Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, October 10, 2014

பசுப் பால்பண்ணை

 Edit

90058232பசுப் பால் பண்ணை – பயனுள்ள‍ தகவல்களுடன் ஓர் அலசல்
பால்பண்ணையின் பல்வேறு பொருளாதாரப் பண்புகளாவன
> ஒரு கன்றுப் பருவத்தில் பால் உற்பத்தி அளவு
>ஒரு பருவக்காலத்தில் பால்தரும் நாட் கள் / பால் உற்பத்திக் காலம்
> பால் உற்பத்தி நிலைத்தன்மை
> முதல் கன்று ஈனும் வயது
> சினைப் பருவம்
> பால் வற்றிய நாட்கள்
> அடுத்தடுத்த கன்றுகள் ஈனுவதற்கு இடை யே உள்ள இடைவெளி
> இனப்பெருக்கத் திறன்
> தீவனம் உட்கிரகிக்கும் நாள்
> நோய் எதிர்ப்புத் திறன்

1.ஒரு பருவத்தில் பால் உற்பத்தி அளவு
ஒரு கன்று ஈனும் பருவத்தில் பெறப்பட்ட மொத்தப் பால் உற்பத்தியே
ஒரு பருவ பால் உற்பத்தி ஆகும். பொதுவாக அயல்நாட்டு இனங்க ளை விட நம் நாட்டுப் பசுக்களில் உற்பத்தி குறைவு. இது மொத்தம் ஈன்ற கன்றுகள், பால் கறக்கும் இ டைவெளி மற்றும் பாலின் நிலை த்தன்மையைப் பொறுத்தது. முத ல் பருவத்திலிருந்து போகப்போக 3-4வது பருவம்வரை பால் உற்பத் தி 30 – 40 சதவிகிதம் அதிக ரிக்கிற து. அதன்பின்பு குறைய ஆரம்பிக் கும். இரு இனங்களுக்கிடையே பால் உற்பத்தியின் அளவை ஒப்பிட அதன் பால்உற்பத்திக் கொழுப்பு சரிசெய்யப்படவேண்டும். 4 சதவிகிதம் கொழு ப்பு சரிசெய்த பால்=0.4 மொத்த பால் +15 மொத் தக்கொழுப்பு கன்று ஈன்ற (Parturitio n ) பிறகு பால் உற்பத்தி அதிகரித்து ஈன்ற 2 – 4 வாரங்க ளுக்கு உற்பத்தி மிக அதிகமாக இருக் கும்.
இதுவே அப்பருவத்தின் (நிறை) அதிக உற்பத்தி அளவாகும். இந்த அதிக உற்பத்தி குறையா மல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொது வாக நம் இந்திய இனங்களில் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும்.
2.பால் உற்பத்திக் காலம்
ஒரு கன்றுப் பருவத்தில் பால் தரும் மொத்த நாட்கள் பால் உற்பத்திக் காலம் ஆகும். சராசரி பால் உற்பத் தி நாட்கள் ஒரு வருடத்திற்கு 305 நாட்கள் ஆகும். குறுகிய காலமாக இருந்தால் 33 நாட்கள் குறையும். கு றுகிய இந்திய இனங்கள் குறைந்த உற்பத்திக் காலமே கொண்டவை. சில இனங்களில் உற்பத்திக்காலம் அதிகமாக இருந்தாலும் பால் மிகக் குறைந்தளவே இருக்கும்.
3.பால் உற்பத்தியின் நிலைத்தன்மை.
அதிக உற்பத்தியால் பாலின் உற்பத்திக்காலம் குறையாமல் பார்த்து க் கொள்ளவேண்டும். முதல் 2-4 வார ங்களில் வரும் பாலின் உற்பத்தி வி ரைவில் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவதே நிலைத் தன்மை, பால் குறையும் தன்மை குறைந்தளவே இ ருக்குமாறு பராமரித்தல் அதிக உற்பத் திக்கு உதவும்.
4.முதல் கன்று ஈனும் வயது
அதிக நாள் உற்பத்திக்கு முதல் கன்று ஈனும் வயது முக்கியமான ஒன்று. இந்திய இனங்களில் முதல் கன்று ஈனும் வயது 3 வருடங்கள். கலப்பினங்களில் 2 வருடங்கள். எரு மை மாடுகளில் மூன்றரை வருடங் கள் ஆகும். முதல் கன்று ஈனும் வய து அதிகமாக இருந்தால் பால் உற்பத் தியும் அதிகமாக இருக்கும். ஆனால் மொத்தம் ஈனும் கன்றுகள் அளவு கு றைவதால் பால் பருவமும் குறையும்.
5.சினைக்காலம்
இது கன்று ஈன்று பால் வற்றிய பின்பும் அடுத்த கருத்தரிப்புக்கும் உள்ள இடைவெளியாகும். சரியான நேர த்தில் சினை எய்த வைத்தல் மன அழுத்த த்தைப்போக்கிப் பசுவை ஆரோக்கியமா க வைக்கும். மேலும் இனப்பெருக்க உறு ப்புக்கள் சரியான வயதில் தன்னிலை எய்தவும் இது உதவுகிறது. சராசரி சினை க்காலம் 60-90 நாட்கள். இந்நாட்கள் நீடி த்தால், அடுத்த கன்று ஈனுவதும் தள்ளி ப்போகும். அதே சமயம் மிகக் குறைவாக இருந்தாலும், பசுவின் ஆரோக்கியம் பா திக்கப்படும். உடனடி கர்ப்பத்தால் பால் உற்பத்தி குறையும். எனவே சரியான இடைவெளியுடன் இருத்தல் வேண்டும்.
6.பால் / மடி வற்றிய நாட்கள்
இது பால் கறப்பது நின்ற நாளிலிருந்து அடுத்தக் கன்று ஈனும் நாள் வரை உள்ள காலமாகும். முந்தய ஈற்றில் இழந்த ச த்துக்களைத்திரும்ப பெற்றுக்கொள்ள சிறிது ஓய்வு தேவை. இக்காலமானது இரண்டிலிருந்து இரண்ட ரை மாதங்கள் இருக்கலாம். இவ்வாறு போதிய இ டைவெளி இல்லையெனில் பசுவின் பால் உற்பத்தி படிப்படியாகக் குறைவதோடன்றி பிறக்கும் கன்று ம் , ஆரோக்கியமாக இருக்கா து.
7.கன்று ஈனும் இடைவெளி
அடுத்தடுத்த இரு கன்றுகள் ஈனுவ தற்கு இடையேஉள்ள இடைவெளி கன்று ஈனும் இடைவெளியாகும். மாடுகளில் ஆண்டுக்கு 1 கன்றும், எருமை மாடுகளில் 15 மாதங்களு க்கு ஒருகன்றும் ஈனுதல் வேண்டு ம்.கன்றுகளுக்கிடையே இடைவெ ளி அதிகமாக இருந்தால், அதன் மொத்தம் ஈனும் கன்றுகள் எண்ணிக்கை குறையும்.
8.இனப்பெருக்கத் திறன்
பசுவின் அதிகக்கன்றுகள்ஈனும்திறன் , அதன் இனப்பெருக்கத் திறனைப் பொ றுத்தது. இனப்பெருக்கத்திறன் மரபிய ல் குணாதிசயங்கள் மற்றும் சுற்றுச் சூழலைப்பொறுத்தமையும். பசுவின் இனப்பெருக்கத் திறனைமுதல் கன்று ஈனும் வயது, அடுத்தடுத்த கன்றுஇடை வெளி, சினையாகும் காலம் போன்றவ ற்றின்மூலம் அறியலாம். சிலமரபியல் பண்புகளால் ஒவ்வொரு கால்நடைக் கும் இத்திறன் மாறுபடுகிறது. சாதக மற்ற சூழ்நிலையில் குறைந்த பால் உற்பத்தி செய்யும் மாடுகள் அதிக உற் பத்தி உள்ள மாடுகள் அளவு பாதிக்க ப்படாது.
9.தீவனம் உட்கொள்ளும் எடுக்கும் மற் றும் உட்கிரகிக்கும் திறன்
மாடானது நிறைய தீவனம் உட்கொள்வ தோடு அதை நன்கு உட்கிரகித்துப் பாலா க மாற்றும் திறனுடையதாக இருக்க வே ண்டும்.
10.நோய்எதிர்ப்பு
இந்தியஇனங்கள் அயல்நாட்டு இனங்களை விட நோய் எதிர்ப்புத் திறன் மிகுந்தவையா க உள்ளன. கலப்பினச் சேர்க்கை மூலம் அயல் இனங்களில் இப்பண்பைப் பெறலாம்.

No comments:

Post a Comment