புக்கெட் தீவை ஓர் உல்லாசபுரி என்றே கூறலாம். சில ஆண்டுகளுக்கு முன் சுனாமியினால் ஏற்பட்ட அழிவினைச் சீர்படுத்திய பின் புதுப்பொலிவுடன் விளங்கும் புக்கெட் தீவைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்தத் தீவையா சுனாமி உருக்குலைத்தது என்று வியக்கும் வண்ணம் அழகின் சிகரமாக விளங்குகிறது புக்கெட்.
நீலவண்ணக் கடலுக்கு வெள்ளிக் கிரீடம் வைத்ததுபோல் வெள்ளை நிற கடற்கரை மணலில் கால் பதித்து நடப்பதே ஒரு சுகம்; பட்டு விரித்தாற்போன்று அப்படியொரு மென்மை.