Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 7, 2013

பூமியை நோக்கி வரும் சூரியப் புயல்


வாஷிங்டன் : சூரியனில் இருந்து நேற்று அதிகாலை வெளிப்பட்ட "சூரியப் புயல்' பூமியை நோக்கி வருகிறது எனவும், இதனால் பூமிக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றாலும்; தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூரியப்புயல் நிகழ்வு பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒரு நிகழ்வுதான். சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், சூரியக் கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து காணப்படும். சூரிய காந்தப் புயல் மூன்று விதத்தில் நிகழும். முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும்.

ஒன்று முதல் மூன்று:


இதன்படி இந்திய நேரப்படி, நேற்று அதிகாலை சூரியனில் இருந்து அதிதி வாய்ந்த வெப்பம் வெளிப்பட்டு, பூமியை நோக்கி வருகிறது. இது வினாடிக்கு 570 மைல் என்ற வேகத்தில் வெளிவருகிறது. பூமியை வந்தடைவதற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் ஆகும். இதனால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் உலக நாடுகள் விண்வெளியில் அதிகளவிலான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியுள்ளன. இச்செயற்கைக்கோள்கள் மூலம் தான் தொழில்நுட்ப பயன்பாட்டை நாம் பெற்றுக்கொண்டிருக்கிறோம். பூமியில் இருந்து வெளிவரும் சூரியப்புயலால், செயற்கைக்கோள்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் சிறிய அளவிலான சூரியப்புயல் பூமியை தாக்கியுள்ளது. இதனால், எவ்வித பாதிப்பு ஏற்பட்டதில்லை. ஆனால் 1989ம் ஆண்டு சூரியப்புயல் கனடாவை தாக்கியது. இது அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment