ரசியாவைப் பற்றித் தெரிந்து கொள்ள கொஞ்சம் பின்னோக்கி போய்த்தான் ஆகவேண்டும். அது 13ம் நூற்றாண்டு. கி.பி. 1200 வாக்கில் முகம்மது பின் கோரி இந்தியப் பேரரசை ஆட்டுவித்தபின் இந்த தேசத்தை தம் நம்பிக்கைக்குறிய அடிமையான குத்புதீன் ஐபெக் என்பவரிடம் ஒப்படைத்தார். அவருக்கு அடுத்து வந்த இல்துமிஷ் தன் பங்குக்கு நன்றாகவே ஆட்சி செய்தாலும். அவருக்கு திறமையான மகன்கள் இருந்தும் இல்லாமல் இருந்தனர். அந்தக் குறையைத் தீர்ப்பதற்காகவே இருந்தார் இல்துமிஷின் மகள் ரசியா பேகம்.