சென்னை மாதிரியான பெரு நகரங்களில் கடற்கரை, பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் சந்தித்துப் பேசுவதை இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புவதில்லை. தனிமையையும் கட்டற்ற சுதந்திரத்தையும் விரும்பும் இன்றைய தலைமுறையினருக்கு இம்மாதிரியான பொதுவெளிகள் ஒருவிதமான அசெளகர்யத்தையே கொடுத்துவந்துள்ளது.
மனதாரப் பேசிக்கொள்ள இதுவரை இருந்துவந்த வெற்றிடத்தைப் போக்க சில ஆண்டுகளுக்கு வந்தவையே காஃபி ஷாப்புகள். இப்போது நண்பர்கள், காதலர்கள் என யாராக இருந்தாலும் உட்கார்ந்து மணிக் கணக்கில் ஆத்மார்த்தமாகப் பேசிக்கொள்ளும் இடங்களாக காபி ஷாப்கள் மாறி வருகின்றன.