Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, November 6, 2014

ரசகுல்லா/ ரசமலாய்


தேவையான பொருள்கள்:
ரசகுல்லா:பால் – 1 லிட்டர்
எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர்
சர்க்கரை – 400 கிராம்
மைதா – 25 கிராம்
ரோஸ் எசன்ஸ் – 2, 3 துளிகள்
தண்ணீர் – 2 லிட்டர்

ரசமலாய்:
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன்
ஏலப் பொடி
முந்திரி, பிஸ்தா, பாதாம் – தலா 4
குங்குமப் பூ
 
rasagulla
செய்முறை:
ரசகுல்லா:
  • ஒரு பெரிய பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி, நன்றாகக் கொதிவரும்போது ஒரு மூடி எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் கலக்கவும்.
  • உடனே பால் திரிந்துவிடும். இந்தப் பாலை, ஒரு மெல்லிய துணி அல்லது பனீர் வடிகட்டியில் கொட்டி, வாயைக் கட்டித் தொங்கவிடவும். எதற்கும் பனீர் மூட்டையையும் ஒரு முறை குழாயடியில் நீட்டிக் கழுவினால் வினிகர் அல்லது எலுமிச்சையின் வாசனை போய்விடும்.
  • இரண்டு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்து சக்கை(பனீர்) மட்டும் நிற்கும்.
  • இந்தப் பனீருடன் மைதா மாவைச் சேர்த்து, சுமார் 15 நிமிடங்கள் நன்றாகப் பிசைந்து, சுமார் 10லிருந்து 15 சம உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • சர்க்கரையுடன் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி, சர்க்கரை கரைந்து, நன்றாகக் கொதிக்கும் போது, ஒரு டேபிள்ஸ்பூன் பாலை விடவும். அழுக்கு இருந்தால் நுரைத்துக் கொண்டு மேலே வரும். அதை நீக்கவும்.
  • இப்போது அடுப்பை நன்றாக எரியவிட்டு, ரோஸ் எசன்ஸ் சேர்த்து, மெதுவாக பனீர் உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் போடவும்.
  • 5 நிமிடங்கள் கொதித்த பிறகு, அதில் ஒரு கரண்டி குளிர்ந்த நீர் விடவும். இதனால் கொதி அடங்கி மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும்.
  • மீண்டும் ஒரு கரண்டி குளிர்ந்த நீர் விட்டு கொதிக்கவிடவும். இப்படியே 5,6 முறை செய்வதற்குள் ரசகுல்லாக்கள் நன்றாக ஊறி மேலே வந்திருக்கும். (ஒரேயடியாக கொதி நிலையிலேயே வைத்தால் தனியாகப் பிரிந்துவிடும்.)
  • அடுப்பிலிருந்து இறக்கி, பாகிலிருந்து ரசகுல்லாக்களை தனியாக எடுத்து ஃபிரிட்ஜில் குளிரவைக்கவும். அல்லது சிரப்புடனே ஃப்ரிட்ஜில் குளிர வைத்து சாப்பிடலாம்.
rasamalai 1
ரசமலாய்:
  • 2 முந்திரிப் பருப்பை பொடியாக்கிக் கொள்ளவும். .
  • ஒரு லிட்டர் பாலை அரை லிட்டராகக் கொதிக்க வைத்துக் கொள்ளவும். கறந்த பாலாக இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் பாக்கெட் பாலே உபயோகிக்கலாம்.
  • பாதி கொதிக்கும் போதே சர்க்கரை, ஏலப் பொடி, முந்திரி விழுது சேர்த்துக் கொள்ளவும்.
  • பால் குறைந்து, அரையளவு ஆகி, லேசாகத் திரிதிரியாக வர ஆரம்பிக்கும்போது, அடுப்பை அணைத்து விடவும்.
  • ரசகுல்லாக்களை நீரை ஒட்ட வடித்து ஒரு அகலமான பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். (ரசகுல்லா உருண்டையாகச் செய்யலாம். ஆனால் ரசமலாய் செய்ய இருப்பதானால் லேசாக கைநடுவில் வைத்து அழுத்தி சிறிது தட்டையாக ஆக்கிக் கொள்ளவும்.)
  • குறுக்கிய பாலைச் சேர்த்து, மேலாக பொடிப் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகள், குங்குமப் பூ தூவி, குறைந்தது 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும்.
rasamalai 2

No comments:

Post a Comment