Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label வன்சாரா. Show all posts
Showing posts with label வன்சாரா. Show all posts

Wednesday, December 11, 2013

யார் இந்த வன்சாரா?


ந்திய காவலர்களில் கிரண்பேடி போன்ற சிலர் மட்டுமே ‘Super Cop’ என்று அழைக்கப்பட்டனர்.
2007ல் சிறையில் அடைக்கப்படும் வரை குஜராத்தின்  ‘Super Cop’ ஆக       எல்லா அதிகாரமும் பெற்று திகழ்ந்தவர் தான் டி. ஜி. வன்சாரா.
1987 பேட்ச் குஜராத் கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான வன்சாரா குற்றவியல் பிரிவு தலைவராக பணியாற்றிய நாளிலிருந்தே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக அறியப்பட்டவர். பல்வேறு என்கவுண்டர்களை நடத்தி மீடியாவின் புகழ் வெளிச்சத்தில் இருந்த வன்சாரா மத்திய பிரதேசத்தை சார்ந்த சொஹ்ராபுதீனை என்கவுண்டரில் சுட்டதிலிருந்து அவரின் சரிவு தொடங்கியது.