Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, September 29, 2014

எந்ததெந்த மண் வகைகளில் எந்தெந்த பயிர்கள் விளையும்?




கந்தக பூமி:

இந்த மண் சந்தன நிறத்தில் இருக்கும். இதில் சோளம், கேழ்வரகு, பருத்தி, தினை, கம்பு, ஆமணக்கு, அவரை, பழமரம், கிராம்பு, மிளகு, ஏலம் மாதிரியான பயிர்கள் விளையும்.

கருமணல் பூமி:

கருமணல் கலந்த பூமியில் கரும்பு, சாமை, தட்டைபயிறு, முருங்கை போன்ற சில பயிர்கள்தான் நன்றாக வளரும்.

சாம்பல் நிற பூமி:

சாம்பல் நிற மண்ணில் வெங்காயம், புகையிலை, வாழை, பருத்தி, நிலக்கடலை நன்றாக வளரும்.

செம்மண் பூமி:

செம்மண்ணில் பருத்தி, சோளம், கம்பு, அவரை, துவரை மாதிரியான பயிர்களும், பல வகையான பழமரங்களும் நன்றாக வளரும்.

வண்டல் பூமி:

வண்டல் மண்ணில் பருத்தி, சோளம், கரும்பு, கம்பு, நெல், மிளகாய், கோதுமை, ராகி, வாழை, மஞ்சள், பழமரம் போன்ற அனைத்தும் வளரும்.

கரிசல் பூமி:

கரிசல் மண்ணில் பருத்தி, சோளம், கடலை, கோதுமை, தினை, கேழ்வரகு, கரும்பு, கொத்தமல்லி நன்றாக வளரும்.

No comments:

Post a Comment