Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 11, 2013

சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் சிறந்த மருந்து!


இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் பற்றிய விபரங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி. எம்.ஆர்.) சேகரித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் 6.2 கோடிப் பேர் (62 மில்லியன்) சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நகரங்களில் வாழ்வோரில் 11 சதவிகிதம் பேருக்கும், கிராமங்களில் வாழ்வோரில் 3 சதவிகிதம் பேருக்கும் சர்க்கரை நோய் உள்ளது. மொத்த செலவில் 2.1 சதவிகிதம் இந்நோய்க்கான மருத்துவத்துக்கு செலவிடப்படுகிறது.
காஸ்ட்லி டிஸீஸ் அதாவது, பணக்கார நோய் என்று குறிப்பிடுகின்றனர். இதற்கான மருந்து, மாத்திரைகளின் விலை, மிகவும் அதிகம். 2025-ம் ஆண்டில், இந்தியாவில் 7 கோடி சர்க்கரை நோயாளிகள் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமே தவிர, மற்ற நோய்கள்போல் அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. சர்க்கரை நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் வகையில், மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி உலகம் முழுவதும் நடந்து வருகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து புதிய ஆராய்ச்சியை மேற்கொண்டன. ராஜஸ்தான் மாநிலம் பிகானர் பகுதியில் வாழும் ராய்கா சமூக மக்களிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த சமூகத்து மக்கள் ஒட்டகப்பாலை தவிர, வேறு எந்த மிருகங்களின் பாலையும் பருகுவதில்லை. இந்த சமூகத்தைச் சேர்ந்த எவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. சர்க்கரை நோயாளிகளின் வாரிசுகளிடம்கூட இந்த பாதிப்பு அதிகமாக காணப்படவில்லை.
0.4 சதவிகிதம் பேர் மட்டுமே மரபு ரீதியாக சர்க்கரை நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ள விவரம் தெரிய வந்தது. இதற்கு ஒட்டகப்பால் குடிப்பதுதான் காரணம் என்று தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஒட்டகப்பாலில் உள்ள சத்துக்கள் பற்றி நடத்தப்பட்ட ஆய்வக சோதனையில், டைப்-1 சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை இருப்பது கண்டறியப்பட்டது.
டைப்-1 சர்க்கரை நோய்க்கு ஓட்டகப்பால் சிறந்த மருந்து என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. அதேபோல, ஆண்களுக்கு தலையில் வழுக்கை விழுவது ஏன்? என்று விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில், அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
புரோட்டீன் பற்றாக்குறைதான் முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. சில வகை புரோட்டீன்கள் முடி வளர்ச்சியை வேகப்படுத்துகின்றன. அந்த வகை புரோட்டீன்கள் செலுத்தப்பட்டவர்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
தலை வழுக்கை மற்றும் வழுக்கை இல்லாதவர்கள் என, இரண்டு தரப்பினரிடையே புரோட்டீன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வழுக்கை தலையை உடையவர்களுக்கு, சாதாரணவர்களைவிட, மூன்று மடங்கு முடி வளர்ச்சி இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
குறிப்பிட்ட வகை புரோட்டீன்கள் முடி வளர்ச்சியை வேகப்படுத்துவது, இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் 93 சதவிகிதம் பேர் தூக்கமின்மை நோயால் அவதிப்பட்டு வருவதாக மற்றொரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
தூக்கமின்மை பல்வேறு நோய்களுக்கும், நுழைவு வாயிலாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மன அழுத்தம், எறிந்து விழுவது, சோர்வு, சிந்தனை திறன் குறைவது போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. ஆழ்ந்த மற்றும் குறைந்தது 8 மணி நேர தூக்கம், ஆரோக்கியமான அமைதியான வாழ்வுக்கு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment