Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, December 1, 2013

மங்லோரியன் சிக்கன் ரெசிபி: கோரி ரொட்டி கிரேவி


மங்லோரியன் சிக்கன் ரெசிபி: கோரி ரொட்டி கிரேவி
தென்னிந்திய உணவுகளில் மங்லோரியன் ரெசிபி மிகவும் பிரபலமானது. அதிலும் அசைவ உணவுகள் தான் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது அத்தகைய மங்லோரியன் ரெசிபிகளில், சிக்கனில் சூப்பராக இருப்பது என்னவென்றால், அது கோரி ரொட்டி தான். என்ன பெயர் வித்தியாசமாக இருக்கிறதென்ற பார்க்கிறீர்களா? சாதாரணமான பெயர் தான். அதாவது கோரி என்றால் சிக்கன், ரொட்டி என்றால் சப்பாத்தி என்று அர்த்தம். ரொட்டி எப்போதும் சற்று கடினமாக இருக்கும். அதனை சிக்கன் கிரேவியுடன் தொட்டு சாப்பிட்டால், சற்று மென்மையாகிவிடும். எனவே தான் இதற்கு இந்த பெயர் வந்தது. இப்போது அந்த கோரி ரொட்டியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ (சுத்தமாக கழுவியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப் (கெட்டியானது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
வரமிளகாய் - 4
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
புளி தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
பின்னர் வதக்கி இறக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயப் பேஸ்ட், மஞ்சள் தூள், மல்லி தூள், புளி தண்ணீர், தேங்காய் பால் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து, கொதிக்க விட வேண்டும்.
மசாலா கொதித்ததும், அதில் சிக்கன் துண்டுகளை போட்டு, சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, மூடி போட்டு சிக்கன் வேகும் வரை கொதிக்க விட்டு, மசாலா ஓரளவு கெட்டியான பின் இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கோரி ரோட்டி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி, ரொட்டி என்னும் சப்பாத்தியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment