Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, October 6, 2013

வெள்ளரி. (CUCUMBER)






வெள்ளரி. (CUCUMBER)


மூலிககையின் பெயர் –: வெள்ளரி. (CUCUMBER)


தாவரப்பெயர் -: CUCUMIS SATIVS. 

தாவரக் குடும்பம் –:CUCURBITACEAE.

வெள்ளரி வகைகள் -: CITRULLUS LANATUSVAR LANATUS.

CUCMIS MELO.

CUCURBITA MAZIMA.

CUCURBITA MOSCHATA.

LAGENARIA SPP.

SICYOS ANGULATUS….. ஆகியவை.


பயன்தரும் பாகங்கள் -: கொழுந்து, பிஞ்சு, காய், பழம் மற்றும் வேர்.

வளரியல்பு -: வெள்ளரி படரும் கொடி வகையைச் செர்ந்த ஒரு காய் கறி வகை நல்ல மூலிகையும் கூட. இதன் முக்கிய மூன்று வகைகள்  SLICING, PICKLING & BURPLESS ஆகும். இதன் வேர் பூமிக்கடியில் இருக்கும்..இலைகள் அகலமாக இருக்கும் இலையின் அடி பாகத்தில் பூ விட்டு பிஞ்சுகள் உற்பத்தியாகும்.கொடிகள் படர்வதற்கு பக்க வாட்டில் சுருள் கம்பி போன்ற வேர்கள் இருக்கும் அதன் உதவியால் நிலத்திலோ மேல் நோக்கியோ பிடித்துப் படரும்.வெள்ளரியை சம வெளியிலும் குளங்களிலும், பசமை கூடாரங்களிலும் வளர்க்கலாம். இது வளர்வதற்கு நல்ல வளமான மண் வேண்டும். வடிகால் வசதி இருக்க வேண்டும். விதைகளை மண்ணில் ஒரு அங்குலத்திற்குக் கீழ் நடவேண்டும். இடைவெளி இரண்டடி இருக்க வேண்டும். ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். காயின் நீளம் 60 செ.மீ.வரையும் அகலம் 10 செ.மீ. விட்டமும் இருக்கும். இது வகைக்கு வகை வேறு படும். காயிக்குள் இரு அடுக்காக விதைகள் இருக்கும்.வெள்ளரியில் 90 சதம் தண்ணீர் இருக்கும்.காய் கறி போல்  சாப்பிடப் பயன் படுத்துவார்கள். பிஞ்சாக இருக்கும் போது அப்படியே யாவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். நட்ட 30 வது நாளில் பூக்க ஆரப்பிக்கும்.50 நாளிலிருந்து பறிக்க ஆரம்பிக்கலாம். பிஞ்சை 3 ரகமாகப் பிரிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 600 குழிகள் தோண்ட வேண்டும்.2 அடி இடைவெளி விட வேண்டும். ஒரு குழிக்கு மூன்று விதைகள் போடவேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாச்சினால் போதும்.ஒரு ஏக்கருக்கு 150 கிராம் விதை தேவைப்படும்.பூக்கள் ஆண், பெண் இரு சம மாகப் பூக்கும்.மஞ்சள் நிறத்தில் இருக்கும்.தேனீக்கள் அதிகம் வருவதால் மகரந்தச் சேர்க்கை அதிகமாக ஏற்படும்.வெள்ளரியின் தாயகம் இந்தியா தான்.3000 வருடங்களுக்கு முற்பட்டது .பின் உலக நாடான ஐரோப்பா, கிரேக்கர்கள், ரோமானியர்கள், பயிரிட்டனர். 9 ம் நூற்றாண்டில் பிரான்சுக்குப் பரவிற்று. 14 ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும்,  வட அமரிக்கா 16 ம் நூற்றாண்டிலும் பரவிற்று. பின் ஆப்பிரிக்காவிலும் தற்போது செர்பியாவிற்கும்.பரவிற்று. வெள்ளரி பயிரிடுவதில் உலக அளவில் சைனா 60 சதமும், அடுத்து துருக்கி, இரான், ரஸ்யா, அமரிக்கா, உக்ரைன், ஸ்பெயின், எகிப்து, ஜப்பான், இந்தோநேசியா என எப்.ஏ. ஓ. ன் அமரிக்க ஆய்வு கூறுகிறது. இந்த மாதத்தில் வெள்ளரி அதிகம் விளைவிக்கப்படுகிறது. மார்க்கட்டில் எல்லா இடங்களிலும் பழமுதிர் நிலையங்களிலும் கிடைக்கின்றது. கோவையில் பசுமை கூடாரத்தில் உற்பத்தி செய்த வெள்ளரி கிடைக்கின்றது. வெள்ளரி விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் –; வெள்ளரியில் உள்ள நீர் சத்து நா வரட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். உடம்புக்குக் குளிர்ச்சியை உண்டு பண்ணும்.வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு .இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும். செரித்தல் அதிகம் ஏற்படுவதால் பசி அதிகமாகும். வெள்ளிரியை உண்பதால் 'பசிரசம்' எனும் ஜீரண நீர் சுரக்கிறது என்பது  விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு. இது மலத்தைக் கட்டுப்படுத்தும், பித்தத்தைக் குறைக்கும், உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளிரிக்கு உண்டு. வெள்ளிரிப் பிஞ்சை உட்கொண்டால் மூன்று தோசமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள் கூறுகின்றன. புகை பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரளிக்கின்றது .அதையும் போக்க வல்லது. மூளைக்குக் கபால சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டி புத்துணர்ச்சி தரும்.கபம், இருமல் நுரையீரல் தொல்லையுள்ளவர்கள் வெள்ளரி சாப்பிடுவது நல்லதல்ல. 100 கிராம் வெள்ளரியில் 18 கிராம் கலோரிதான் இருக்கிறது. குறைந்த கலோரி உள்ள காய்கறியாகும். இது சிறுநீர் பிரிவைத் தூண்டக் கூடியது. இரைப் பையில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்தும்.

நன்றி Face Book. முகநூல்.
  1. காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும்கலோரி 18தான்.
2.   விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்ஆனால்மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்;பச்சையாகவும்சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர். 
3. வெள்ளரிக்காய்குளிர்ச்சியானதுஅப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது.  நன்கு செரிமானம் ஆகக்கூடியதுசிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வதுஇரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.
  1. இக்காய் பித்தநீர்சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.
  2. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை,வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.
  3. ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டுகாரணம்,ஆந்திரசமையலில் காரம் அதிகம். 100கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளதுஅது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறதுமீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம்கொழுப்பு,மாவுச்சத்துதாது உப்புகள்கால்சியம்,பாஸ்பரஸ்இரும்புவைட்டமின் ‘பிஆகியவை அமைந்துள்ளனவைட்டமின்சியும் சிறிதளவுஉண்டு.
  4. சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக்கடித்துச் சாப்பிடுவது வழக்கம்ஆனால்வெள்ளரிக்காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.
  5. இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது.
  6. வெள்ளரியைச் சமைத்துச்சாப்பிடும் போது பொட்டாசியம்பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்து விடுகின்றனஎனவே,வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
  7. வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணம் தெரியும்.
  8. காலராநோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கிஅதனுடன் இளநீரையும் கலந்துஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்.
  9. வறண்ட தோல்காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள்வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.
  10. தினமும் மிகச்சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக் காய்த்துண்டுகளை நறுக்கிப் போடவும்.அத்துடன் காரட்பீட்ரூட்தக்காளி,முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டுவைத்து வெஜிடேபிள் சாலட் போல் பரிமாற வேண்டும்அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச் செய்கிறதுமேலும் இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ச்செய்யும்.
  11. இக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.
  12. மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள்அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.
  13. முகத்தில் உள்ள கரும் புள்ளிகள்,வறண்ட தோல்பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து
  14. முகத்தில்பூசவேண்டும்பதினைந்து 
  15. நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்கவேண்டும்தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும்பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.
  16. நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும்சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும்அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்தவேண்டும்இதனால் ஆண்மை பெருகும்.
  17. முடிவளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும்.வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிகானும்சல்பரும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகின்றனஇந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட் சாறு,  இரு தேக்கரண்டி பசலைக் கீரைச்சாறு,பச்சடிக் கீரைச் சாறு போன்ற வற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும்முடிகொட்டுவதும் நின்றுவிடும்.
  18. காரட்கிழங்கைப் போலவேவெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில் தான் தாது உபபுகளும்வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளனஎனவேதோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத் துங்கள்.
  19. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ்ஸாடிவாஸ் என்பதாகும்இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறதுஇமயமலைப் பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.
  20. ஜமைகாநாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம்பழ அளவிலும்நிறத்திலும் இருக்கிறதுகிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர்பிரிஸ்ஜில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக்காய் களை பயன்படுத்தலாம்.

-----------------------------------------------------------------------------------------
வெள்ளரிப்பூ.
 
வெள்ளரிக்கொடிகள் படர்ந்துள்ளது.

வெள்ளரி பசுமை கூடாரத்தில்.

No comments:

Post a Comment