Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 29, 2012

தெரிந்து கொள்வோம் வாங்க!பகுதி-10

அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-10

குரங்குகள் மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படும் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். ஆனால் மிக அதிகமான மலைப் பகுதியில் குரங்குகளை பார்க்க முடியுமா?... முடியும். சீனா திபெத்திய பீட பூமியின் தென்பகுதிகளில் காணப்படும் தங்க நிறக் குரங்குகள் 10 ஆயிரம் அடி உயரமான மலையில் அதிகம் வசிக்கின்றன. இது அபூர்வ வகை இனக் குரங்காகும். பனி காலத்தில் இவை கடும் குளிரைத் தாங்க முடியாமல் மலையடிவாரத்திற்கு வந்து விடும். இதன் உடல் நீள அளவிற்கு வாலின் நீளமும் இருக்கும். வால் இரண்டரை அடி நீளம் வரை வளரும்.

அண்மையில் சீனாவின் சான்டோங் நகரில் உள்ள மிருககாட்சி சாலையில் தங்க நிற பெண் குரங்கு ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. அந்தக் குட்டியை முதன் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு அனுமதித்தார்கள்.

***

முதன் முதலில் தென் ஆப்பிரிக்க நாட்டில்தான் வெள்ளைச் சிங்கங்கள் இருப்பது வெளி யுலகிற்குத் தெரிய வந்தது. அங்குள்ள டிம்பாவதி பகுதியில் வெள்ளைச் சிங்கம் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் உண்மையில் அவை வெள்ளை நிறம் அல்ல, பிறவிக் கோளாறு காரணமாக இப்படி இவை பிறந்திருக்கலாம் என்று கருதினார்கள்.

ஆனால் உண்மையில் வெள்ளைச் சிங்கங்கள் இருப்பது 1975-ம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. இதேபோல் இந்தியாவிலும் வெள்ளைச் சிங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றுக்கு வெள்ளைச் சிங்கம் என்று பொதுவான பெயர் இருந்தாலும் கூட அவற்றின் மீது மெல்லிய சாம்பல் நிறம் இருக்கிறது.

இந்த வெள்ளைச் சிங்கங்களை பிடித்து வளர்ப்பது சிரமமாக இருந்தது. இதனால் மிருககாட்சி சாலையில் இவற்றை வளர்க்க முடியாமல் இருந்தது. ஆனால் கடந்த 5 வருடங்களாக வெள்ளைச் சிங்கங்களை மிருககாட்சி சாலையில் இனப்பெருக்கம் செய்வதில் வெற்றி கிடைத்து விட்டது. அண்மையில் ஜெர்மனியின் நூரம்பெர்க் நகரில் ஒரு பெண் வெள்ளைச் சிங்கம் குட்டியொன்றை ஈன்றெடுத்தது.
***

அமெரிக்கா, கனடா நாடுகளில் மஞ்சள் நிற ராபின் குருவியை அதிக அளவில் பார்க்க முடியும். அண்மையில் இந்த பறவையை இங்கிலாந்து மக்கள் தங்களது நாட்டின் பெரும்பாலான இடங்களில் பார்க்க நேர்ந்தது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தக் குருவி நமது நாட்டிற்கு எப்படி வந்தது என்று புரியாமல் குழம்பினார்கள்.

வட அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக வீசிய சூறாவளிக் காற்றில் இந்தப் பறவை அட்லாண்டிக் கடலையும் தாண்டி வந்திருப்பது தெரிந்தது. காற்றின் போக்கிலேயே இங்கிலாந்து வந்து சேர்ந்த மஞ்சள் வயிற்று ராபின் குருவிகள் தற்போது தங்களின் புதிய இடத்தில் எந்த வித ஆபத்துமின்றி வாழ்கின்றன.

***

நமது நாட்டில் 1921-ம் ஆண்டு தீப்பெட்டி தயாரிக்கும் முதல் தொழிற்சாலை கொல்கத்தா நகரில் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு தீப்பெட்டிகள் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

***

தோன்றியதிலிருந்து அன்று முதல் இன்று வரை எந்த வித பரிணாம வளர்ச்சியும் அடையாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சிதான்.

***

விளக்குகளில் இருந்து வெளியாகும் ஒரு வித இன்பாஸ்டிரேட் கதிரியக்கம்தான் விட்டில் பூச்சிகள் விளக்குகளை நோக்கி வரக்காரணமாக உள்ளது.

***

ஆப்பிரிக்க காடுகளில் வாழும் சிறுத்தை புலிகள் மான்களை விரட்டிப் பிடிக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். அப்போது 125 அடி தூரத்தைக் கூட ஒரே துள்ளலில் தாண்டிவிடும். அகப்பட்டுக் கொண்ட மானின் எடை வாயில் கவ்வி தூக்கிச்செல்லக் கூடிய அளவில் இருந்தால் அப்படி மரத்தின் மீது ஏறி அங்கேயே உட்கார்ந்து கொண்டு இரையைத் தின்னும்.

கழுதைப் புலி போன்ற சிறிய விலங்குகளின் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ்வாறு இரையை மரத்தின் உச்சிக்கு சிறுத்தைகள் கொண்டு செல்கின்றன.

***

உலகப் புகழ்பெற்ற பாபா பிளாக் ஷீப் என்ற மழலையர் ஆங்கிலப் பாடலின் சில வரிகளை மாற்றியமைக்கப்போகிறார்க࠮?.பிளாக் ஷீப் என்பது கறுப்பர் இனத்தைக் குறிப்பதாக புகார் வந்ததால் இந்த முடிவு. பிளாக் என்பதற்குபதில் ரெயின்போ என மாற்றப்போகிறார்கள். இனிமேல் இந்தப் பாடல் பாபா பாபா ரெயின்போ என்று பாடப்படும்.

இப்போது இந்தப் பாடல் இங்கிலாந்தில் பாபா பாபா கிரீன்ஷீப் எனவும் ஸ்காட்லாந்தில் பாபா பாபா ஹேப்பிஷீப் எனவும் பாடப்படுகிறது.

***

புகைப்பட காமிரா உருவத்தின் நீள, அகலத்தை மட்டுமே படம்பிடிக்கும். ஆனால் உருவத்தின் ஆழத்தைக் காட்ட இயலாது. நம் இரண்டு கண்களும் வெவ்வேறு இரண்டு உருவங்களைப் பார்க்கும்போது மூன்றாவது பரிமாணம் ஏற்படுகிறது. எனவேதான் பார்க்கும் பொருளின் ஆழத்தை நம் கண்களால் காண முடிகிறது.

***

ஆழ்கடலில் மலர்ச்செடி போல் அழகாக இருப்பது கடல் அனிமோன். இது இருந்த இடத்தை விட்டு நகராமலேயே இரையைப் பிடிக்கும். இதன் உடலில் இழைகள் மொட்டுகள் போன்ற அமைப்புகள் உண்டு.

இரையைப் கண்டதும் தன் மொட்டுக்களை வெடிக்கச் செய்து ஒரு வித விஷத்தை அதன் உடலில் பாய்ச்சிவிடும். பிறகு அவற்றை உண்ணும்.

***

* உலகிலேயே மிகவும் சிறிய மரம் குட்டை வில்லோ என்னும் மரமாகும். இந்த மரத்தின் மொத்த உயரம் இரண்டே அங்குலம்தான்.

* ஆகாயத் துப்புரவு தொழிலாளி என்று காக்கையை அழைப்பார்கள்.

*விவசாயியின் நண்பன் மண் புழு என்பது உங்களுக்குத் தெரியும். பகைவன் யார் என்று தெரியுமா?... வெட்டுக்கிளிதான் அந்த புண்ணியவான். பெருமளவு பயிர்களை வெட்டுக் கிளிகள் வளரவிடாமல் அழிப்பதால்தான் அதற்கு இந்தப் பெயர்.

* கடல் நீரில் உப்பு 3.5 சதவீதம் கலந்துள்ளது.

* கடலின் சராசரி ஆழம் 3.75 கிலோ மீட்டர்கள்.

Engr.Sulthan

No comments:

Post a Comment