar trick


World's Best Banana Trick


Jumping Egg Trick


Sunday, December 8, 2013

வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் இயற்கை உணவுகள்:-



இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. ஏனெனில் உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாததாலும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமடையாமல், வயிற்றில் தங்கி, வயிற்றை பெருத்துவிடுகிறது.

வெங்காய பாசி பயறு தோசை


தேவையான பொருட்கள்:

பாசி பயறு - 2 கப்
அரிசி - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி - 1 இன்ச்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு

மேலே தூவுவதற்கு...

வெங்காயம் - 1

செல்போன்களால் கதிரியக்கப் பாதிப்புகள் ஏற்படுவதில்லை: நிபுணர் தகவல்

 
கடந்த வியாழனன்று தலைநகர் புதுடெல்லியில் 'மொபைல் போன்களும், பொது சுகாதாரமும்- மித் அண்ட் ரியாலிட்டி' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் உலக சுகாதாரக் கழகத்தின் கதிரியக்க நிபுணரான மைக்கேல் ரெபசோலி கலந்துகொண்டார். இவர் சுகாதாரக் கழகத்தின் கதிர்வீச்சு மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் முதல் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.

இந்தியாவில் முதன்முதலில் இஸ்லாத்தை ஏற்றது தமிழர்..

Photo: இந்தியாவில் முதன்முதலில்  இஸ்லாத்தை ஏற்றது தமிழர்..
 
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம்  மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும்  ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.

கட்டுமான அமைப்பு

இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது).

இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.

சேரநாடு

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.அப்படி வந்த அரேபிய இஸ்லாமிய கூட்டத்தினரின் மூலம் இஸ்லாத்தை பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் இஸ்லாத்தை ஏற்க விரும்புவதாகவும் அதானால்  அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள்

இஸ்லாத்தை ஏற்றல்

தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் கொச்சின் ராயல் பேமிலி என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).

அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள். 

இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்கலை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது.

இறப்பு

சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (Jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது..

மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை

மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர். 

அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.இந்தியாவில் முகலாய ஆட்சி வட இந்தியாவை  எட்டும் முன்னமே தென் தென் இந்திய தமிழர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டனர்..மேலும் இஸ்லாம் இந்தியாவில் ஒன்றும் வால் முனையில் பரப்பட்ட மார்க்கமும் இல்லை.

மன்னர் சேரமான் இஸ்லாத்தை ஏற்றத்தை பற்றிய இன்னும் சில தகவல்களும்  உள்ளன...

நிலவை பிரிக்கும் அதிசயம்

மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள். 

அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த நிலவை பிரிக்கும் அதிசயத்தை நடத்தியதாகவும் கூறக்கேட்டனர். 

இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.அங்கே வைத்து மன்னர் இஸ்லாத்தை ஏற்றதாக பதியப்பட்டுள்ளது..எது எப்படியோ இந்தியாவில் இஸ்லாத்தை ஏற்ற முதல் நபர் மன்னர் சேரமான் அதுவும் தமிழர்  என்பதற்கு எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை..
இந்தியாவில் முதன்முதலில் இஸ்லாத்தை ஏற்றது தமிழர்..

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.

இந்தியாவில் இஸ்லாம்18

செப்பேடு தரும் செய்தி
தரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்டுள்ள சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாதராவ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்…
Unfortunately the missing plates are the first and last plates of second grant. They are very important because the first plate contains the name the of sovereign who granted it and the time of the granting, and the last plate bears the signatures of witnesses in Pahlavi, Kuffic and Hebrew characters which talked the emergence of great scholars like Burneld, Harg, West and Gundert to decipher.