ஜிகிர்தண்டா 
(இதயத்தை குளிர வைக்கும் பானம்) 
 
 
தேவையான 
பொருட்கள் 
பால் – ஒரு லிட்டர் 
சர்க்கரை – 8 டேபிள் ஸ்பூன் 
கடற்பாசி – 4 டேபிள் ஸ்பூன் 
ரோஸ் சிரப் – 1 டேபிள் ஸ்பூன் 
நன்னாரி ஸிரப் – 1 டேபிள் ஸ்பூன் 
ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) – 1 
பால் கோவா – 2 டேபிள் ஸ்பூன் 
செய்முறை 
* ஒரு 
லிட்டர் பாலை, 
சர்க்கரை சேர்த்து அடிகனமான வாணலியில் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் 
கலர் 
சேர்க்கவும். 
* பாலை 
அரைலிட்டராக சுண்ட 
வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் 6 மணி 
நேரங்கள் வைக்கவும். 
* கடற்பாசியை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி 
நேரம் 
வைக்கவும். 2 மணி 
நேரம் 
கழித்து ஜெல்லி போல 
உள்ள 
`சைனா 
கிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி 
நேரம் 
குளிர 
வைக்கவும். 
* குளிர்ந்த பாலை 
முதலில் நீளமான ஒரு 
கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஊற்றவும். 
* இப்போது பாலின் மேல் 
ஜெல்லிகள் போல 
உள்ள 
சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும். 
* பிறகு 
ரோஸ் 
ஸிரப், நன்னாரி ஸிரப் 
ஊற்றவும். 
* தொடர்ந்து வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் 
மேல் 
பரவலாக பால்கோவாவைத் தூவி 
ஜில்லென்று கொடுக்கவும். 
* வெயிலில் தளர்ந்த உடலைக் குளிரவைத்து ஆனந்தத்தில் ஆழ்த்தி மனதிற்கு இதமளிக்கும் ஜில் 
ஜில் 
ஜிகிர்தண்டா தயார். 
No comments:
Post a Comment