சென்னை முகலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்து ரியல் எஸ்டேட் துறையை ஆட்டம் காண வைத்துள்ளது. விபத்துக்குப் பிறகு தமிழக அளவில் அடுக்குமாடி வீடுகளின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. இதை பில்டர்களும் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள்.

அடுக்குமாடி வீடுகளில் வீடு வாங்குவதில் மக்களிடையே தயக்கம் உருவாகியுள்ளது என்கிற கருத்தும் பரவலாக உள்ளது. குறிப்பாக, சென்னை புறநகரப் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
மேலும், அடுக்குமாடி வீடுகளில் அட்வான்ஸ் புக்கிங் நடப்பதும் குறைந்துவிட்டது என்கின்றனர் கட்டுமானத் துறையினர். இந்த நிலவரம் உண்மைதானா, முகலிவாக்கம் பாதிப்புக்குப் பிறகு ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ள களமிறங் கினோம்.
 சென்னை: மந்தநிலையில் விற்பனை!