Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 3, 2013

இதயத் தமனி நோய்கள்


பெரியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இதயப்
பாதிப்புகள் பற்றி பார்க்கலாம்.
இதயத்தமனி நோய்கள்தான் பெரியவர்களை அதிக அளவில் பாதிக்கின்றன. இதயம், தான் இயங்குவதற்குத் தேவையான ரத்தம், உயிர்வளி,
ஹார்மோன்கள், உயிர்சத்துகள் ஆகியவற்றை வலைபோல் பின்னியுள்ள மூன்று வகையான ரத்தக் குழாய்களின் மூலமாகப் பெறுகின்றன. இந்த
வகையான ரத்தக் குழாய்களைத்தான் இதயத் தமனிகள் (CORONARY ARTERIES) என்கிறோம்.இந்த ரத்தக் குழாய்களின் வழியாக ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடினால்தான் இதயம் நன்கு செயல்பட முடியும்.
இதயம் ஒவ்வொரு
முறையும் சுருங்கி விரிந்து செயல்படும்போது நமது உடலில் உள்ள மொத்தம் 50 டிரில்லியன் ( Trillion) செல்களுக்குத் தேவையான ரத்தத்தை
ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளம் உள்ள ரத்தக் குழாய்களின் மூலமாகச் செலுத்துகின்றன.நமது உடலில் உள்ள கை, கால்கள் போன்ற புறப்பகுதிகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள், மிக நுண்ணிய குழல்களாக மாறுகின்றன. இந்த நுண்
குழல்கள், ஒரு மில்லி மீட்டர் உள்விட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் ஒரு பகுதி என்ற அளவில்தான் இருக்கும். இன்னும் சில பகுதிகளில்
நுண்குழல்களானது தலைமுடியின் குறுக்கு விட்டத்தில் நூறில் ஒரு பங்கு என்ற அளவில் மிக மிக நுண்ணியதாக இருக்கின்றன.
எந்த வகையான தீய பழக்கவழக்கங்களும் இல்லாமல்ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதனின் இதயத் தமனிகள் மெனபானத்தை
உறிஞ்சப்பயன்படும் குழல் அளவிலும் (DRINKING STRAWS) நெகிழ்ந்து விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதாகவும், ரத்தம் தங்கு
தடையில்லாமல் செல்லும் வகையிலும் இருக்கும்.
சாதாரண நிலையில் இப்படி நன்றாகச் செயல்படும் இதயத் தமனிகள் பல்வேறு காரணங்களால் பாதிப்புக்குள்ளாகி சிதைவடையக்கூடும். இதனால்
அவற்றின் நெகிழ்ந்து விரியும் தன்மையும் பாதிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சரிவர நடைபெறாத நிலை உருவாகும். இதன் விளைவாக இதயத்தின்
இயக்கமும் ஆரோக்கியமாக இருக்கிறது. இத்தகைய நிலையைத்தான் இதயத்தமனி நோய்கள் (CORONARY HEART DISEASES) என்கிறோம்.
இதயத்தமனி நோய்கள் ஏற்பட பலவகையான காரணங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் முக்கியமானவையாக ரத்தமிகு அழுத்த நோய் (Hyperˆenvion) உடல் பருமன் (Obaviˆy) அன்றாட உணவில் கொழுப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுதல், ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு அதிகமாதல் போன்றவற்றைச் சொல்லலாம்.
நன்றாகச் செயல்படும் இதயத் தமனிகளைத் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், போதுமான உடற்பயிற்சி செய்யாமை இருப்பது,
புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், மன இறுக்கம் போன்றவற்றால் நாமும் கொஞ்சம், கொஞ்சமாகச் சிதைத்து வருகிறோம்.
இதயத்தமனிகளில் உண்டாகும் சிதைவு மாற்றங்கள் சில நாள்களிலோ அல்லது சில வாரங்களிலோ ஏற்படுவதில்லை. படிப்படியாக பல
ஆண்டுகளாக உடலில் ஏற்படும் ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே இந்தப் பாதிப்பு உருவாகிறது. ரத்தக் குழாய்களின் வெளிப்பகுதிகளில் நடைபெறும்
இவற்றை நாம் முழுமையாக உணர முடிவதில்லை. திடீரென ஒரு நாள் நம்முடைய மார்புப் பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படும்
போதுதான் அதன் கொடுமையை உணர்கிறோம்.
இதயத் தமனிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக விளங்குவது ரத்தமிகு அழுத்த நோய். இந்த நோயால்
பாதிக்கப்பட்டவர்களின் இதயம் ஒவ்வொரு முறையும் அளவுக்கு அதிகமான அழுத்தத்தோடு ரத்தத்தைக் குழாய்களின் வழியே அனுப்பும். இந்த
அதிகப்படியான அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தமனிகளின் வெளிப்பகுதிகளில் சிதைவு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதயத் தமனிகள்
சிதைவடைவதால் அவற்றின் வெளிப்பகுதிகளில் அழற்சி (INFLAMATION) ஏற்படுகிறது. இதன் விளைவாக தமனிகளின் உள்பட்டமானது
காலப்போக்கில் கொஞ்சம், கொஞ்சமாகக் குறுகிவிடுகிறது. ஒருவர் அடிக்கடி புகைப்பிடிப்பவனாக இருக்கும்பட்சத்தில் அவருடைய இதயத்
தமனிகள் மேலும் சிதைவடைவதோடு நெகிழும் தன்மையை இழந்து சுருங்கிவிடுகின்றன. இதனால் இதயத் தமனிகளில் ரத்த ஓட்டம் கொஞ்சம்,
கொஞ்சமாகத் தடைபடுகிறது.
இவ்வாறு இதயத் தமனிகளில் ரத்த ஓட்டத்தைத் தடை செல்வதில் கொலஸ்ட்ராலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அடர்த்தி அதிகமான
கொழுப்புப் புரதம் (High Denviˆy Lipo proˆein-HDL) என கொலஸ்ட்ராலில் இரண்டு வகை உண்டு. இவற்றில் எல்.டி.எல். வகை
கொலஸ்ட்ரால்தான் இதயத் தமனிகள் அடைப்பில் முக்கியமான வில்லனாகச் செயல்படுகிறது.அதனால்தான் இவ்வகையான கொலஸ்ட்ரால், தீமை தரும் கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தில் தீமை தரும் கொலஸ்ட்ராலின்
அளவு அதிகமாகும்போது கெட்டியான கஞசி போன்ற பிசுபிசுப்பான பொருள்கள் உருவாகின்றன. இவை அளவுக்கு அதிகமாக உற்பத்தி
செய்யப்படும் போது இதயத் தமனிகளின் உள்பகுதியில் படிந்து அவற்றின் உள்விட்டத்தின் அளவைக் குறைக்கின்றன.
ஏற்கெனவே இதயத் தமனிகள் நெகிழும் தன்மையை இழந்து தடித்து உள்விட்டமானது சுருங்கிப்போன நிலையில் இருக்கின்றன. இதபோதாதென்று கஞ்சி போன்ற பிசுபிசுப்பான பொருள்கள் ஒட்டுவதால் ரத்தக் குழாய்களின் சுருக்கம் மிகவும் அதிகமானிறது. இதனால் சீரான ரத்த ஓட்டம் தடைபடுகிறது.
மேலும் ரத்தத்தின் மூலகங்களான தட்டகங்கள் நார்ப் பொருள்கள், சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகியவை ஒன்றாகக் குழுமி, ஒரு
பெரிய ரத்தக் கட்டியாக உருவாகி, இதயத் தமனியை முழுமையாக அடைத்துவிடுகின்றன. இதன் விளைவாக இதயத் தசைகள் இயங்குவதற்குத்
தேவையான ரத்தத்தைப் பெற இயலாது மடிகின்றன. இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.

No comments:

Post a Comment