Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 8, 2014

பித்தப்பை கற்கள் ஏன் ? எப்படி- ?

liver

இன்றைக்கு பெரும்பாலானோருக்கு உண்டாகும் நோய்களில் பித்தப்பை கற்களால் உண்டாகும் நோயும் ஒன்று பித்தப்பை கற்கள் ஏற்பட்டு பித்தப்பையையே அகற்றிவிட்டு இருப்பவர்களும் உண்டு. வலது பக்க விலா எலும்புகளுக்கு கீழே வலி உண்டாகும். இந்த வலி ஏற்படுவதற்கு பெரும்பாலும் பித்தப்பையில் உண்டாகும் கற்களே காரணம். பித்தப்பை கற்கள் என்றால் என்ன? ஏன் உண்டாகிறது? அதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
பித்தப்பையில் சிறு சிறு கற்கள் உண்டாகும். கற்கள் மிளகு அளவு உள்ளவனாக இருக்கும். ஒரு சில கற்கள் பெரியவைகளாகவும் இருக்கும். புளியங்கொட்டை அளவிற்கும் கற்கள் உறுவாவது உண்டு. ஒரு சிலருக்கு ஒரே கல் பித்தப்பை முழுவதும் நிரம்பி இருப்பதும் உண்டு.
பித்தப்பையி¢ல் உண்டாகிற கற்கள் ஒரு சில மிருதுவாகவும், ஒரு சில கற்கள் கனமாகவும், கெட்டியாகவும் இருக்கும் சிறிய கற்களாக இருந்தால் அவை ஒன்றோடு ஒன்று உராய்ந்து உருண்டையாகி விடும். இவை உண்டாவதற்கு முக்கியமான காரணம் பித்தப்பையில் ஏற்படும் அயற்சி. இந்த அயற்சி ஏற்பட்டவுடன் பித்தநீர் அதிக நேரம் பையில் தங்கி இருகிவிடுகிறது. வேறு காரணங்களாலும் பித்த நீர் தடைப்பட்டு நிற்குமானால் இந்த நோய் உண¢டாகலாம்.
இது போன்று கற்கள் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம் உண்டாகின்றன. அதிலும் ஐம்பது முதல் அறுபது வயது உள்ளவர்களுக்கு அதிகமாக உண்டாகிறது. அதிக உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் இந்த கற்கள் உண்டாகலாம். இருதய நோய், கல்லீரல் நோய், பித்தநீர் வடிகுழாயில் நாக்குப் பூச்சிகளாலும் சதைக் கட்டிகளாலும் அடைப்பு உண்டாகப் பித்தம் தங்கி விடுவது போன்றவற்றாலும் இது போன்ற கற்கள் உண்டாகலாம்.
பித்தப்பையில் உண்டாகும் கற்கள் சிறியவைகளாக வெகு காலம் தங்கியிருந்தாலும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கும். ஆனால் கற்களால் வலி உண்டாவதற்கு முன்பு சில குறிகள் கவனிப்பவர்களுக்கு தெரியும். உணவு உண்டப்பின் வயிற்றில் கனமாகவும் உப்புசமாகவும் இருக்கும். இவை ஏப்பம் விடுவதாலும் வாந்தி எடுப்பதாலும் குறைந்துவிடும்.
இதுபோல் சில காலம் சென்ற பிறகு திடீரென்று குத்தல் போன்ற வலி உண்டாகும். வலி பொருக்க முடியாமல் முழங்காலை வயிற்றின் மேல் மடக்கி அமுக்கினால் வலி சற்று குறைவது உண்டு பித்தப்பையில் இருக்கும் கற்கள் சில சமயங்களில் அங்கிருந்து சிறு குடலுக்கு வரும் குழாயில் இறங்கி அதனுள் அகப்பட்டு கொண்டால் வலி உண்டாகும்.
இந்த வலி வலது விலாபுறத்தில் மார்புக் கூட்டு எலும்பின் கீழே இருக்கும். அங்கிருந்து வலது தோள்பட்டை முதுகின் வலது பக்கம் இவைகளிலும் இந்த வலி உண்டாகும். கல்லீரல் கனத்துப் பருத்து கையால் தொட்டாலும் இந்த வலியைக் கொடுக்கும். இந்த வலி வரும்போது முகம் சுளித்து கைநாடி வலுக்குறைந்து நெற்றியில் வேர்வை உண்டாகும்.
அதிகமான காய்ச்சலும் உண்டாகும். வாந்தி இருக்கும். அடைத்திருக்கும் கற்கள் நழுவி சிறுகுடலுக்குள் வந்தாலும் அல்லது பித்தப் பைக்குள் திரும்பி சேர்ந்துவிட்டாலும் வலி உடனே நின்று விடும். அடைப்பு நீ¢ங்காவிட்டால் மஞ்சள் காமாலை, வெண்ணிறமும் தூற்நாற்றமும் உள்ள மலம் பிரியும். பித்தம் மற்றும் இரத்தத்தில் கலந்திருக்கும் விஷக் குறிகள் எல்லாம் அடுத்தடுத்து காணப்படும்.
மருத்துவம்:
பித்தப்பை கற்களால் உண்டாகக்கூடிய வலிகளுக்கு இரு வேறு விதங்களில் மருத்துவம் அளிக்கலாம். ஒன்று வலி உள்ளபோது செய்வது, மற்றொன்று வலி இல்லாதக் காலத்தில் செய்வது.
வலி உள்ள போது நோயாளியை வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும். இதற்கு உப்பு நீர் மிகவும் உபயோகமானது. வாந்தி எடுப்பதால் பித்தநீர் குழாயின் பிடிப்பு தளர்ந்துவிடும். அரிசிமாவு, ஆளி விதைமாவு, களிமண் இவற்றை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து கிண்டி வலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டலாம், கற்பூரத் தைலம் 5 சொட்டு சாப்பிடக் கொடுக்கலாம்.
வலி நின்ற பிறகு இனி திரும்பாமல் இருப்பதற்கும் கற்கள் உண்டாகமல் இருப்பதற்கும் மருத்துவம் செய்ய வேண்டும். நிலவேம்பு, அழுக்கிரா சூரணம் போன்றவை கொடுக்கலாம். உணவில் பழங்கள் அதிகமாக சேர்க்க வேண்டும்.
வலி இல்லாத காலத்தில் நிலவேம் சூரணம், வெருகடி அளவு சமமாக அழுக்கிரா சூரணம் சேர்த்து கொடுத்து வரலாம்.
இந்த வகை நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.
எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.
ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல்,கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது.
பித்தப்பைக் கற்களை தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1. இறைச்சியால் செய்யப்படும் உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அத்தகைய முழுமையான கொழுப்பு கொண்ட இறைச்சி, வெண்ணெய் மற்றும் பால் போன்ற பொருட்கள் பித்தப்பை கற்கள் உருவாவதை தூண்டி, பித்தப்பை பாதிப்பை ஆரம்பித்து வைக்கும்.
2. கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை தவிர்க்கவும். எண்ணை நிறைந்த அல்லது வறுத்த உணவுகளை பித்தக்கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இந்த உணவு பொருட்கள் பித்தப்பையை கடினமான வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. பின் ஒரு நாள் திடீரென்று, அந்த கற்கள் பித்தநீர்பைக்கு தடையை ஏற்படுத்தலாம்.
3. கனோலா மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணையை எடுத்துக் கொள்ளலாம். இந்த எண்ணெய்கள், உண்மையில் பித்தப்பைக் கற்களை தடுப்பதில் திறன் மிக்கவை. அதுமட்டுமின்றி, நட்ஸ் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.
4. குளிர்ந்த நீரில் கிடைக்கும் மீன் வகைகளான டூனா, கானாங்கெளுத்தி மற்றும் சாலமன் வகைகளை சாப்பிடுங்கள். ஏனெனில் மீனில் உள்ள ஒமேகா-3, பித்தப்பையின் செயல்பாட்டை அதிகரித்து, பித்தக்கற்கள் உருவாவதைத் தடுக்க உதவும்.
5. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் உயர் கிளைசீமிக் கார்போஹைட்ரேட் உணவு பொருட்களை தவிர்க்கவும். உருளைக்கிழங்கு, அரிசி, பாஸ்தா மற்றும் ரொட்டி உணவுகள், உடலினுள் சென்று நமது உடலால் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. மேலும் இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை இருந்தாலும், அவை பித்தப்பை கற்களை உருவாக்கும்.
6. ஒவ்வொரு நாளும் ஒரு கப் காப்பி குடித்தால், பித்தப்பையில் உள்ள கொழுப்பின் அளவானது குறைத்து, பித்தக்கற்களை தடுத்துவிடும்.
7. காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். இதனால் பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் மூலமும் தெரிய வந்துள்ளது.
8. நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களான தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் உணவில் சேர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை குறைத்து, இயற்கையாக பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும்.
நினைவில் கொள்ள வேண்டியவை… *
உடலில் பித்தக்கற்கள் இருந்து, அதனால் எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்றால், அப்போது எந்த ஒரு மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டாம். அந்த நேரம், உணவுகளில் கவனத்தை செலுத்தினாலே அவை கரைந்துவிடும். * அதிக பருமன் அல்லது மிக வேகமாக எடை குறைவது போன்றவை பித்தப்பைக் கற்களோடு தொடர்புடையவை. ஆகவே உடல் எடையை குறைக்கும் போது படிப்படியாக மெதுவாக குறைத்தால், இயற்கையாகவே பித்தப்பைக் கற்களை தடுக்கலாம்.

No comments:

Post a Comment