Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, December 7, 2013

வாழை மரத்தின் மருத்துவ குணங்கள்:-


1422437_632083686813950_654297891_n.jpg
* தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணைபட்ட காயம்- பாதிக்கப்பட்ட இடத்தில் குருத்து வாழை இலையைச் சுற்றிக் கட்டுப் போடலாம். வாழை இலை அல்லது பூவைக் கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பலன் இருக்கும்.

இந்தியாவில் இஸ்லாம்17

செப்பேடு தரும் செய்தி
முதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளாகிய சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பின், இரண்டாவது சேர வம்சத்தை சார்ந்த ஸ்தாணுரவி வர்மா என்ற சேர அரசர் கொல்லம் நகரில் உள்ள ‘தரீசாப் பள்ளி’ என்ற சிரியன் (Syrian) கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எழுதிக் கொடுத்த மானியமாகும்.
இரண்டாவது ஆவணம் அந்த தேவாலயத்தைக் கட்டிய ‘ஈசோ சபீர்’ என்பவர் பெயருக்கு எழுதிக் கொடுத்த இச்செப்பேடு (Copper Plate) தரீசாப் பள்ளி சாசனம் என்று அறியப்படுகிறது. தென்னக வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் அனைவரும் புகழ்பெற்ற இந்த செப்பேட்டை குறிப்பிடாமலிருந்ததில்லை.

Friday, December 6, 2013

ஆபத்தான அஜினோமோட்டோ


16286_520138958081495_1653225714_n.jpg
கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட்என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக்குள்ளும் புகுந்துவிட்டது.

இந்தியாவில் இஸ்லாம்16

செம்பேடு தரும் சான்றுகள்..
சேரமான் பெருமாள் என்று வரலாற்றில் புகழ் பெற்ற முதல் சேரவம்சத்தின் கடைசி பெருமாளுடைய பெயர் ‘இராஜசேகர வர்மா’ என்பதாகும். இவரது ஆட்சிக் காலம் கி.பி.750க்கும் 850க்கும் இடைப்பட்ட காலம் என திருவிதாங்கூர் ஆர்க்கியாளஜிக்கல் சீரிஸின் (T.A.S) ஆசிரியர் திரு. டி.ஏ. கோபிநாதராவ் (T.A.S Vol.11 Page 9) குறிப்பிடுகிறார். கேரளாவில் சங்கனாச்சேரியின் அருகாமையில் உள்ள ‘வாழப்பள்ளி’ என்ற ஊருக்கு இவர் செப்பேடு ஒன்று எழுதிக் கொடுத்துள்ளார். அந்த செம்பேட்டில் அரபி நாணயமான ‘தினாரை’ சில இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். “திருவாற்றுவாய் முட்டாப்பலி விலக்குவார் பெருமானடி கட்டு நூறுதிநாரத்தண்டப்படுவது….” (T.A.S. Vol.11 Page 13 செப்பேட்டின் 3வது வரி) “…மேனூற்றைம் பதி தூணி நெல்லு மூன்று தினாரமும் – ஐயன் காட்டு

Thursday, December 5, 2013

இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்:-


1381566_631913840164268_1415677008_n.jpg
1) எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.

2) பட்டினி கிடப்பது.

3) குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.

4) மிகச் சூடான பானங்களை அருந்துவது

பெண்களை தாக்கும் தைராய்டு பாதுகாப்பு முறை

 பெண்களை தாக்கும் தைராய்டு பாதுகாப்பு முறை
தைராய்டு பிரச்சனை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்சனை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்சனைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்சனை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை.

பாலூட்டிகளைத் தெரியுமா?

 
உலகில் 4 ஆயிரம் பாலூட்டி வகைகள் உள்ளன. பாலூட்டிகளில் நிலத்தில் வாழ்பவையும் உண்டு. நீரில் வாழ்பவையும் உண்டு. பாலூட்டிகளுக்கு பொதுவான சில பண்புகள் உள்ளன.
# பாலூட்டிகள் அனைத்தும் முதுகெலும்பு உயிரிகள்.

விலங்குகள் புரியும் விந்தைகள்

 
நமக்குப் பசியெடுத்தால் சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால் விலங்குகள்? ஒன்றையொன்று சார்ந்து வாழ்கிற வாழ்க்கைதான் விலங்குகளுக்கு. இரையாவதும், இரையாகாமல் தப்பிப்பதுமே அவற்றின் வாழ்க்கைமுறை. சில விலங்குகள் தங்களிடம் இருக்கும் சில சிறப்பு அம்சங்களை வைத்தே, இரையாகாமல் தப்பித்துக்கொள்ளும்.

இந்தியாவில் இஸ்லாம்15

மாலிக் இப்னு ஹபீப் கட்டிய பள்ளிவாசல்கள்
மாலிக் இபுனு ஹபீப் இபுனு மாலிக் தம்முடைய மனைவி மக்களோடு கொல்லத்திற்குச் சென்றார். அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டினார். மனைவியையும் பிள்ளைகளையும் கொல்லத்தில் தங்கவைத்து விட்டு அவர் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்குப் போனார். அங்கேயும் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார். பிறகு, ஃபாக்கனூர் (பார்க்கூர்) மஞ்சூர் (மங்கலாபுரம்) காஞ்சர் கூந்து (காசர்கோடு) முதலிய இடங்களுக்குச் செல்லவும் அவ்விடங்களில் ஒவ்வொரு பள்ளிவாசல் கட்டினார். அதன் பின் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்கு புறப்படவும், ஏறத்தாழ மூன்று மாதங்கள் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டார். பிறகு அவர் ஜீர்பத்தன் (ஸ்டிகண்டபுரம்) தஹ்ஃபந்தன் (தர்மமடம்) ஃபந்தரீனா (பந்தலாயணி) சாலியாத்து (சாலியம்) ஆகிய இடங்களில் பயணம் மேற் கொண்டு அங்கெல்லாம் ஒவ்வொரு பள்ளிவாசல் நிறுவியபின் சாலியத்தில் ஐந்து மாதங்கள் தங்கினார்.

பள்ளிகளிடமிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றுவோம்

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் எல்லா மாணவர்களின் வீட்டிலும் சில ஒற்றுமைகளைக் காணலாம். தொலைக்காட்சி இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள். தினசரி, வார மற்றும் மாத இதழ்களை நிறுத்தி விடுகிறார்கள். கேளிக்கைகள் சுத்தமாக இல்லை. சிரிப்பை மறந்த வீடுகளாகிவிடுகின்றன அவை.

Wednesday, December 4, 2013

அல்சர் அவதியா..?


சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள்!!!

மிகவும் மோசமான அளவிற்கு மனிதனை அடிமைப்படுத்தும் பழக்கங்களில் ஒன்றாக சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது. புகை பிடிப்பவர்கள் புகையிலை மற்றும் நிக்கோடினுக்கு அடிமையாகாமல் இருப்பது மிகவும் கடினமான முயற்சியாக இருக்கும். டீன்-ஏஜ் பருவத்தில், நண்பர்களின் மூலம், புதுமையான ஒரு விஷயத்தை முயற்சி செய்வதற்காகவோ அல்லது மற்றவர்களின் ஸ்டைல் மற்றும் திறனை கண்டோ இந்த பழக்கம் அறிமுகமாவது வழக்கமாகும். இந்த புகைப்பழக்கத்திற்கு உங்களை இழுத்துச் செல்வது எந்த காரணமாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் நீங்கள் அதனை நிறுத்த வேண்டும் என்று நினைப்பீர்கள்.

இது இழிநிலை!

 
தகவல் தொழில்நுட்பத்தின் இன்றியமையாத அங்கம் நூலகமாகத்தான் இருக்க முடியும். இணையதளத் தேடுதல் பொறி (சர்ச் எஞ்சின்) க்குள் நூலகங்கள் அடங்குகின்றன என்பது உண்மைதான் என்றாலும், புத்தகங்களின் தேவை என்பது இன்றியமையாததாகத்தான் உலகம் முழுவதும் தொடர்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை, புத்தகங்கள்தான் இன்றளவும் தகவல் பெட்டகங்களாகவும், அறிவுக் களஞ்சியங்களாகவும் திகழ்கின்றன.

ஓரவஞ்சனை!

 
கொச்சியிலிருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்வதற்கான குழாய்களை விவசாய நிலங்களின் ஊடாகப் பதிக்க இந்திய எரிவாயு ஆணைய நிறுவனத்துக்கு ("கெயில்') அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

தீர்ப்பும் தவறும்

வரும் வியாழனன்று தொடங்க இருக்கும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திருத்தம் பற்றியது. இந்திய அரசுக்கு எதிராக லில்லி தாமஸ் தொடர்ந்த வழக்கில் கடந்த ஜூலை 10, 2013 அன்று வழங்கிய அதிரடி உத்தரவின் மூலம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் பிரிவு (8) 4, அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்கிற பாட்னா உயர்நீதிமன்றத் தீர்ப்பை, உறுதி செய்திருக்கிறது.

போதுமிந்த போலித்தனம்!

நம் சமுதாயம் எந்த அளவுக்கு போலித்தனமான சமுதாயமாக இருக்கிறது என்பதற்கு ஆண்டுதோறும் டிசம்பர் 3-ஆம் தேதியை மாற்றுத் திறனாளிகள் தினமாகக் கொண்டாடுவது சிறந்த எடுத்துக்காட்டு. தேசிய அளவில் சாதனை புரிந்த மாற்றுத் திறனாளிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் சார்பில் குடியரசுத் தலைவர் விருது வழங்கிப் பாராட்டுவதிலும், எல்லா மாநிலங்களிலும் விழா எடுத்துக் கொண்டாடுவதிலும் குறைவே இல்லை. ஆனால், அவர்களது நியாயமான உரிமைகளை சலுகைகளாகக்கூட வழங்க மனமில்லாத சமுதாயமாகத் தொடர்கிறோமே, அந்தப் போலித்தனத்தை யாரிடம் போய்ச் சொல்வது?

இந்தியாவில் இஸ்லாம்14

பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான “துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்” என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் “கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71 வரையான பக்கங்களின் தமிழாக்கம் (இரண்டாவது அத்தியாயம்).

செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன்
செட்டிநாடு சமையல் என்றால் காரசாரமான, சுவையான அசைவ உணவிற்கு பேர் போனது. அதற்கு அளவுக்கு அதிகமாக பிரியர்கள் இருக்கிறார்கள். அதிலும் செட்டிநாடு பெப்பர் சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம், அவர்கள் எதிர்பார்த்த காரத்தை விட அதிகமாகவே இருக்கும். அந்த செட்டிநாடு பெப்பர் சிக்கன் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

சட்ட விழிப்புணர்வு இல்லாததால் பரிதவிக்கும் மூத்த குடிமக்கள்

 
வயதான மூத்தக் குடிமக்களைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டியது குடும்ப உறுப்பினர்களின் சட்டபூர்வ கடமையாக்கப்பட்டுள்ளது.
எனினும் போதிய சட்ட விழிப்புணர்வு இல்லாததால் பிள்ளைகளால் கைவிடப்படும் மூத்த குடிமக்கள் பலர் சட்ட ரீதியான நிவாரணம் பெற முடியாமல் தவிக்கிறார்கள். தள்ளாத வயதில் வீட்டை விட்டு வெளியேறி மூத்த குடிமக்கள் காணாமல் போகும் செய்திகளும், அடைக்கலம் தேடி முதியோர் இல்ல கதவுகளைத் தட்டும் நிகழ்வுகளும், தொலை தூரத்துக்குச் சென்று ஆதரவற்றவர்களாக மரணமடையும் அவலங்களும் இந்த நாட்டில் நிறையவே நடக்கின்றன.

உங்களுக்கு நேரம் இல்லையா?


சரி டைம் இல்’ இந்த வார்த்தையைப் பலரும் சொல்லியிருப்போம். இந்த வார்த்தையால் உறவுகள், நண்பர்கள், அலுவலகம் எல்லோரிடத்திலும் சங்கடங்களை உருவாக்கியிருப்போம்.
நேரம், இன்றைக்கு உலகின் மிகப் பெரிய தேவை. எல்லோருக்குமே இது அவசியத் தேவை. நேரம் ஒரு பெரிய வளம். ஆனால் பணத்தைப் போல, பொருள்களைப் போல நேரத்தைச் சேமித்துவைக்க முடியாது.
நேரத்தைக் கையாள முடியாத நாம் நேரமின்மையைப் பற்றிப் புலம்புவதைத் தினசரி நடவடிக்கையாகக் கொண்டிருக்கிறோம். நமக்கு அன்னியோன்யமான நபர்கள் பேசுவதைக்கூட நம்மால் காதுகொடுத்துக் கேட்க முடியாமல் போகிறது.

இயற்கை அளித்த அற்புதக் கல்!

 
ஒரு காலத்தில் ஓஹோவென ஒரு பொருள் பயன்படுவதும், பின்னர் அது புழக்கத்தில் இல்லாமல் போவதும் புதிய விஷயமல்ல. 18ஆம் நூற்றாண்டில் நவீன உலகம் கட்டமைக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட எத்தனையோ கட்டுமானப் பொருட்கள் இன்று காணாமல் போய்விட்டன. அதில் ஒன்றுதான் செம்பாறாங்கல், சிவப்பு கப்பிக்கல் எனத் தமிழில் பல பெயர்களில் அழைக்கப்படும் லேட்ரைட் (laterite)கற்கள்.
நவீனம் எனத் திருநாமம் சூட்டப்பட்டு வந்த புதிய கட்டுமானப் பொருட்களுக்கு இது ஈடு கொடுக்க முடியாமல் போனாலும், லேட்ரைட் மூலம் கட்டப்பட்ட எத்தனையோ பழமையான கட்டடங்கள் இன்றும் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

பிட்காயினை வீசி எறிந்து கோடிகளை இழந்த பிரிட்டிஷ்காரர்!

 
இணைய நாணயமான பிட்காயின் (BitCoin) மதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிட்காயின் லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகி வருகின்றனர்.
இந்த பிட்காயின் அதிர்ஷ்டசாலிகள் மத்தியில் பிட்காயினை நினைத்து ஐ.டி துறை பணியாளர் ஒருவர் புலம்பிக்கொண்டிருக்கிறார். பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹோவல்ஸ் எனும் அவரது கதையைக் கேட்டால் நமக்கும் பரிதாபமாகத்தான் இருக்கும்.

இணையத்தில் பின்னப்படும் பூதாகர மாயவலைகள்

எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்பவர்கள் கெடுமதி படைத்தவர்கள் தான். அவர்களது கிரிமினல் மூளைதான் அந்தத் தொழில் நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை முழுவதுமாக ஆராய்ந்து முதலில் புரிந்துகொள்ளும். இணையமும் சமூக வலைத்தளங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

இணையத்தை வணிகத்துக்காக முதலில் பயன்படுத்திக்கொண்டவர்கள் போர்னோ படங்களை விற்றவர்கள்தான். எண்ணற்ற ஆபாச வலைத்தளங்கள் உருவாகின. ஒரு கட்டத்தில், அதிக ஹிட்கள் பெறும் முதல் இருபது தளங்கள் அனைத்துமே போர்னோ தளங்களாக இருந்தன. பின்னர், கிரெடிட் கார்டு மூலம் மாதாமாதம் சந்தா பெறும் தளங்களாக ஆனவையும் இவைதான். அதன் பின்னர்தான் நியாயமான வணிக நிறுவனங்கள் பலவும் தம் பொருள்களை விற்பதற்கும் சேவைகளைத் தருவதற்கும் இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தன.

Tuesday, December 3, 2013

எய்ட்ஸ் குழந்தைகளை அரவணைக்கும் மர்ஜுக் பேகம் தம்பதி

மனித நேய பண்பாளர் .எய்ட்ஸ் குழந்தைகளை அரவணைக்கும் மர்ஜுக் பேகம் தம்பதி

உயிர்க்கொல்லி நோய்தான், ஆனால் அது ஒன்றும் தொற்று வியாதியல்ல… இதை எத்தனை முறை அரசும், பாடப் புத்தகங்களும், விளம்பரங்களும், கதை கதையாய் சொல்லி விட்டன. ஆனால், இன்றும் எச்.ஐ.வி. பாதித்து குழந்தைகளை, தங்கள் சமூகத்தில் ஏற்க மறுக்கிறது இந்த மனிதர் கூட்டம்.

வெளியில் எதிர்ப்பவர்களில் சரி பாதிப்பேர், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது யாருக்கும் தெரியாத செய்தி. தனக்கு இந்நோய் உள்ளது எனத் தெரிந்தாலே தற்கொலை செய்துகொள்ளும் பலருக்கு மத்தியில், நிறைய பேர் மன உறுதியுடன் வாழ்கின்றனர் என, வலியின் விளிம்பில் பேசுகிறார் மர்ஜுக் பேகம்.

சூரியசக்தி விமானம்


சுவிஸ் சாதனையாளரும், விமான ஓட்டியுமான பெர்ட்ராண்ட் பிகார்டு (Bertrand Piccard) அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து மிசோரி வரை கடந்த திங்களன்று சூரியசக்தி விமானத்தை ஓட்டிச் சென்றார்.

மிசோரியில் ஏற்பட்ட சூறாவளிப்புயலால் விமான நிறுத்தம் பாதிக்கப்பட்டதால் அதற்கு பதிலாகத் தற்காலிகமாக ஓர் ஏற்பாட்டை இந்த விமானத்தை நிறுத்துவதற்காகச் செய்து வைத்துள்ளனர்.

மருத்துவக் குணம் நிறைந்த பேரிக்காய்



பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது . வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவைமிகுந்த பழங்களில் ஒன்று. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும். இதில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

தோல் தொற்று நோய்களைத் தடுக்க



*சத்துக்குறைபாடுகள், சுத்தமின்மை, மற்றும் பரம்பரைக் காரணங்களால் தோல் நோய் ஏற்படலாம். தேமல் போன்ற பிரச்னைகளுக்கு வைட்டமின் குறைபாடே காரணம். ஆரஞ்சுத் தோல், வெள்ளரி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை தடவிக் கொள்வதன் மூலம் தோல் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். 

விக்கல் வருவது ஏன்?



*‘‘விக்கல் வருவது இயல்பு காரமாக உள்ள உணவுகள் சாப்பிடும்போது விக்கல் வருவது இயல்பு. சர்க்கரை நோய், உடல் பருமன், அல்சர், நரம்பு பிரச்னை, வயிற்றில் அறுவை சிகிச்சை, பக்கவாதம், அல்சர் நோய்களுக்காக மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் விக்கல் வர வாய்ப்புள்ளது. விக்கல் தொடர்ந்து வரும் போது கண் வறண்டு போதல் மற்றும் மயக்கம் ஏற்படலாம். 

வைரஸ் காய்ச்சலுக்கு -- நிலவேம்பு பொடி


* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.

வறட்சியைக் குறைக்க வேண்டுமா?



வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து கடும் வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். இத்தகைய வெள்ளரியை பற்றி, நாம் அறிந்துக்கொள்வது
அவசியம். 

* வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை ஆனால்தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் இத்தனையும் வெள்ளரியில் உண்டு. 

கிருமிகளை அழிக்கும் காட்டு ஏலக்காய்



பார்சல் உணவுகளை, உணவகத்தில் வாங்கும் பொழுது பணியாளர்கள் பாலித்தீன் பைகளை வாயால் ஊதியும், விரல் நுனியால் பாலித்தீன் பைகளை பிரித்தும் உணவை நிரப்பி கட்டிக் கொடுப்பதால், பல்வேறு வகையான நுண்கிருமிகள் அவர்களது வாய்க்காற்று, எச்சில் தூறல், நக அழுக்கு ஆகியவற்றின் மூலம் வயிற்றுக்குள் செல்கின்றன. 

மிளகு செய்யும் மேஜிக்


“பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.

* விட்டு விட்டு வருகின்ற முறை சுரத்தை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.

இந்தியாவில் இஸ்லாம்13

ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்களுடைய ‘துஹ்பத்துல் முஜாஹிதீன் பி அப்ஸிஅக்பரில் புர்த்துக் காலிய்யின்’ (இதுதான் நூலின் முழுப்பெயர்) என்ற நூலை ஆதாரம் காட்டி கி.பி.825 க்குப் பின் சேரமான் பெருமாள் மக்கா சென்ற பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்று கூறுகின்றனர்.

ஆந்திரா ஸ்டைல்: நாட்டுக்கோழி குழம்பு

சிக்கனில் நாட்டுக்கோழி தான் நல்லது என்று சொல்வார்கள். அதுமட்டுமின்றி, ப்ராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படும் குழம்பு தான் சுவை அதிகமாக இருக்கும். அதிலும் இந்த நாட்டுக்கோழியை ஆந்திரா ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.
ஏனெனில் ஆந்திரா ஸ்டைலில் உள்ள ஒரு வித்தியாசம் என்றால் அது மசாலா பொருட்களை சேர்க்கும் விதம் தான். சரி, இப்போது அந்த ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
ஆந்திரா ஸ்டைல்: நாட்டுக்கோழி குழம்பு
தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழி - 1 கிலோ (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3-4 (நறுக்கியது)
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 3 பல்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேகிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் மல்லி, சீரகம், தேங்காய், பூண்டு ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுத்து, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கன் துண்டுகளை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 3-4 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து தக்காளி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், கரம் மசாலா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, மசாலா சிக்கனில் படுமாறு நன்கு பிரட்டி, தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
சிக்கனானது நன்கு வெந்துவிட்டால், பின் அதனை இறக்கி, அதில் கொத்தமல்லியை தூவினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு ரெடி!!!

Monday, December 2, 2013

இந்தியாவில் இஸ்லாம்12

9-ம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பிறகுதான் இங்கு இஸ்லாத்தின் வருகை என காட்டுவதற்கு சில வரலாற்று ஆசிரியர்கள் “துஹ்பத்துல் முஜாஹிதீன்” என்ற அரபி நூலின் கீழே கொடுக்கப்பட்ட பகுதியை மேற்கோள் காட்டுகின்றனர்.
“……மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்தவரலாறு இதுவாகும். எந்த ஆண்டில் நடந்தது என்று திட்டவட்டமாகக் கூறுவதற்கு தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை. ஹிஜிரி 200க்குப் பிறகுதான் (நடந்து) இருக்க வேண்டும் என்பது பெரும்பான்மையோரின் கருத்து. (துஹ்பத்துல் முஜாஹிதீன் – ஷைகு சைனுத்தீன் மகுதூம், மலையாளம் மொழிப்பெயர்ப்பு – கேரளம் பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் – வேலாயுதன் பணிக்கச்சேரி – பக்கம் 70)

கூர்க் ஸ்டைல் சிக்கன் குழம்பு




இந்தியாவில் சிக்கன் குழம்பானது பல ஸ்டைல்களில் சமைக்கப்படும். அந்த வகையில் ஒரு ஸ்டைல் தான் கூர்க் ஸ்டைல். இந்த ஸ்டைல் சிக்கன் குழம்பு மிகவும் அருமையான சுவையில் இருக்கும். மேலும் வித்தியாசமாக முயற்சித்து பார்க்க நினைப்போருக்கு, இந்த கூர்க் ஸ்டைல் சிக்கன் குழம்பு ஏற்றதாக இருக்கும்.
இந்த ரெசிபி செய்ய தாமதமானாலும், அதற்கு ஏற்றாற் போல் இதன் சுவை இருக்கும். சரி, இப்போது அந்த கூர்க் ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Sunday, December 1, 2013

இதயத்தை பாதுகாக்கும் காலிப்ளவர் :-



காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிப்ளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம்.முட்டைக்கோஸும், காலிப்ளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும்.காலிப்ளவர் ஒரு குளிர்பிரதேச காய்கறி. இது குளிர்காலங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது. இத்தாலியில் அதிக அளவில் விளைவிக்கப்பட்ட காலிப்ளவரானது முதன் முதலில் ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது.அக்காலத்தில் தென்னிந்திய மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாததால் இதற்கு தமிழில் பெயர் இல்லை. ஆங்கிலப் பெயரான காலிப்ளவர் என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் இஸ்லாம்11

வரலாற்று உண்மையை மறைத்த வரலாற்று ஆசிரியர்கள்
“இஸ்லாத்தைப் பற்றி நபி(ஸல்) போதனை செய்ய துவங்கி அதிக நாட்கள் ஆவதற்கு முன் இந்தியாவின் பல பகுதிகளில் அரபியர்கள் தங்கி, ஏராளம் மதமாற்றங்கள் செய்தனர்”. (A Journey from Madras through countries of Mysore, Cannanur and Malabar – Francies Buchana) என்று பிரான்ஸிஸ் புக்கானன் குறிப்பிடுகிறார்.

மங்லோரியன் சிக்கன் ரெசிபி: கோரி ரொட்டி கிரேவி


மங்லோரியன் சிக்கன் ரெசிபி: கோரி ரொட்டி கிரேவி
தென்னிந்திய உணவுகளில் மங்லோரியன் ரெசிபி மிகவும் பிரபலமானது. அதிலும் அசைவ உணவுகள் தான் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது அத்தகைய மங்லோரியன் ரெசிபிகளில், சிக்கனில் சூப்பராக இருப்பது என்னவென்றால், அது கோரி ரொட்டி தான். என்ன பெயர் வித்தியாசமாக இருக்கிறதென்ற பார்க்கிறீர்களா? சாதாரணமான பெயர் தான். அதாவது கோரி என்றால் சிக்கன், ரொட்டி என்றால் சப்பாத்தி என்று அர்த்தம். ரொட்டி எப்போதும் சற்று கடினமாக இருக்கும். அதனை சிக்கன் கிரேவியுடன் தொட்டு சாப்பிட்டால், சற்று மென்மையாகிவிடும். எனவே தான் இதற்கு இந்த பெயர் வந்தது. இப்போது அந்த கோரி ரொட்டியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!