Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, December 30, 2013

தமிழ்நாட்டிலே முதல் முறையாக கருமுட்டை சேமிப்பு வங்கி


கோடி கோடியாக செல்வம் இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாத மனித வாழ்க்கை என்பது முற்றுப்பெறாத ஒன்றாகவே இருக்கும். மாட மாளிகை, செல்வ செழிப்பு, என்று மானுட உலகில் சகல செல்வங்களும் பெற்றிருந்தாலும் மழலை செல்வம் இல்லாதவர்களின் வாழ்க்கை என்பது கானல் நீருக்கு சமமானதாகும்.


பேர் சொல்ல ஒரு வாரிசு இல்லையே என்று ஏங்கும் தம்பதிகள் ஏராளமானோர் இருக்கையில் குழந்தை பேறை தள்ளி போடும் தம்பதிகளும் இன்றைய நவ நாகரீக உலகில் உள்ளனர். ஐ.டி. நிறுவனங்கள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் கம்பெனிகளில் பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வு சம்பள உயர்வு உள்ளிட்ட லட்சியங்களை மனதில் கொண்டு கர்ப்பம் தரிப்பதை விரும்புவதில்லை.

பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட தங்களது லட்சியங்கள் பூர்த்தியான பின்பே குழந்தையை பெற்றெடுக்க விரும்புகின்றனர். 27 வயதில் திருமணம் செய்த ஒரு பெண் தனது நிறுவனத்தில் பதவி உயர்வை பெற்றபின் 35, 37 வயதுக்குப்பின் கருத்தரிப்பது என்பது மருத்துவ உலகில் 100-க்கு 20 சதவீதம்தான் சாத்தியமாகும் என்பது மருத்துவ வல்லுனர்களின் கணிப்பாகும்.

27 வயதில் பெண்ணின் கரு முட்டையானது அதிக எண்ணிக்கையுடன் வீரிய மிக்கதாக இருக்கும். ஆனால் 35 வயதை கடந்த பெண்ணின் கரு முட்டை வளர்ச்சி என்பது குறைந்த எண்ணிக்கையில் வீரிய மற்று இருக்கும். இதனால் அவர்கள் கருவுரும் வாய்ப்பு 100-க்கு 20 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

குழந்தை பேறை தள்ளி வைக்கும் பெண்களுக்கு வரப் பிரசாதமாக தற்போது கரு முட்டை சேமிப்பு வங்கி வந்துள்ளன. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மிரக்கிள் அட்வான்ஸ்டு ரீபுரொடக்டிவ் சென்டரில் கரு முட்டை சேமிப்பு வங்கி உருவாக்கப்பட்டு உள்ளது.

கர்ப்பம் தரிப்பதை தள்ளி போடும் பெண்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் பெண்கள் ஆகியோரின் கரு முட்டைகள் இங்கு உறைய வைத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மிரக்கிள் அட்வான்ஸ்டு ரீபுரொடக்டிவ் சென்டரின் இயக்குனர் டாக்டர் பம்மி எஸ்.ஆர். மூர்த்தி கூறும் போது, நான் இங்கிலாந்து நாட்டில் கருவியல் துறையில் பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளேன். 25 ஆண்டுகள் இந்த துறையில் பணிபுரிகிறேன்.

வெளிநாடுகளில் உள்ளது போன்று கருத்தரித்தல் மருத்துவத்தில் நவீன சிகிச்சை முறையை நமது நாட்டு மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கில் 2008-ம் ஆண்டு கரு முட்டை சேமிப்பு மையம் தொடங்கப்பட்டது.

கரு முட்டை சேமிப்பு, சோதனை குழாய் குழந்தை, கரு முட்டைகள் முழு வளர்ச்சி ஆய்வகம் வசதி எங்களிடம் உள்ளது. கரு முட்டை சேமிப்பு வங்கி என்பது தமிழ்நாட்டில் எங்களிடம் மட்டுமே உள்ளது. திருமணத்துக்கு பின் 4, 5 வருடத்துக்கு பின் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்களின் கரு முட்டைகள் இங்கு சேமித்து வைக்கப்படும்.

மேலும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்கள், பெண்களின் கரு முட்டைகள் அல்லது சினை திசுவின் (ஓவரி) ஒரு சிறிய பகுதி சிகிச்சைக்கு முன்பாக எடுக்கப்பட்டு உறைய வைக்கப்படுகிறது. ரேடியேசன் சிகிச்சைக்கு பின் உடல் ஆரோக்கிய மடைந்த கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை பெற விரும்பினால் உறைய வைக்கப்பட்ட கரு முட்டைகள் அவரது சினைத்திசுவில் (ஓவரி) வைக்கப்பட்டு கருத்தரிப்பு சிகிச்சை நடைபெறும்.

இது போல் 4, 5 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்களுக்கு கரு முட்டை வங்கியில் சேமித்து வைத்துள்ள அவர்களது கரு முட்டை மூலம் கருத்தரிப்புக்கான சிகிச்சை அளிக்கப்படும். மேலும் வளர்ந்த கரு முட்டையில் உள்ள திசு பாய்மம் (சைட்டோபிளாசம்) வளர்ச்சியடையாத முட்டையில் செலுத்தி வீரிய மிக்கதாக மாற்றும் சிகிச்சை வசதியும் எங்களிடம் உள்ளது. இத்தகைய சிகிச்சை முறையில் 80 சதவீதம் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

தொடர்புக்கு: 044-26610809, 25321767, 9841772853
மாலை மலர் 

No comments:

Post a Comment