Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 14, 2015

தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் கறி


தேவையானபொருள்கள் :
தாளிக்க தேவையானவை :
எண்ணெய்                  -      ஒரு மேஜைக்கரண்டி
பட்டைஏலம்கிராம்பு       -      தலா இரண்டு
கொத்துமல்லித்தழை        -      கால் கட்டு
புதினா                     -      சிறிது

 வேகவைக்க தேவையானவை
ஆட்டுக்கால்                -      1/2 கிலோ
பெரிய வெங்காயம்          -      3
தக்காளி                    -      2 (பெரியது)
பச்சை மிளகாய்             -      2
மஞ்சள்தூள்                -      1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது        -      2 தேக்கரண்டி
மிளகு தூள்                 -      ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள்              -      1/2 தேக்கரண்டி
மல்லித்தூள்                -      3 மேஜைக்கரண்டி
தேங்காய்ப் பால்            -      அரை குவளை (டம்ளர்)
பாதாம்                     -      எட்டு
மிளகுத்தூள்                -      1 தேக்கரண்டி (கடைசியில் சேர்க்க)
உப்பு                       -      தேவையான அளவு
செய்முறை :
*ஆட்டுக்காலை சுத்தமாக கழுவி தண்ணீரை வடிக்கவும். 
*பாதாமை வெந்நீரில் ஊறவைத்து தோல் நீக்கி அரைத்து தேங்காய்ப் பாலுடன் சேர்க்கவும். 
*சுத்தம் செய்த ஆட்டுக்காலுடன் வேகவைக்க தேவையான பொருள்களைச் சேர்க்கவும். 
*ஆட்டுக்காலை அனைத்து மசாலாக்களுடனும் சேருமாறு நன்கு பிசறி பத்து நிமிடம் ஊற வைக்கவும். 
*குக்கரில் நான்கு குவளை (டம்ளர்) தண்ணீர் அல்லது ஆட்டுக்கால் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் உற்றி கொதிக்க விடவும். 
*கொதி வந்ததும் குக்கர் மூடியைப் போட்டு வெயிட் போட்டு தீயை நடுத்தரமாக எரியவிடவும். இல்லையென்றால் குழம்பு தெறிக்கும். நான்கு அல்லது ஐந்து விசில் வரை வேகவிடவும்.
*பிறகு தீயை குறைத்து (சிம்மில்) வேகவிடவும். ஆட்டுக்கால் இளசானதாக இருந்தால் 20 நிமிடத்திலும் இல்லையென்றால் 30 நிமிடத்திலும் வெந்துவிடும். 
*வெந்தபிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்ப் பால் பாதாம் கலவையை ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும். பிறகு ஒரு கரண்டி மிளகு தூள் சேர்க்கவும். 
*தனியே தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து கொதித்துக் கொண்டிருக்கும் ஆட்டுக்கால் குழம்பில் சேர்த்து இறக்கவும். 
* இப்போது சுவையான தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் கறி ரெடி!!!!!!!!!!
 *சப்பாத்திரொட்டிபரோட்டாஇட்லிஇடியாபம்தோசைஆப்பம்நெய் சோறு ஆகிய அனைத்திற்கும் இதை தொட்டு கொள்ளலாம்.

No comments:

Post a Comment