Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 1, 2014

இவ்விடம் அரசியல் பேசலாம்...


 எதையுமே ப்ளான் பண்ணிப் பண்ணனும்!

- கல்வெட்டான்
ஊரே களேபரமா இருந்தாலும் _ டீக்கடை சந்தானத்துக்காக கத்தி பிடித்துக் கொண்டிருந்தார் சுந்தரம்.
"என்ன சுந்தரண்ணே, சந்தானம் மாதிரி நீயும் கடைய அடைக்கலையா?" என்று சந்தானத்துக்கு கொக்கி போட்டபடியே சலூன் கடை பெஞ்சில் வந்து அமர்ந்தார் மதியழகன். "கடைய அடைக்கறதுன்னா ஒன்னு எங்க ஆயா செத்துப் போயிருக்கணும், இல்லைன்னா கடைமேல நடக்குற கேஸ்ல அந்த சேட்டு ஜெயிக்கணும்! ஆனால், ரெண்டுமே இழுத்துக்கிட்டு தான இருக்கு! பிறகெதுக்கு அடைக்கணும் மதி சார்?!" சுந்தரம் கிரீமை உண்மையின் உரைகல்லில் தேய்த்துக் கொண்டிருந்த கேப்பில் கவுண்ட்டர் கொடுத்தார் சந்தானம். பெயருக்கேற்ற மாதிரி பேசுறதிலும் கில்லாடிதான் இவரு!"இல்ல தம்பி, புதுசா முளைச்ச தெருமுக்குப் பிள்ளையார் மாதிரி, புதுசா முளைச்ச மக்கள் முதல்வருக்காக அங்கங்க கடையடைப்பும் கலவரமுமா இருக்குதே! அதைக் கேட்டிருக்காப்ல!" என்று சேர்ந்து கொண்டார் சுந்தரம்.

"ஊரே பத்தியெரிஞ்சாலும் நம்மாளுங்-களுக்கு ரெண்டே ரெண்டு கடை கண்டிப்பா திறந்திருக்கணும்! ஒன்னு ஒயின் ஷாப்பு, ரெண்டாவது டீக்கடை! அதனால நம்ம கடைய அடைக்கச்சொல்லி யாரும் மிரட்ட-மாட்டாங்க சார்!" என்றபடி திரும்பிய சந்தானத்தை இழுத்துப் பிடித்து கழுத்தில் கத்தியை வைத்தார் சுந்தரம்.
"அதுசரி, மக்களே முன்வந்து அடைக்கிறதால்ல டிவிபெட்டியில சொல்றாங்க?" என்று ஊடகத்தைத் துணைக்-கழைத்தார் மதி.
"அவனவன் சொந்த மச்சினிச்சி கல்யாணத்துலகூட கலந்துக்காம கடை நடத்துறதாலதான் வீட்டுக்குள்ள ஏகப்பட்ட பிரச்சினையைச் சந்திச்சு சமாளிச்சுக்கிட்டு இருக்குறான்! இதுல யாரு தோழரே மனமுவந்து கடையடைக்கிறாங்க?!" என்று சுந்தரம் பதில் சொல்லத் தொடங்கிவிட்டார் வேலை பார்த்தபடியே!
"ஏன் இப்படிச் சொல்றீங்க? அங்க அங்க மொட்டையெல்லாம் வேற போடுறாங்களே!"
"மொட்டை போடுறது யார்னு கவனிச்சுப் பாருங்க... ஊர்ப் பணத்தை மொட்டையடிச்சு தன்னோட குடும்பத்தை வளர்க்கறவனுங்களாத்-தான் இருப்பானுங்க! பெத்த தாயிக்குக் கஞ்சி ஊத்தாதவனுங்களா மத்த தாய்ங்களுக்காக உருகிடப் போறானுங்க?!"
"நீங்க சொல்றதும் சரிதான்! இதுல என்ன விசயம்னா இந்தப் புரட்டாசி மாசத்துல கவிச்சி வாடையே ஆகாதுன்னு சொல்லிட்டு மூக்கைப் பொத்திக்கிட்டு திரியிற அவாள்தான் இப்போ "ஜாமீன் கிடைச்சுடுத்தா? ஜாமீன் கிடைச்-சுடுத்தா?"ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை கேட்டுட்டுத் திரியுறாங்க! அவா ஆத்துக்-குள்ளயும் மீன் நுழைஞ்சுடுச்சு பார்த்தியா?!"
"ஆத்துக்குள்ள மட்டும்தான் அவாளுக்கு அபச்சாரம்! ஃபாஸ்ட் புட் கடைப்பக்கம் போயிப் பாருங்க... ஆளோட ஆளா அவாளும் சேர்ந்து வெளுத்துக் கட்டிக்கிட்டு இருப்பாங்க! அதுசரி, வாராவாரம் எதாவது பேஸ்புக் கலாட்டா, கிசுகிசுன்னு சொல்வீங்களே, இந்த வாரத்துக்கு ஏதாவது இருக்கா சார்?" என்று மீண்டும் கேப்பில் சிக்கன் வெட்டினார் சந்தானம்.
"இல்லாமலா தம்பி? இந்த டவுசர் போட்ட ஆர்.எஸ்.எஸ் பசங்க, பேஸ்புக்லயும் தங்களோட பிரிவினை விஷத்த டைமிங் பார்த்து எடுத்து விட்டிருக்கானுங்க!"
"அங்கயும் நுழைஞ்சாச்சா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி!" என்றபடி அடுத்த துண்டுப் பேப்பரைக் கிழித்தார் சுந்தரம்.
"ஆமா! அதுல ஒரு அறிவிப்பு, ஹிந்து சகோதரர்கள், இஸ்லாமியர்களின் கடைகளில் தீபாவளிப் பட்டாசு, ஜவுளியெல்லாம் வாங்கக்-கூடாதுன்னும், நம்ம ஹிந்துக்களோட பணத்துலதான் இஸ்லாமியர்கள் கல்லாக் கட்டி, தீவிரவாதத்தைப் பரப்புறாங்கன்னும் கிளப்பி விட்டுருக்கானுங்க!" என்றார் மதி.
"அப்ப, அம்புட்டுப் பேரும் இனிமேல் கார், டூவீலரையெல்லாம் ஓட்டிட்டுப் போகாமல் உருட்டிட்டுப் போகச்சொல்லுங்க! பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணெய்னு அம்புட்டும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து தான வருது! இதுல இவனுங்களில் பாதிப் பேர் அரபு நாட்டுலயும், கிறிஸ்தவ நாட்டுலயும்தான் சம்பாத்தியமே பண்ணிட்டு இருப்பானுங்க! அந்தத் துட்டை வச்சுக்கிட்டு இஸ்லாமியர்-களை எதிர்க்குறானுங்களா-மாக்கும்! முதலில் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கே பொழப்புக்காகப் போகக்கூடாதுன்னு இவனுங்களுக்குத் தடா போடணும் தோழர்!" என்றார் சுந்தரம்.
அடானி பிளைட்டுல பறந்து பறந்து பிரதமர் ஆனாரே மோடி! அவரு பேசாம புஷ்பக விமானத்தையில்ல தேடியிருக்கணும். சுந்தரம் கத்தி வைப்பதற்குள் கமெண்ட்டை வைத்தார் சந்தானம்.
"நீங்க இப்படிச் சொல்றீங்க தம்பி, ஆனால் மேக் இன் இந்தியான்னு மோடி அம்புட்டு வெளிநாட்டுக்காரங்களையும் இந்தியாவுக்குல்ல கூப்பிடுறாரு!"
"இவங்களை அவரோட "க்ளீன் இந்தியா" திட்டத்தை வைத்தே இந்தியாவிலிருந்து துடைச்சு எறியணும் சார்! அப்பத்தான் நாடு உருப்படும்!" என்று தாமரை படத்தைத் துடைத்து எறிந்தார் சுந்தரம்.
"சரியாச் சொன்னீங்க! அதுசரி, கருப்புப் பணத்தைக் கொண்டுவரப்போறேன், சுயராஜ்ஜியத்தைக் கொண்டுவரப் போறேன்னு சொல்லிட்டு, கடைசியில் மேக் இன் இந்தியான்னு வெளிநாட்டுக்காரங்களுக்குத்-தான் கம்பளம் விரிக்குறாங்க! கோவிலை விட்டுட்டு கழிப்பிடங்களைக் கட்டுங்கன்னு சொன்னால், அதைக் கண்டுக்காமல் இப்போ "க்ளீன் இந்தியா"ன்னு திட்டத்துக்காக கையில துடைப்பத்தோட போஸ் கொடுக்குறாங்க! ஏற்கெனவே அரசியலுக்காக துடைப்பத்தைத் தூக்குனவங்க கதி என்னாச்சுன்னு தெரிஞ்சுமா இப்படிப் பண்றாங்க?!
"துடைப்பத்தால குப்பையை அள்ளுவாங்-களோ என்னவோ சார், கண்டிப்பா கொத்துக்கொத்தா பணத்தை அள்ளப்-போறாங்க! லட்சம் கோடி ப்ராஜெக்டாமே சார்! இதுல அம்பானிய வேற கூட்டுச் சேர்த்தால் விளங்குமா?!"
"காங்கிரஸோட திட்டத்தையெல்லாம் பெயரை மாத்தி, தூசி தட்டி இவங்க பெயருக்கு மாத்துறதை மட்டும்தான் கனகச்சிதமா பண்ணிட்டு வர்றாங்க! மங்கள்யான் திட்டம்-கூட காங்கிரஸோட முயற்சிதான்! இப்ப பெயர் வாங்கிக்கறது என்னவோ இவங்கதான்! கலைஞரோட திட்டங்களில் இந்த அம்மா பெயர் வாங்குற மாதிரிதான் இதுவும்! இதுல மங்கள்யான் திட்டச் செலவு ரொம்பக் கம்மின்னு பெருமை வேற அடிச்சுக்கறாங்க!"
"அதுசரி, மங்கள்யானுக்குக் கம்மியா செலவு பண்ணிட்டு, காந்திக்கு மாற்றா இவங்க பில்ட் அப் பண்ற பட்டேலோட சிலைக்கு ஆயிரம் கோடிகள் செலவுல்ல பண்றாங்க! கங்கையில பல ஆயிரம் கோடிய கொட்டப்-போறோம்ன்றாங்க!"
"கங்கையைச் சுத்தப்படுத்தப்போறோம்னு ஆரம்பிச்சாங்க, அடுத்து கோதாவரி, யமுனான்னு வரிசையா கிளப்பிட்டு இருக்காங்க! ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு-சொல்வாங்க! இவங்க என்னடான்னு-ஆறுகளை வச்சே அளவில்லாமல் ஆட்டையப் போட அய்டியா பண்றானுங்க!" என்று வேலையை முடித்து சந்தானத்தை எழுப்பி-விட்டார் சுந்தரம்.
"இதுக்குத்தான் ஆறுங்களுக்கு பொண்ணுங்கபெயரை வைக்கவே விட்டிருக்கக் கூடாது! ஒரு ஜோசப்பு, கந்தன், மணிமாறன், சந்தானம்னு ஆம்பளைப் பசங்க பெயரை வச்சிருந்தா ஆறுங்களைக் கண்டுக்கவே மாட்டானுங்க!"
"பொண்ணுங்கன்னு சொன்னதுக்கப்புறம்-தான் ஒரு விஷயம் நினைவுக்கு வருது, நம்ம ஜேசுதாஸ், பொண்ணுங்க ஜீன்ஸ் போடுறது கலாச்சாரத்துக்குப் பொருத்தமில்லாததுன்னு பேட்டி குடுத்து மாட்டிக்கிட்டாரு பார்த்தியா தம்பி?"
"இவருக்கெதுக்கு சார் வேண்டாத வேலை? நம்மளை மாதிரி தினமும் ஷேவிங் பண்றதை விட்டுட்டு இவரும் பெரியார் மாதிரி தாடி விட்ட பின்னாலதான் கேரளாவுல பலரும் இவரை ஒரு முன்மாதிரியா வச்சுக்கிட்டு தாடி வளர்க்கறாங்க! அதுக்காக தாடி வளர்க்கறது கலாச்சாரச் சீர்கேடுன்னா நாம சொல்றோம்? அவங்கவங்களுக்கு எது சவுகரியமோ அதைச் செஞ்சுட்டுப் போறாங்க! இவருக்கு என்னவாம்?!" என்று சட்டையை உதறிப் போட்டுக்கொண்டார் சந்தானம்.
"இதுலயும் நுண்ணரசியல் இருக்கு. ஜேசுதாஸ் மட்டுமா? அடிக்கடி இப்படி குரல் பலர்ட்ட இருந்து வரும். பூணூல் போடுறதும், குடுமி வைக்கிறதும் நாமத்தைப் போட்டுக்-கறதும், நான் அவா இல்ல இவான்னு காட்டிக்கறதுக்காக இருக்கும்! ஆனால் ஜீன்ஸ்  மாதிரி ட்ரெஸ்ல அத்தனை பேரும் ஒரே மாதிரி ஆயிடுறாங்க! குறிப்பா, அவாளுக்குன்னே இருக்குற யூனிபார்மெல்லாம் மாறிப்-போகுதில்ல! அந்த வயித்தெரிச்சல் இருக்காதா என்ன?!"
"சரியாச் சொன்னீங்க சார்! அந்த அம்மாவை ஆதரிச்சு போஸ்டர் ஒட்டுறேன் பேர்வழின்னு கர்நாடக நீதிபதியைத் திட்டி அவங்களே ஆப்பு வச்சுக்கிட்ட ஆளுங்கட்சி மாதிரி ஆயிடுச்சே ஜேசுதாஸோட நிலையும்! இதுக்குத்தான் சார், எதையுமே ப்ளான் பண்ணிப் பண்னணும்கறது!"
"ஹஹஹ! :-)"

No comments:

Post a Comment