Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, July 6, 2012

அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து


 
 
Wise Sayings By Famous People
நீங்கள் வாழ்வில் நல்ல வாய்ப்பை தவறவிட நேர்ந்தால்
கண்களுக்கு கண்ணீர் திரையிட்டுக் கொள்ளாதீர்கள்......

அதன் மூலம் உங்கள் முன்னே இருக்கும் இன்னொரு
நல்ல வாய்ப்பும் தெரியாமல் போகக்கூடும் ......
Wise Sayings
 By
 Famous People
பிறரது வேலையில் குற்றம் கண்டுபிடிப்பது மிக எளிது.
ஆனால் நம் வேலையில் குற்றம் கண்டுபிடிப்பது மிகக் கடினம்.....

நீங்கள் நடக்கும் கட்டாந்தரைக்கு கம்பளம் விரிக்க நினைப்பதை விட
உங்கள் கால்களுக்கு செருப்பு போட்டுக்கொள்வது நன்று ......
Wise Sayings By Famous People
தவறுகள் நிகழ்கையில் வலி மிகுந்ததாகும்.....

காலப்போக்கில் தவறுகளால் கண்ட படிப்பினைகள்
உங்களின் வெற்றிக்கு பாதை வகுத்து கொடுக்கும்......
Wise Sayings By Famous People
உங்களை எக்காரணம் கொண்டும் உலகில் எவருடனும்
ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.....
அது உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் அவமரியாதையாகும்.....

Wise Sayings By Famous People
ஒவ்வொரு வெற்றிபெற்ற மனிதனுக்கு பி
ன்னாலும்
ஒரு வலிமிகுந்த உண்மைக் கதை இருக்கும்......

ஒவ்வொரு வலிமிகுந்த கதைக்கும் மகிழ்ச்சியான,
வெற்றிகரமான முடிவே இருக்கும்.....

வலியை ஏற்றுக்கொள்
வெற்றியை எட்டிப்பிடி.....

Wise Sayings By Famous People
தோல்வி அடைகையில் உறுதியாயிறு
வெற்றி பெறுகையில்
அமைதியாயிரு.....


தங்கத்தை உருக்கினால் தான் நகை செய்ய முடியும்.
பித்தளையை அடித்தால் தான் கம்பி செய்ய முடியும்.

கல்லை செதுக்கினால் தான் சிலை செய்ய முடியும்.
அதீத துயரம் அனுபவித்தவனுக்கே வாழ்கையின் அருமை தெரியும்.




Wise Sayings By Famous People
ஒரு தவறான தொடக்கத்தை மீண்டும் பின்னால்
சென்று திருத்துவது கடினம்

ஆனால் யார் வேண்டுமானாலும் திட்டமிட்டு செயலாற்றுவது
மூலம் வெற்றியை அடையலாம்......
Wise Sayings By Famous People
தீர்வுகாணக் கூடிய சோதனை குறித்து
கவலை கொள்ளத் தேவையில்லை......

தீர்வேயில்லாத சோதனை குறித்து
கவலை கொண்டு ஆகப்போவது ஏதுமில்லை.....

Wise Sayings By Famous People
சாவியில்லாத பூட்டுக்களை யாரும் தயாரிப்பதில்லை.
அது போலவே
தீர்வே இல்லாத சோதனைகளை
கடவுள் மனிதனுக்கு கொடுப்பதில்லை......
Wise Sayings By Famous People

முகத்தை ஒளித்துக் கொள்வதனால் எதுவும் ஆகப்போவதில்லை.
ஆனால்
பிரச்சனையை முகம் கொண்டு
எதிர்நோக்குவதால்எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கின்றன...........
யாரை பற்றி
யும் குற்றம் சொல்வதைவிட
நம்மில் குற்றம் இருந்தால் அதை மாற்றிக்
கொள்வது மூலம் சமாதானம் கிடைக்கிறது .....
இணையத்திலிருந்து
Engr.Sulthan

No comments:

Post a Comment