Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, June 2, 2015


புற்றுநோய்க்கு புதிய மருந்து; 60 சதவீதம் பேருக்கு குணம் தெரிந்தது

PRINT   ·   T+  
புற்றுநோய்க்கு புதிய மருந்து நம்பிக்கையளிப்பதாக கூறப்படுகிறது
bbcபுற்றுநோய்க்கு புதிய மருந்து நம்பிக்கையளிப்பதாக கூறப்படுகிறது

புற்றுநோயை குணப்படுத்த கொடுக்கப்படும் இரண்டு வெவ்வேறு மருந்துகளை ஒன்றாக சேர்த்துக் கொடுத்தபோது, மெலனோமா எனப்படும் தோல்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானோரின் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கிவிட்டதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது

வருகிறது சூரிய சக்தி ரயில்: இந்தியன் ரயில்வே அறிமுகம்!


புதுடெல்லி: சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் சூரிய சக்தியில் இயங்கும் ரயிலை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.இதற்கான சோதனை ஓட்டம் நடத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  

முன்மாதிரியாக சூரிய சக்தியை கொண்டு ரயிலை இயக்க சோதனையில் முதலில் ரயில் பெட்டிகளில் சோலார் தகடுகள் பொறுத்தப்பட்டு உள்ளன. மிகவிரைவில் அனைத்து மொத்த ரயில்களிலும் சோலார் தகடுகள் பொறுத்தப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சூரிய மின்சக்தியானது, ரயில்வேயில் டீசல் பயன்பாட்டை குறைக்கும், செலவினங்களை குறைக்கும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். ரயில்களில் பொறுத்தப்பட்டு உள்ள சோலார் தகடுகள் மூலம் தற்போது 17 யுனிட்ஸ் மின்சாரம் பெறமுடிகிறது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Sunday, May 31, 2015

கொங்கு நாட்டு கோழிச் சாறு


நாட்டு கோழி - 1/2 கிலோ 
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ 
சீரகம் - 2 ஸ்பூன் 
மல்லி - 4 ஸ்பூன் 
சோம்பு - கால் ஸ்பூன் 
வர மிளகாய் - 4 
பூண்டு - 2 பல்லு 
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன் 

இனி டாக்டர் வேண்டாம்! வாட்டர் தெரபி போதும்!




இனி டாக்டர் வேண்டாம்! வாட்டர் தெரபி போதும்!


தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதைதான் வாட்டர் தெரபி என்கிறார்கள் டாக்டர்கள். மனித உடலை சீராக வைக்கவும், ஆரோக்கியத்துக்கு வித்திடவும், தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்று. தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கி கொள்வதன் வாயிலாக, முழு ஆரோக்கியம் பெற முடியும்.
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது, 5 முதல் 6 டம்ளர்கள் வரை தண்ணீர் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த வாட்டர் தெரபியில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வெறும் வயிற்றில், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு, 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த, 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. வாட்டர் தெரபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது.
தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு, சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம். வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில், 1.5 லிட்டர் தண்ணீரை குடிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். போகப்
போக பழகி விடும். 


வாட்டர் தெரபியின் நன்மைகள்:


1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
3. உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.
5. உடல் சூட்டைத் தணிக்கிறது.
6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற உதவுகிறது.
7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், ஒரே நாளில் மலச்சிக்கல், 2 நாட்களில் அசிடிட்டி, 7 நாட்களில் நீரிழிவு, 4 வாரங்களில் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், 3 மாதங்களில் டி.பி, 10 நாட்களில் வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் கட்டுப்படும்.
தலைவலி, உடல்வலி, சிறுநீரகப் பிரச்னைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, மூலம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்சி உள்ளிட்ட பல நோய்கள் வாட்டர் தெரபியால் காணாமல் போகும்.
இதென்ன புதிய சிகிச்சையாக இருக்கிறதே… வெறும் தண்ணீரை குடித்தால் இவ்வளவு நோய்கள் கட்டுப்படுமா…அப்படியானால் இனி மருந்து, மாத்திரை, டாக்டர்களே வேண்டாம் என்கிறீர்களா…? இன்றே துவக்குங்கள் வாட்டர் தெரபியை… ஆரோக்கியமான வாழ்வு உங்களுக்கு உத்தரவாதம்!
ஒரே ஒரு விஷயம். கிட்னி பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும், டாக்டரின் ஆலோசனை பெற்றபின் சிகிச்சையை மேற்கொள்ளவும்.


.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட. மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா? பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும்.

இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் முறையானது ஜப்பானில் இருந்து வந்ததாகும். ஜப்பானிய மக்கள் தான் தினமும் காலையில் முகத்தை கழுவியதும் பற்களை துலக்காமல் கூட, 4 டம்ளர் தண்ணீரை குடிப்பார்கள். மேலுடம் அப்படி குடித்த பின்னர் 1 மணிநேரத்திற்கு எதுவும் சாப்பிடமாட்டார்கள். இதற்கு பெயர் தான் தண்ணீர் தெரபி. இதனால் தான் ஜப்பானிய மக்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கின்றனர். இங்கு அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் காலையில் வெறும் வயிற்றில் தவறாமல் தண்ணீரை குடித்து வாருங்கள். அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடலானது சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானது முற்றிலும் வெளியேறிவிடும். தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது நச்சுக்களின் சுத்தமாக இருக்கும். தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலியானது குறையும். காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும். எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும். உடலுக்கு மிகவும் இன்றியமையாதது தண்ணீர். இத்தகைய தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவடைந்து உடலை பாதுகாக்கும்.