Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, January 5, 2014

மாரடைப்புக்கு ‘ஸ்டென்ட்’ சிகிச்சை !!

Photo: மாரடைப்புக்கு ‘ஸ்டென்ட்’ சிகிச்சை !!

யாருக்காவது மாரடைப்பு வந்து விட்டால் நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர் “ஆஞ்சியோ பண்ணிடலாம்; ‘ஸ்டென்ட்’ வைத்து விட்டால் போதும்” என்பார்.

‘ஸ்டென்ட்’ சிகிச்சை உண்மையில் வரப்பிரசாதம் என்றுதான் கூற வேண்டும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க ‘ஸ்டென்ட்’ சிகிச்சை கைக்கொடுக்கிறது என்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உறுதி செய்துள்ளனர்.

இந்தியாவில் பெரும்பாலும், இதய ரத்த நாளங்களில் அடைப்பை நீக்க ‘ஸ்டென்ட்’ பயன்படுத்துகின்றனர் டாக்டர்கள். அதில் நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அதன்பின் தேவைப்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்கின்றனர். பெரும்பாலானோருக்கு ‘ஸ்டென்ட்’ பொருந்தியபின் மருந்து மாத்திரையில் சீராக்கி விட முடிகிறது.

‘ஸ்டென்ட்’ என்றால் என்ன? ‘ஸ்டென்ட்’ என்பது மிகச்சிறிய வலைகுழாய்; உடலில் எந்த பாகத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டாலும், ரத்த ஓட்டத்தை சீராக்க இந்த வகை ட்யூப், ரத்த குழாயில் செருகப்படுகிறது. இதற்காகத்தான் ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ என்ற சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆஞ்சியோவின் முக்கிய கட்டம்தான் ‘ஸ்டென்ட்’ வைப்பது.

ரத்தக்குழாயில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு மட்டுமின்றி, ரத்தக்குழாய் பலவீனமாக இருந்து, அதனால் அது வெடிப்பதை தடுக்கவும் ‘ஸ்டென்ட்’ பயன்படுத்தப்படுகிறது. உலோகம், ஒருவகை இழைகள், மூலம் ‘ஸ்டென்ட்’ தயாரிக்கபடுகிறது. சிலவகை ஸ்டென்ட்கள், மருந்து தடவியதாகவும் இருக்கும். இதயத்துக்கு பாதுகாப்பு அவசியம்.

இதயத்தின் உள்ள இரத்தக்குழாய்கள் சீராக இருப்பது முக்கியம். அதில் ரத்தம் செலுத்தப்பட்டு, பின்னரே மற்ற உறுப்புகளுக்கு செல்கிறது. இதய ரத்தக்குழாய்கள் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது, நெஞ்சுவலி, அதைத்தொடர்ந்து மாரடைப்பு ஏற்படுகிறது. இதைத்தான் ‘ஆஞ்சினோ’ என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இதைத்தடுக்க ஆன்ஜியோ பிளாஸ்டி செய்யப்படுகிறது. ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டவுடன், ரத்த நாளத்தில் அடைப்பு நீக்கப்படுகிறது. வலைட்யூப் வழியாக ரத்தம் சீராக பாய்கிறது. ‘ஸ்டென்ட்’ பொருத்தாவிட்டால், மீண்டும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். பக்கவாதத்தை தடுக்கும் வலது, இடது கழுத்தில் ‘கரோடிட்’ என்ற ரத்தக்குழாய்கள் உள்ளன. இதயத்தில் இருந்து செலுத்தப்படும் ரத்தம் இந்த ரத்தநாளங்கள் வழியாகத்தான் மூளைக்கு செல்கின்றன. இதிலும் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதைத்தடுக்கவும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை பயன்படுத்தபடுகிறது. ‘ஸ்டென்ட்’ வைத்தவுடன் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகி, பக்கவாதம் தவிர்க்கப்படுகிறது. இதய ரத்தக்குழாய்களில் பலன் தரும் ‘ஸ்டென்ட்’, பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது என்பதை அமெரிக்க, ஐரோப்பிய நிபுணர்கள் சமீபத்தில் உறுதி செய்துள்ளனர்.
யாருக்காவது மாரடைப்பு வந்து விட்டால் நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர் “ஆஞ்சியோ பண்ணிடலாம்; ‘ஸ்டென்ட்’ வைத்து விட்டால் போதும்” என்பார்.


‘ஸ்டென்ட்’ சிகிச்சை உண்மையில் வரப்பிரசாதம் என்றுதான் கூற வேண்டும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க ‘ஸ்டென்ட்’ சிகிச்சை கைக்கொடுக்கிறது என்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உறுதி செய்துள்ளனர்.

இந்தியாவில் பெரும்பாலும், இதய ரத்த நாளங்களில் அடைப்பை நீக்க ‘ஸ்டென்ட்’ பயன்படுத்துகின்றனர் டாக்டர்கள். அதில் நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அதன்பின் தேவைப்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்கின்றனர். பெரும்பாலானோருக்கு ‘ஸ்டென்ட்’ பொருந்தியபின் மருந்து மாத்திரையில் சீராக்கி விட முடிகிறது.

‘ஸ்டென்ட்’ என்றால் என்ன? ‘ஸ்டென்ட்’ என்பது மிகச்சிறிய வலைகுழாய்; உடலில் எந்த பாகத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டாலும், ரத்த ஓட்டத்தை சீராக்க இந்த வகை ட்யூப், ரத்த குழாயில் செருகப்படுகிறது. இதற்காகத்தான் ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ என்ற சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆஞ்சியோவின் முக்கிய கட்டம்தான் ‘ஸ்டென்ட்’ வைப்பது.

ரத்தக்குழாயில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு மட்டுமின்றி, ரத்தக்குழாய் பலவீனமாக இருந்து, அதனால் அது வெடிப்பதை தடுக்கவும் ‘ஸ்டென்ட்’ பயன்படுத்தப்படுகிறது. உலோகம், ஒருவகை இழைகள், மூலம் ‘ஸ்டென்ட்’ தயாரிக்கபடுகிறது. சிலவகை ஸ்டென்ட்கள், மருந்து தடவியதாகவும் இருக்கும். இதயத்துக்கு பாதுகாப்பு அவசியம்.

இதயத்தின் உள்ள இரத்தக்குழாய்கள் சீராக இருப்பது முக்கியம். அதில் ரத்தம் செலுத்தப்பட்டு, பின்னரே மற்ற உறுப்புகளுக்கு செல்கிறது. இதய ரத்தக்குழாய்கள் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது, நெஞ்சுவலி, அதைத்தொடர்ந்து மாரடைப்பு ஏற்படுகிறது. இதைத்தான் ‘ஆஞ்சினோ’ என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இதைத்தடுக்க ஆன்ஜியோ பிளாஸ்டி செய்யப்படுகிறது. ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டவுடன், ரத்த நாளத்தில் அடைப்பு நீக்கப்படுகிறது. வலைட்யூப் வழியாக ரத்தம் சீராக பாய்கிறது. ‘ஸ்டென்ட்’ பொருத்தாவிட்டால், மீண்டும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். பக்கவாதத்தை தடுக்கும் வலது, இடது கழுத்தில் ‘கரோடிட்’ என்ற ரத்தக்குழாய்கள் உள்ளன. இதயத்தில் இருந்து செலுத்தப்படும் ரத்தம் இந்த ரத்தநாளங்கள் வழியாகத்தான் மூளைக்கு செல்கின்றன. இதிலும் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதைத்தடுக்கவும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை பயன்படுத்தபடுகிறது. ‘ஸ்டென்ட்’ வைத்தவுடன் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகி, பக்கவாதம் தவிர்க்கப்படுகிறது. இதய ரத்தக்குழாய்களில் பலன் தரும் ‘ஸ்டென்ட்’, பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது என்பதை அமெரிக்க, ஐரோப்பிய நிபுணர்கள் சமீபத்தில் உறுதி செய்துள்ளனர்.

No comments:

Post a Comment