Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 7, 2013

கோடைக் கால நெல்லி சர்பத்

கோடைக்கான எளிய பானம்

கோடை காலத்திற்கேற்ற மிகவும் எளிமையான ஜில்லென்ற பான்ம சம்பங்கூழ்தான். அதை வருமானத்தில் கீழ்த்தட்டு மக்களின் பானம் என்ற அனைவரம் ஒதுக்கி விடுகிறோம். ஆனால் வெயிலில் அனைத்துத் தரப்பினரும் தினமும் அருந்தி குளிர்ச்சி பெறலாம்.
இதைத் தவிர அவரவர் வசதிக்கேற்ப வேறு சில பானங்களும் அருந்தலாம். சிலர் ஃபிரிட்ஜ் இருந்தால்தான் ஜூஸ் குடிக்க முடியும் என்று எண்ணலாம். அது தவறு. இளநிரை வாங்கியவுடன் குளிர்ந்த நீரில் போட்டுவிடுங்கள்.
வெளியில் வேளையில் இளநீரில் ஒரு ஸ்பூன் குளுக்கோஸ் கலந்து நுங்கு தோலுரித்து சிறு துண்டுகளாக்கி அதில் போட்டுக் கலந்து குடித்துப் பாருங்கள். உடலே குளிர்ந்துவிடும்.
தர்ப்பூசிணியை கொட்டையை எடுத்துவிட்டு மிக்ஸியில் அடித்து ஜூஸாக்கி சிறிதளவு சர்க்கரை சேர்த்துக்குடிக்கலாம். ஜூஸில் அதிகம் சர்க்கரை சேர்க்க முடியாது.
முலாம்பழத்தை வாங்கி உள்ளிருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு, துருவி பால், சர்க்கரை சேர்த்து ஜூஸாக்கிப் பருகலாம். வெயிலுக்கு உகந்தது.
நுங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி (மிக்ஸியில் அடித்தால் பசை போல் ஆகிவிடும்) பால் சேர்த்து ஏலக்காய், சர்க்கரை கலந்து பருகலாம்.
சப்போட்டாவை தோல் நீக்கி துண்டுகளாக்கிக் கொட்டைகள் நீக்கி சிறிது பாலும், நீரும் சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துப் பருகினால் மலக்ட்டே வராது. இரத்தம் விருந்தியாகும்.
சிலர் மாம்பழம் உடலுக்கு சூடு என்பார்கள். அனால் அது தவறு. மாம்பழத் துண்டுகளுடன் பால், சர்க்கரை, சேர்த்துச் சாப்பிட உடம்பிற்கு நல்லது. குழந்தைகளுக்க, கர்ப்பிணிகளுக்கு கொடுத்தால், இரத்தம் ஊறும். பால் சூட்டைத் தணித்துவிடும்.
இரண்டு மூன்று வகை பழங்கள் இருந்தால் எல்லாவற்றையும் துண்டுகளாக்கி சிறிது சர்க்கரை, சிறிது மில்க் மெய்ட் போட்டுக் கலக்கி ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
வெளியே செல்கின்ற சமயங்களில்கூட செயற்கை பானங்களையும், ஐஸ் கிரீமையும் தவிர்த்து விடுதல் நன்று. இயற்கை பழரசங்கள்தான் உடம்பிற்கு நல்லது.
வீட்டில் பழங்கள் இல்லாத பட்சத்தில், தயிரை சிலுப்பி, மோராக்கி அதில் நிறை பானைத் தண்ணீர் விட்டு உப்பு போட்டு, சிறிது கடுகு, துணி பெருங்காயம், சிறிது வறுத்து பொடியாக்கிய மோர் மிளகாய் போட்டுக் கலக்கி சிறிது வெள்ளரிக்காய் துருவல் கலந்து சாப்பிட, நிர் மோர் அமிர்தமாய் இருக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் சாதத்தில் ஊற்றிய தண்ணீரில் உப்பு கலந்து குடித்தால் உடம்பு குளிர்ச்சியாகும்.
நெல்லிக்காய் &1 கிலோ
சர்க்கரை & கிலோ

நெல்லிக்காய்களை தண்ணீரில் கழுவி, சுத்தமான துணியால் ஈரத்தை துடைத்து எடுக்கவும். ஒவ்வொரு காயையும் நறுக்கி, கொட்டைகளை எடுத்துவிட்டு துண்டுதுண்டாக அரிந்து கொள்ளவும்.

ஒரு கண்ணாடி ஜாடி அல்லது பீங்கான் ஜாடியில் கொஞ்சம் சர்க்கரை போடவும். அதற்கு மேலாக நெல்லிக்காய் துண்டுகளைப் பரப்பவும்.

அதன் மேல் சர்க்கரை மறுபடியும் நெல்லிக்காய் துண்டுகள் என்று மாற்றி மாற்றி அடுக்கிய பிறகு ஜாடியின் வாயை மூடி வெயில்படாமல் நிழலில் ஒரு மாதம் வரைக்கும் வைக்கவும்.

அதற்கு பிறகு நெல்லிச்சாறை வடிகட்டி ஒரு சுத்தமான, ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

தேவைப்படும் போது பாதி தண்ணீர், பாதி நெல்லி ஜூஸ் சேர்த்துப் பருகலாம். மிகுந்த சத்துள்ள குளிர்ச்சியான பானம் இது.

No comments:

Post a Comment