பெரியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இதயப்
பாதிப்புகள் பற்றி பார்க்கலாம்.
இதயத்தமனி நோய்கள்தான் பெரியவர்களை அதிக அளவில் பாதிக்கின்றன. இதயம், தான் இயங்குவதற்குத் தேவையான ரத்தம், உயிர்வளி,
ஹார்மோன்கள், உயிர்சத்துகள் ஆகியவற்றை வலைபோல் பின்னியுள்ள மூன்று வகையான ரத்தக் குழாய்களின் மூலமாகப் பெறுகின்றன. இந்த
வகையான ரத்தக் குழாய்களைத்தான் இதயத் தமனிகள் (CORONARY ARTERIES) என்கிறோம்.இந்த ரத்தக் குழாய்களின் வழியாக ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடினால்தான் இதயம் நன்கு செயல்பட முடியும்.