Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, October 27, 2013

வெளிநாடு வாழ்க்கையில்...


ந‌ம‌து த‌மிழ் நாட்டின் தென் மாவாட்ட‌ங்க‌ளில் உள்ள‌ பெரும்பாலான‌ தொழிலாள‌ர்க‌ள் தான் வ‌ளைகுடா நாடுக‌ளில் க‌ட்டிட‌ வேலைக‌ளில் இருக்கிறார்க‌ள். அதிலும் குறிப்பாக‌ எங்க‌ள் ஊரில் உள்ள‌வ‌ர்க‌ளை அதிக‌மாக‌ பார்க்க‌ முடியும். இவ்வாறு க‌ட்டிட‌ வேலைக்கு வ‌ருப‌வ‌ர்க‌ளில் பெரும்பாலான‌வ‌ர்க‌ள், குடும்ப‌ த‌லைவ‌ர்க‌ளாக‌ தான் இருப்பார்க‌ள். குடும்ப‌த்தின் குழ‌ந்தைக‌ளின் வ‌ருங்கால‌த்தை ம‌ன‌தில் கொண்டு உழைக்க‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள்.



வ‌ளைகுடா நாடுக‌ளில் இவ‌ர்க‌ள் வாழும் சூழ‌ல் ரெம்ப‌ கொடுமையான ஒன்று. த‌ங்கியிருக்கும் ரூம்க‌ளில் இவ‌ர்க‌ளுக்கு சொந்த‌ம் என்று சொல்லும் இட‌ம் ஒரு க‌ட்டில் போடுவ‌த‌ற்கான‌ இட‌ம் தான். அந்த‌ க‌ட்டிலில் தான் இவ‌ர்க‌ளின் வாழ்க்கையே முடிகிற‌து. அந்த‌ க‌ட்டிலின் த‌லை ப‌குதியில் ஒரு சிறிய‌ ஷெல்ப் இருக்கிற‌து. அதில் அவ‌ருக்கு தேவையான‌ சில‌ அத்தியாவ‌சிய‌ பொருட்க‌ள் இருக்கின்ற‌ன‌. அத்துட‌ன் ஒரு தொலைகாட்சி பெட்டியும் இருக்கிற‌து.

த‌ங்க‌ளுடைய‌ ஆடைக‌ள் அனைத்தும் க‌ட்டிலின் அடியில் அட்டை பெட்டியில் வைத்து கொள்கிறார்க‌ள். த‌னியாக‌ த‌ட்டு, ட‌ம்ள‌ர், போன்ற‌ பொருட்க‌ளும் இருக்கின்ற‌ன். இதே போல் ஐந்துக்கும் மேற்ப‌ட்ட‌ ப‌டுக்கைக‌ள் ஒவ்வொரு அறையிலும் காணப்ப‌டுகின்ற‌ன‌. ப‌க்க‌த்தில் ஒரு ச‌மைய‌ல் அறையும் இருக்கின்ற‌து.

அவ‌ர‌வ‌ர் க‌ம்பெனிக‌ளை பொறுத்து வேலை நேர‌ம் இருக்கிற‌து. குறைந்த‌து ப‌த்தில் இருந்து ப‌னிரெண்டு ம‌ணி நேர‌ம் வேலை செய்கிறார்க‌ள். மாலையில் தான் த‌ங்க‌ளுடைய‌ அறைக‌ளுக்கு வ‌ருகிறார்க‌ள். வ‌ந்த‌வுட‌ன் குளித்துவிட்டு த‌ங்க‌ளுடைய‌ ச‌மைய‌ல் வேலைக‌ளை பார்கிறார்க‌ள். சில‌ அறைக‌ளில் த‌ங்கியிருக்கும் ந‌ண்ப‌ர்க‌ள் ஒன்றாக‌ சேர்ந்து ச‌மைய‌ல் செய்கிறார்க‌ள். சில‌ அறைக‌ளில் இருப்ப‌வ‌ர்க‌ள் த‌னி த‌னியாக‌ ச‌மைய‌ல் செய்து த‌ங்க‌ளில் ஷெல்பில் வைத்து கொள்கிறார்க‌ள்.

ச‌மைய‌ல் வேலைக‌ள் முடிந்த‌வுட‌ன் த‌ங்க‌ளின் க‌ட்டிலில் உள்ள‌ தொலைகாட்சியில் அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்திற்கு ஏற்ற‌வாறு நிக‌ழ்ச்சிக‌ளை பார்கின்ற‌ன‌ர். பார்த்து முடித்துவிட்டு அப்ப‌டியே அந்த‌ க‌ட்டிலில் ப‌டுத்து தூங்கி விடுகின்ற‌ன‌ர்.

வார‌த்தின் ஏழு நாட்க‌ளில் ஆறு நாட்க‌ள் இப்ப‌டி தான் போகின்ற‌து. வெள்ளி கிழ‌மை விடுமுறை நாளாக‌ இருந்தாலும் சில‌ர் அன்றும் வேலைக்கு சென்று விடுகிறார்க‌ள். சில‌ர் த‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ள‌ அல்ல‌து உற‌வின‌ர்க‌ளின் அறைக‌ளுக்கு சென்று அவ‌ர்க‌ளுட‌ன் உற‌வாடி அன்றைய‌ பொழுதை க‌ழிக்கிறார்க‌ள். இவ்வாறு தான் பெரும்பாலான‌ குடும்ப‌ த‌லைவ‌ர்க‌ளின் வாழ்க்கை க‌ழிகின்ற‌து.

இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒருமுறை த‌ங்க‌ளுடைய‌ சொந்த‌ ஊர்க‌ளுக்கு செல்கிறார்க‌ள். தான் வெளிநாட்டில் ப‌டும் க‌ஷ்ட‌ங்க‌ளை த‌ன‌து ம‌னைவியிட‌மும், குழ‌ந்தைக‌ளிட‌மும் ம‌றைக்கிறார்க‌ள். இத‌னால் குழ‌ந்தைக‌ளுக்கு அப்பாவின் மேல் எந்த‌வித‌ ஈடுபாடும் இருப்ப‌து இல்லை. ப‌ண‌ தேவைக‌ளுக்கு ம‌ட்டும் அப்பாவை நாடுகின்ற‌ன‌ர்.

அப்பாவின் க‌ண்டிப்புக‌ள் இல்லாத‌தால் இவ‌ர்க‌ள் வாழ்க்கையில் ஏதாவ‌து ஒரு வ‌ழியில் திசை மாறி விடுகிறார்க‌ள். எங்க‌ள் ஊரில் இது போல் நிறைய‌ பேரை பார்க்க‌ முடியும். த‌ன‌து இள‌மைக‌ளை வெளி நாட்டில் தொலைத்து விட்டு, இனிமேல் குழ‌ந்தைக‌ள் தான் உல‌க‌ம் என்று வ‌ரும் த‌ந்தைக‌ளுக்கு பெருத்த‌ ஏமாற்ற‌ங்க‌ளே!!

உங்க‌ள் உழைப்புக‌ளை குழ‌ந்தைக‌ளுக்கு எடுத்து சொல்லுங்க‌ள். ப‌ண‌த்தின் ம‌திப்பை அவ‌ர்க‌ளுக்கும் தெரிய‌ ப‌டுத்துங்க‌ள். கால‌ம் க‌ட‌ந்த‌ அறிவுரைக‌ளும், ப‌டிப்பினைக‌ளும் குப்பைக‌ளில் தான். விழித்து கொள்ளுங்க‌ள்!!!!

ச‌மீப‌த்தில் நான் ப‌ண‌ம் அனுப்புவ‌த‌ற்கு வ‌ங்கிக்கு சென்றிருந்தேன். அங்கு ஒருவ‌ர் த‌ன‌து ப‌ண‌த்தை இர‌ண்டு வ‌ங்கி க‌ண‌க்குக‌ளுக்கு அனுப்பி கொண்டிருந்தார். நான் அவ‌ரிட‌ம் "ஏன் இர‌ண்டு வ‌ங்கி க‌ண‌க்குக்கு அனுப்புகிறீர்க‌ள் ? ஒன்றில் அனுப்பினால் உங்க‌ளுக்கு ச‌ர்வீஸ் சார்ஜ் குறையுமே என்று கேட்டேன் " அத‌ற்கு அவ‌ர் " ஒன்று என்னுடைய‌ ம‌னைவியின் வ‌ங்கி க‌ண‌க்கு, ம‌ற்றொன்று என்னுடைய‌ ம‌க‌னுடைய‌து, ம‌க‌ன் க‌ல்லூரியில் ப‌டிக்கிறான். அம்மாவிட‌ம் ப‌ண‌ம் கேட்டால் அவ‌ன் அம்மா ஏன்? ஏத‌ற்கு என்று கேட்ப‌தால், இர‌ண்டு பேருக்கும் அடிக்க‌டி த‌க‌றாறு வ‌ருகின்ற‌து என்று என்னிட‌ம் புல‌ம்பினான். அத‌னால் தான் இர‌ண்டு பேருக்கும் த‌னித‌னியாக‌ போடுகிறேன்" என்றார்.

அவ‌ருக்கு என்ன‌ சொல்வ‌து என்று என‌க்கு தெரிய‌வில்லை.

7 comments:

  1. what you have written 200 % is correct...

    ReplyDelete
  2. பொறியாளர் சுல்தான் அவர்களே,

    மிகப்பெரிய உண்மையை ரோட்டில் போட்டு உடைத்துள்ளீர்கள்
    உலக வரலாற்றில் அடிமை வாழ்க்கையை முதன் முதலாக ஒழித்தது இஸ்லாம் ஆனால் இன்று இஸ்லாமிய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் ஏராளம்.

    நான் அரபுகளை தவறாக சொல்லமாட்டேன் தவறு நம்மீது தான் உள்ளது, ஐந்து வருடங்கள் அரபு நாட்டில் வாழ்ந்து பொருளீட்டி அதன் பிறகு நாடு திரும்பவேண்டும்

    ஹிஜ்ரத் செய்யவேண்டும் ( பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டும்) என்பது நபியின் வாக்கு

    ஆனால் ஒரே நாட்டில் இருபது வருடம் முப்பது வருடம் வாழ யாரும் சொல்லவில்லை.

    கொஞ்ச காலம் இருந்து அதன் பின்னர் நாடு திரும்ப வேண்டும்.

    ஒரு அறையில் வாழ்வது நிறைய நற்குணங்களை தரும் ( அன்பு , பகிர்வது) ஆனால் வாழ்நாள் முழுவதும் அவ்வாறு வாழ முற்படுவது தவறு.

    தமிழ்நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தை அணுகி , வளைகுடா நாட்டில் (அனுமதி தரும் நாட்டில்) கல்வி நிலையத்தை திறக்க வைக்க வேண்டும்.

    ஐந்து வருட வாழ்வு முடியும் நிலையில் ஒரு பட்டத்துடன் தாயகம் திரும்ப வேண்டும்

    வளைகுடா நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் வளைகுடா நாடுகளுக்கு வரும் தமிழர்களுக்கு கல்வியை தர வேண்டும்

    வெறுமனே கூட்டம் கூடி பிரியாணி தின்று களைய கூடாது.



    டாக்டர்.மு.செம்மல்

    9381045344

    ReplyDelete
    Replies
    1. நன்றி டாக்டர்! நீங்க சொல்றது சரி தான்

      Delete
    2. மிகவும் சரியாக சொன்னீர்கள். உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி பொறியாலரே.

      Delete
  3. டாக்டர் செம்மல் அவர்கள் மிக அருமையான கருத்தினை வெளியிட்டுள்ளார். தொழிலாளர்களாக வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் இவர்கள் தொடர்ந்து கற்பதற்கு வழி தர வேண்டும். நூற்றில் பத்து பேர் நிச்சயம் முதலில் இதனால் பயன் பெறுவார்கள். வாழ்நாள் முழுவதும் குடும்பத்தினருக்காக உழைத்து, இறுதியில் தன் முன்னேற்றம் எதுவும் இல்லாமல், குடும்பத்தினருடனும் பற்று இல்லாமல் ஒரு வாழ்க்கையை இந்த தோழர்கள் பெற்றுவிடக் கூடாது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்களுக்கு நன்றி!

      Delete