Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label பொதுவானவை. Show all posts
Showing posts with label பொதுவானவை. Show all posts

Tuesday, June 2, 2015

வருகிறது சூரிய சக்தி ரயில்: இந்தியன் ரயில்வே அறிமுகம்!


புதுடெல்லி: சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் சூரிய சக்தியில் இயங்கும் ரயிலை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.இதற்கான சோதனை ஓட்டம் நடத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  

முன்மாதிரியாக சூரிய சக்தியை கொண்டு ரயிலை இயக்க சோதனையில் முதலில் ரயில் பெட்டிகளில் சோலார் தகடுகள் பொறுத்தப்பட்டு உள்ளன. மிகவிரைவில் அனைத்து மொத்த ரயில்களிலும் சோலார் தகடுகள் பொறுத்தப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சூரிய மின்சக்தியானது, ரயில்வேயில் டீசல் பயன்பாட்டை குறைக்கும், செலவினங்களை குறைக்கும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். ரயில்களில் பொறுத்தப்பட்டு உள்ள சோலார் தகடுகள் மூலம் தற்போது 17 யுனிட்ஸ் மின்சாரம் பெறமுடிகிறது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tuesday, May 19, 2015

30 வயதினிலே... வல்லமை மிகு லாரி ஓட்டுநர் ஜோதிமணி

நீங்கள் பெண்கள் சுயமுன்னேற்றத்தைப் பறை சாற்றும் ஜோதிகாவின் '36 வயதினிலே' திரைப்படத்தை பார்த்துவிட்டு புத்துணர்ச்சியுடன் இருக்கிறீர்களா? அதே புத்துணர்ச்சியுடன் ஜோதிமணியின் வெற்றியையும் கொண்டாடுங்கள்.
ஆணுக்குப் பெண் சரிசமமாக வேலை செய்தாலும் அவர்களுக்கு சவால்கள் நிறைய இருக்கின்றன. அதுவும் லாரி ஓட்டுநர் என்றால் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து சொல்லவே வேண்டாம்.

Monday, January 12, 2015

பில்லிங் தொழில்நுட்பம்!


சிறிய அளவில் கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைக்கிறார்கள். ஆனால், அதன் பலனாக அவர்களுக்கு கிடைப்பதென்னவோ ஒரு சில ஆயிரம் ரூபாய்தான். பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து, பல ஆண்டுகள் உழைத்தும் பெரிய அளவில் லாபம் கிடைக்காமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம், வருமானமும் செலவும் சரியானபடி கணக்கில் வராமல் போவதினால்தான். சரியான லாபம் கிடைக்காமல் தவிக்கும் இவர்களுடைய பிரச்னைக்குத் தீர்வு தேடி, சில கடைகாரர்களைச் சந்தித்தோம்.

Tuesday, May 29, 2012

தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-20

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-20
*சுனில் ரான்டே என்பவர் பம்பாயில் உள்ள "நேச்சுரல் கிஸ்ட்ரி சொஸைட்டி' என்ற இடத்தில் பாம்பு பிடிப்பவராக வேலை செய்கிறார். இவர் தன்னுடைய ஆறாவது வயதில் ஒரு பாம்பை பிடித்தார். அன்றிலிருந்து இன்று வரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ளார். இவர் பிடித்த பாம்புகளிலேயே மிகவும் பெரியது 15 அடி நீளமுள்ள பைத்தான் என்ற மலைப் பாம்பு.

*டில்லியிலுள்ள முனிசிபல் கார்ப்பரேஷனில் எலிகளுக்கு என்றே ஒரு தனி பிரிவு உள்ளது. அதில் 97 பேர் வேலை செய்கின்றனர். அதில் 74 பேர் எலி பிடிப்பவர்கள்; மற்றவர்கள் அவர்களை சூப்பர்வைஸர் செய்யும் அதிகாரிகள் ஆவர். இந்த டிபார்ட்மென்ட்டில் எலிப்பிடிப்பதற்கான கருவிகள் எதுவுமே இல்லை என்பதுதான் விசேஷமே!

*சுவீடன் நாட்டை சேர்ந்த 19 வயது பெண் ஒரு ரெஸ்டாரென்ட் ஒன்றில் வெயிட்ரஸ் ஆகப் பணி புரிகிறார். ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி இவருக்கு கொடுத்த டிப்ஸ் தொகையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 30 ஆயிரம் ரூபாயை கொடுத்திருந்தார் அந்த பணக்காரக் கிழவி.

*ஒன்பது வயது சிறுவன் அருப்மன்னா வெஸ்ட் பெங்காலைச் சேர்ந்தவன். இவன் 2004 செப்டம்பர் மாதம் தூங்க ஆரம்பித்தான். அன்று முதல் இன்று வரை தூங்கிக் கொண்டே இருக்கிறான். இவனுக்கு சாப்பாடு கொடுப்பதற்கும், பாத்ரூம் அழைத்துசெல்வதற்கு மட்டுமே பெற்றோர் இவனை எழுப்புவர். மற்ற நேரங்களில் எல்லாம் இவனை எழுப்பவே முடியாது. பல மருத்துவர்களிடம் காட்டியும் எந்த மருத்துவராலும் இவனது நிலைக்கு காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை.

* பாம்பு, பல்லி, ஆமை, முதலை போன்ற ஊர்வனவற்றில் ஏறத்தாழ ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.

* உலகில் ஏறத்தாழ 500 எரிமலைகள் உள்ளன.

* ஒட்டகம் ஒரே நேரத்தில் 90 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

* ஏப்ரல் என்ற பெயர் "ஏப்பிரிரே' என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. "எல்லாம் இனிதே நிகழும்' என்பது இதன் அர்த்தம்.

* பாரதியார் "பாரதி' என்ற பட்டம் பெற்ற போது அவருக்கு வயது 11.

* ஆங்கிலப் பாடல்கள் எழுதத் துவங்கிய போது சரோஜினி நாயுடுவுக்கு வயது 13.

* அரசியலில் முழு மூச்சுடன் ஈடுபடத் துவங்கிய போது காமராஜருக்கு வயது 17.

* பல்லிகளில் 2,500 வகைகள் உண்டு.

* பாம்பு போல பல்லியும் தனது மேல் தோலை உரிக்கும்.

* பல்லிகள் மாதக் கணக்கில் உணவின்றி உயிர் வாழும் இயல்பு கொண்டது.

* வாழும் இடத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை பல்லிகளுக்கு உண்டு.

* வீட்டுப் பல்லிகள் இரண்டு ஆண்டுகளே உயிர் வாழும்.

*பத்திரிகைச் செய்தியாளர்களை நிருபர்கள் என்கிறோம். ஏன் தெரியுமா? முன்பெல்லாம் செய்தியாளர்கள் கடிதங்கள் மூலமே பத்திரிகைகளுக்குச் செய்திகளை அனுப்பி வந்தனர். வடமொழியில் "நிருபம்' என்றால் கடிதம் என்று பொருள். நிருபங்கள் எழுதி வந்ததால் செய்தியாளர்களும் நிருபர்கள் என அழைக்கப்பட்டனர்.

* வெட்டுக் கிளிக்கு கால்களில் தான் காதுகள் உள்ளன.

* நியூசிலாந்தில் காகமே கிடையாது.

* காகத்திற்கு காதுகள் கிடையாது. கண்ணின் பின்புறமுள்ள துளையின் வழியே கேட்கிறது.

* சவுதி அரேபியா நாட்டில் நதிகளே கிடையாது.

* சீனாவின் புனித விலங்காக வணங்கப்படும் விலங்கு பன்றி.

* உலகிலேயே அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான் தான்.

* எலி, கங்காரு ஆகியவை மிக குறைந்த அளவே தண்ணீர் அருந்துகின்றன.

* ஆஸ்திரேலியாவில் இருக்கும் கங்காருவின் உயரம் 6 அடி. உடலில் பையை உடைய ஒரே விலங்கினம் கங்காரு. கங்காருவின் வால் 4 அடிக்கு மேல் நீளமானது. ஒரே தாவலில் இது 25 முதல் 30 அடிவரை தாண்டி விடும். இதன் குட்டிகள் பிறக்கும் போது கருஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். கங்காருகள் பொதுவாக பயந்த சுபாவம் கொண்டவை. கங்காருகளின் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

Engr.Sulthan

தெரிந்து கொள்வோம் வாங்க!பகுதி-19

அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-19

* பன்னீர்ப் பூ இரவில் மலரும்.

* கார்த்திகைப் பூ என்றழைக்கப்படுவது காந்தள் மலர்.

* இரு குரங்கின் கை எனப்படுவது முசுமுசுக்கை.

* உலகின் மிகப் பழைய மரம் தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம். இதன் வயது 4,130 ஆண்டுகள்.

* உலகின் மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் ùஸகோயா பூங்காவில் உள்ள ஷெர்மன் மரம்.

*உலகிலேயே மிகப் பெரிய பள்ளிக் கூடம் நம் இந்தியாவில் தான் இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள சிட்டி மாண்டிசேரி பள்ளிதான் உலகிலேயே மிகப் பெரிய பள்ளி என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில், சுமார் 22,612 மாணவர்கள் பயில்கின்றனர்.

*ஒட்டகத்துக்கு மூன்று இரைப்பைகள் உள்ளன.

* பெயர்கள் பற்றிய படிப்புக்கு ஓனோமாஸ்டிக் என்று பெயர்.

* இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜி.

* தங்கம் அதிகளவில் வெட்டி எடுக்கப்படும் நாடு தென்னாப்ரிக்கா.

* உலகின் மிகப் பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம். 90 லட்சம் சதுர பரப்பளவு கொண்டது இந்தப் பாலைவனம்.

* சாதாரணமாக ஒரு பல்ப்பின் ஆயுள்காலம் 3,000 மணி நேரம் ஆகும்.

* சிலந்திப் பூச்சிகளில் குண்டு வீசும் வண்டு என்ற ஒரு வகை வண்டு உண்டு. இவ்வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி உண்டு. இந்தச் சுரப்பியில் உள்ள ஒரு வகை திரவமும் வெடிக்கம் தன்மை கொண்டது. அதனால் இதற்கு இப்பெயர் வந்தது.

* டென்னிஸ் மட்டைகள் மகாகனி, சிக்மோர், பீச் ஆகிய மூன்றுவித மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

* நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கணினி மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா ஆகும்.

* ஆஸ்ட்ரிச் என்னும் பறவை கல்லை தின்னும் தன்மை உடையது.

* உராங் உடான் என்ற குரங்கினத்தை "கானகத்தில் கிழவன்' என்று மலேசிய மக்கள் அழைக்கின்றனர்.

* ஒரே கவிஞர் இரு நாடுகளுக்குத் தேசிய கீதம் எழுதிய பெருமையைப் பெற்றவர் ரவீந்தரநாத் தாகூர். இவர் இந்தியா மற்றும் வங்கதேசத் தேசிய கீதங்களை எழுதியுள்ளார்.

* பத்திரிகைகளில் மலர், இதழ் என்று போடுகிறார்கள் எதற்கு தெரியுமா? மலர் என்றால் ஆண்டு என்றும், இதழ் என்றால் அந்த ஆண்டில் அது எத்தனையாவது இதழ் என்ற தகவலையும் தரும்.

* ரோஜா மலரின் வாசனை இதயத்துக்கு பலம் சேர்க்கும்.

* பாரி, ஆய் அண்டிரான், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடையேழு வள்ளல்கள் ஆவர்.

* தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாமல் இருப்பது போலவே, திருக்கோட்டியூர் மாதவன் கோயில் கோபுரத்தின் நிழலும் கீழே விழுவதில்லை.

* கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி இராமநாதபுரத்திலுள்ள நாட்டரசன் கோட்டையில் உள்ளது.

* சீதையின் தந்தை பெயர் ஜனகர். தாயின் பெயர் சுநயனீ.

* துப்பாக்கியை ஏமப்பூட்டு, துமிக்கி என்றும், பீரங்கியை குண்டு குழாய் என்றும், ரிவால்வரை சுழலி என்றும் அழகிய தமிழ்ப் பெயர்கள் சூட்டி அழைத்தவர் தேவநேயப் பாவாணர்.

Posted Image

மாமிசம் உண்ணும் தாவரம் இந்த பிட்சர் தாவரம். சிறு பூச்சிகளைப் பிடித்து தின்னும். இந்தத் தாவரம் ஆசியாவில் உள்ளது. பிட்சர் தாவரத்தின் இலைகள் ஜாடி போல் வளைந்து காணப்படும். இது மிகவும் இனிப்பான சாறு ஒன்றை சுரக்கும். இந்தச் சுவை மிகுந்த சாறை குடிக்கச் செல்லும் பூச்சிகள், இந்த ஜாடிக்குள் மாட்டிக் கொள்ளும். ஜாடியின் அடியில் ஜீரணம் செய்யும் அமிலங்கள் சுரக்கும். அங்கே அப்படியே இந்தப் பூவினால் விழுங்கப்பட்டு விடும் பூச்சிகள். அய்யோ பாவம்!

Engr.Sulthan

தெரிந்து கொள்வோம் வாங்க!பகுதி-16

அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-16
நதிகளே இல்லாத நாடு - சவூதி அரேபியா.
காகங்கள் இல்லாத நாடு - நியூஸிலாந்து.
கொசுக்கள் இல்லாத நாடு -பிரான்ஸ்.
திரையரங்குகளே இல்லாத நாடு -பூட்டான்.
பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு -சுவிட்ஸர்லாந்து.
வருமான வரி விதிப்பு இல்லாத நாடு -குவைத்
.
எழுதப் படிக்கத் தெரியாத முகலாய மன்னர் -அக்பர்.
ஆங்கிலம் தெரியாத இங்கிலாந்து மன்னர் -முதலாம் ஜார்ஜ்.
குதிக்கத் தெரியாத மிருகம் -யானை.
கண்களிருந்தும் பார்வை இல்லாத விலங்கு -வவ்வால்.
மீன்கள் இல்லாத நதி -ஜோர்டான்
ரயில்கள் இல்லாத நாடு - ஐஸ்லாந்து
தேசியக்கொடி இல்லாத நாடு - மாசிடோனியா
கடலில் கலக்காத நதி - யமுனை
எலும்புக் கூடு இல்லாத விலங்கு -ஜெல்லி மீன்.
பாலூட்டிகளில் நீந்தத் தெரியாத இரு விலங்குகள் -ஒட்டகம், பன்றி.
நீர் குடிக்காத விலங்கு - எலி, கங்காரு
.
கூடு கட்டாத பறவை -குயில்.
பாம்புகள் இல்லாத இடம் - ஹவாய் தீவு
விதை இல்லாத பழம் -அன்னாசி.
மனித உடல் சில விஷயங்கள்
மனித மூளையின் எடை 1.36 கிலோ
மனிதனுக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.
மனிதன் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ
.மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.
மனிதனின் முதுகுத்தண்டு 33 முள் எலும்புகளால் ஆனது.
மனிதன் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது.
இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.
மனித உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
உடலில் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருந்தால் மனிதன் குள்ளமாக இருப்பான்.
மனிதனின் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.
மனிதன் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.
மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.
Engr.Sulthan

தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-15

அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-15


*முதன் முதலில் மின்சாரம் தாக்கி இறந்தவர் யார் தெரியுமா?... அமெரிக்காவின் டபிள்யூ. ரிச்மேன் ஆவார். பெஞ்சமின் பிராங்கிளின் 1749-ம் ஆண்டு மின்னலுக்கு மின்சக்தி உண்டு என்ற உண்மையை உலகிற்கு கண்டறிந்து சொன்ன போது அதை உண் மையா, பொய்யா என நிரூபிக்கிறேன் என தைரியமாகக் கூறிய ரிச்மேன் பரிசோதனையில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி உயிரை இழந்தார்.

***

*தென் அமெரிக்க கண்டத்தில் கான்டோர் என்னும் ராட்சத பருந்து காணப்படுகிறது. இதை தென் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் ஸ்பானிஷ்காரர்கள் தெய்வமாகக் கருதுகிறார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜுலைமாதம் 29-ந்தேதி கான்டோர் தினம் என்னும் நாளையும் கடைப் பிடிக்கிறார்கள். அன்று இந்த பருந்தை எருதின் முதுகில் கட்டி விடுவார்கள். பருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எருதைக் குத்திக் குத்திக் காயமாக்கும். முடிவில் எருது இறந்து போகும். எருது சொர்க்கத்திற்குப் போகும் என எண்ணி விழாவை நடத்துவோர் மகிழ்ச்சி அடைவார்கள்.

இப்படி எருதைக் கொல்வதற்கு மிருகவதை சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததையொட்டி இப்போது இந்தப் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

***

*அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அல்டமெண்ட் கணவாய் பகுதியில் நூற்றுக்கணக்கான காற் றாலைகள் உள்ளன. இதன் மூலம் உற்பத்தியாகும் மின் சாரத்தின் மூலம் கலிபோர்னியா மாகாணத்தின் தேவையில் 10 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு விடுகிறது.

இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் உலக காற்று சக்தி மின்சாரத்தில் 85 சதவீதத்தை கலிபோர்னியா மாகாணம் பயன்படுத்திக் கொள்கிறது.

***

*மிக வேகமாக ஓடக் கூடிய குதிரையையும் மிஞ்சி சாதனை படைத்து உலக சாதனை புத்தகமான கின்னசிலும் இடம் பிடித்திருக்கிறார், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த ஐப்பால் லூம் என்னும் ஓட்டப் பந்தய வீரர்.

குதிரையுடனான 10 ஆயிரம் மீட்டர் தூரப் போட்டியில் அவர் கலந்து கொண்டார். இந்த பந்தயத்தில் அவர் குதிரையை விட 20 செகண்டுகள் முன்னதாக ஓடி வந்து வெற்றிக் கம்பத்தைத் தொட்டு வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தினார்.

***

*ஒலிம்பிக்கில் ஒரே விளையாட்டில் தொடர்ந்து நான்கு தடவை தனி ஒருவரே தங்கப்பதக்கத்தை வென்றவர் என்ற பெருமை ஒரே ஒரு வருக்கு மட்டுமே உண்டு. அவர் அமெரிக்காவின் ஆல்பிரட் அடால்ப் ஆர்ட்டர். 1956-ம் ஆண்டு முதல் 1968- ம் ஆண்டு வரை நடந்த நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் வட்டு எறியும் போட்டியில் தொடர்ந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

*****
"ஹான்ஃபில்" என்பது அமேசான் காடுகளில் காணப்படும் ஒருவகை சிலந்தி. இவற்றின் முக்கிய உணவு என்ன
தெரியுமா? மீன்கள்தான். இந்த சிலந்திகள், மீன்களைப் பிடித்துத் தின்பதற்காகக் குளம், குட்டைகளில் மூழ்கும். நீரிலும் வாழக்கூடிய தன்மை கொண்டிருந்தாலும் இவ்வகை சிலந்திகள் இரைக்காக மட்டுமே தண்ணீருக்குள் செல்லும். எப்படி தெரியுமா?
கனமான பொருள் ஒன்றைக் கவ்விக் கொண்டு நீரில் மூழ்கும். தண்ணீருக்குள் இரை தின்றதும், கவ்விய கனப்பொருளை விட்டு விடும். உடல் கனம் குறைவதால் தானாக நீரின் மேற்பரப்புக்கு வந்து சேர்ந்து விடுமாம்.
****

*வெனிஸ் நகரில் கோமாளி கல்லூரி அமைந்துள்ளது. கோமாளிகளுக்குப் பயிற்சியளிக்கும் இக்கல்லூரியில் 50 மாணவர்களுக்கு மட்டுமே இடமுண்டு. எட்டு வாரப் பயிற்சியில் கழைக் கூத்தாடுதல், பொய்க்கால் கட்டி ஆடுதல் போன்ற பல வித்தைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

* எறும்புகள் பூமிக்கு அடியில் கூடுகள் கட்டிக் கொள்கின்றன. சில வகை எறும்புகள் மட்டும் உயர்ந்த மரங்களில் கூடுகளை உருவாக்கிக் கொள்கின்றன.

* எறும்பு, பூச்சி வகைகளில் ஹைமனாப்டிரா என்ற வகையைச் சேர்ந்தது.

* ஹனி ஆன்ட்ஸ் என்ற அழைக்கப்படும் தேன் எறும்புகள் தங்கள் வயிற்றிலேயே தேன் போன்ற பொருள்களைச் சேகரித்து வைக்கின்றன. இதனால், இவற்றின் வயிறு பருத்து உருண்டு தேன் குடமாகக் காட்சியளிக்கும். தேன் கிடைக்காத காலங்களில் வாய் வழியே தேனைத் துப்பி மற்ற எறும்புகளுக்குக் கொடுக்கின்றன.

* எறும்புகளுக்கு பார்வை தெரியாது. தன்னுடைய உணர்வுத் திறனால் மோப்பம் பிடித்து வழியை அறிந்துக் கொள்கின்றன.

*தொடரும்...

முழு அளவு படத்தைப் பார்
இணைய தள கடலில் மூழ்கி உங்களுக்காக முத்துக்கள் எடுத்து கோர்த்து தருபவன்,
Engr.Sulthan

தெரிந்து கொள்வோம் வாங்க!பகுதி-14

அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-14

*மிகப்பெரிய யானைச் சந்தை பீகார் மாநிலம் சோனேப் பூரில் நடக்கிறது.

*யானையின் சுவடு அதன் பாதத்தைவிடப் பெரியதாகும்.

*யானை, குதிரை, ஒட்டகச் சிவிங்கி இவை மூன்றும் நின்று கொண்டே தூங்கக் கூடியவை.

*ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது.

*பாம்புகள் கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும்.

*இந்தியா, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே மயிலினம் உண்டு. மயிலினத்தின் பரம விரோதி பூனை. புலி, சிறுத்தைக்கு மயில் இறைச்சி என்றால் ரொம்பவும் பிரியம். புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வண்ணத் தோகை கொண்ட மயில்களைப் பார்த்ததும், அவைகளின் விழிகளையே இமை கொட்டாமல் பரிவுடன் பார்த்தே வசியப்படுத்திவிடுமாம். மயில் சுயநினைவை இழந்து சிலை போல் நின்றபடியே இருக்கும்போது அவை மயிலைப் பாய்ந்து கடித்து ருசி பார்த்து விடும்.

*பராகுவே நாட்டில் கைபிமெண்டி என்னும் பள்ளத்தாக்கில் வாழும் சென் என்னும் பழங்குடி இன மக்கள் தண்ணீர் அருந்துவதே இல்லை. காரணம் இங்குள்ள ஏரியில் உள்ள தண்ணீர் அதிக உப்பாக இருப்பதுதான். தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக இங்கு பயிராகும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து அதையே தண்ணீருக்குப் பதிலாக அருந்துகிறார்கள்.

*நியூசிலாந்து நாட்டின் தேசியப் பறவை கிவி ஆகும். இப்பறவையால் பறக்க முடியாது. ஆனால் தரையில் படு ஸ்பீடாக நடந்து செல்லும். பகலில் கூட்டில் தங்கும். இரவுதான் இரை தேடக் கிளம்பும். இது ஒரு தூங்கு மூஞ்சிப் பறவை என்பது குறிப்பிடத்தக்கது.

*நாம் வாழும் பூமியில் கடல் பகுதி மட்டும் 70 சதவீதம் உள்ளது. கடல் பகுதியின் மொத்தப் பரப்பளவு மட்டும் 36 கோடியே 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் ஆகும். உலகம் முழுவதும் இருப்பது ஒரே கடல்தான் என்றாலும் புவியியல் அறிஞர்கள் அவை சார்ந்துள்ள நிலப்பகுதிகளைக் கொண்டு அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவ்வாறு பிரிக்கப் பட்டவைதான் பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல் ஆகியன.

இவை தவிர மத்திய தரைக் கடல்,பால்டிக் கடல்,கருங்கடல், கரீபியன் கடல், செங்கடல் போன்று நான்கு பக்கமும் நிலப்பகுதியால் சூழப்பட்ட உள்நாட்டுக் கடல்கள் உட்பட 16 கடல்கள் உண்டு. கடலின் அடியில் பல மலைகள், மலைத் தொடர்கள், பள்ளத்தாக்குகள் இருக்கின்றன.

*உலகில் உள்ள அத்தனை கடல்களின் நீரில் இருந்தும் உப்பை தனியே பிரித்து எடுத்து விட்டால் அப்போது கடல் மட்டத்தில் சுமார் 100 அடி தாழ்ந்து விடும். ஏனெனில் கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம் உப்புத் தன்மை உள்ளது.

*தொடரும்...

முழு அளவு படத்தைப் பார்
இணைய தள கடலில் மூழ்கி உங்களுக்காக முத்துக்கள் எடுத்து கோர்த்து தருபவன்,
Engr.Sulthan

தெரிந்து கொள்வோம் வாங்க!பகுதி-13

அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-13

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.

12.திரை அரங்குகளே இல்லாத நாடு சவுதி அரேபியா, பூட்டான்.

13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.

15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.

*தொடரும்...

முழு அளவு படத்தைப் பார்
இணைய தள கடலில் மூழ்கி உங்களுக்காக முத்துக்கள் எடுத்து கோர்த்து தருபவன்,
Engr.Sulthan

தெரிந்து கொள்வோம் வாங்க!பகுதி-12

அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-12

உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்கள் இமயமலையில் உள்ள கார கோரம் மலைத்தொடரில் உள்ளது. உலகில் 24 ஆயிரம் அடிக்கு மேல் உயரமுள்ள 109 மலைச் சிகரங்கள் இந்த காரகோரம் மலைத் தொடரில் இருக்கின்றன.

கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகரம் வென்சுவான் என்ற நகரமே. திபெத்தைச் சேர்ந்த இந்த நகரம் 1955-ம் ஆண்டு 16 ஆயிரத்து 732 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.

ஆட்டு ரோம ஆடைகள் பண்டைய காலம் தொட்டே மனி தனுக்கு பரிச்சயமான ஒன்று. ஆட்டு ரோமத்தால் செய்த ஆடை களை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள் விதவிதமாகத் தயாரித்து அணிந்தனர்.

அமெரிக்காவில் கி.மு.140 ஆண்டுக்குப் பிறகுதான் ஆட்டு ரோம ஆடைகள் அறிமுகம் ஆயின.

நமது நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் தரகர்கள் மூலம் திரு மணம் நிச்சயம் செய்வது இன்றும் நடக்கிறது. ஆப்பிரிக்க கண் டத்தில் சில நாடுகளிலும் தரகர்கள் மூலம் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா, ஜப்பான் போல வேறு எந்த நாட்டிலும் அதிக அளவில் திருமணத் தரகர்கள் கிடையாது.

சீனர்கள் மலேசியாவில் உள்ள பினாங்கில் குடியேறியபோது குவான் யுன் டிங் என்ற தங்களது பெண் தெய்வத்திற்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள். பிற்காலத்தில் சுருக்கமாக இந்த தெய் வத்தை குவான்யின் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

சீனர்களுடன் புத்த மதத்தினர், டாவோ மதத்தினர், கன்பூஷியஸ் மதத்தினர் என பலதரப்பட்டவர்களும் தங்களுக்கு உள்ள மனக் குறை முதலியவற்றை இந்த தெய்வத்திடம் வந்து சொல்லி பிரார்த்தனை செய்கிறார்கள். புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டால் ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம்தான் என்று சீனர்கள் நம்பு கிறார்கள்.

1880-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹன்னே என்ற விஞ்ஞானியும் 1893-ல் பிரான்ஸ் நாட்டின் ஹென்றி மாய்சன் என்னும் விஞ்ஞானியும் 1906-ல் சர் வில்லியம் கிருக்ஸ் என்னும் இன் னொரு இங்கிலாந்து விஞ்ஞானியும் செயற்கை வைர தயாரிப்பில் தனித் தனியாக ஆராய்ச்சி நடத்தி ஓரளவு வெற்றி கண்டார்கள்.

ஆனால், அப்படி உருவான வைரம் தரமானதாக இருக்கவில்லை. 1954-ம் ஆண்டு ஒரு சில மாற்றங்களுடன் செயற்கை வைரம் உருவாகத் தொடங்கியது. என்றாலும் 1960-ம் ஆண்டு தான் விற்பனைக்கு வந்தது.

உலகின் மிக நீளமான ஆறு எது என்பதில் தென் அமெரிக் காவில் உள்ள அமேசான் நதியா அல்லது ஆப்பிரிக்க கண்டத் தில் உள்ள நைல் நதியா என்ற சர்ச்சை நீண்ட கால மாகவே இருந்து வந்தது.

கடைசியாக அது கடந்த நூற்றாண்டின் மத்தியில்தான் தீர்த்து வைக்கப்பட்டது. நைல் நதியின் நீளம் 4 ஆயிரத்து 146 மைல் என்றும் அமேசான் நதியின் நீளம் 4 ஆயிரத்து 7 மைல் என்று இறுதியாக நிர்ணயிக்கப்பட்டு, நைல் நதியே இந்தப் போட்டியில் வென்றது.

***
பாட்டில், மற்றும் டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான குளிர்பானங் களில் கார்பன் வாயு நிரப்பப் பட்டிருக்கும். இந்த வாயுவுடன் குளிர்பானத்தைச் சேர்ந்து குடித்தால் உடலுக்குத் தீங்குதான் ஏற்படும். எனவே அதில் இருக்கும் வாயுக்கள் முற்றிலுமாக வெளியேறியப் பின் குடிப்பதே நல்லது. வாயுக்கள் வெளியேற குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்களாவது ஆகும். ஆகவே அதன் பின் இந்தக் குளிர்பானங்களைக் குடித்தால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது.

ஈலின் போல்ஸ்ஸை கொண்டு விளையாடிய டேவ் ராபெட்ஸ் அவரது உலக சாதனையை முறியடித்தார். 18 அடிக்கு 81/4 இன்ச்சஸ் தாண்டி ஈல்பெல்லின் சாதனையை முறியடித்தார்!

*ராபின்சன் குரூஸே என்ற நாவல் டேனியல் டிபோ என்வரால் எழுதப்பட்டது. இது மிகவும் புகழ்பெற்ற ஒரு நாவல். ஒரு தனிமையான தீவில் விடப்பட்ட மனிதனை பற்றிய கதை இது. படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் ராபின்சன் குரூஸே என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் ஒரு தீவில் தனியாக மாட்டிக் கொள்வான். நர மாமிசம் தின்னும் அந்த தீவில் ஒரு ஆதிவாசியை நண்பனாக்கிக் கொண்டு அவனுக்கு பிரைடே என பெயர் சூட்டி பல வருடங்கள் அந்த தீவிலேயே வாழ்வார்கள். இந்த நாவல் 1719ம் ஆண்டு வெளியாகி உலக மக்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இது உண்மையிலேயே நடந்த சம்பவம்.

ஸ்காட்டிஷ் ஸ்ய்லர் அலெக்சாண்டர் என்பவர் தன்னுடைய கப்பல் உடைந்து போனதன் நிமித்தம் சிலி என் தீவில் மாட்டிக் கொண்டார். அங்கே நான்கு வருடங்கள் வாழ்ந்தார். அவரை பிரிட்டிஷ் கேப்டன் ஒருவர் காப்பாற்றினார். அலெக்சாண்டர் சொன்ன தீவு அனுபவங்களை கேப்டன் எழுதி வைத்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான் ராபின்சன் குரூஸே என்ற நாவல்.

உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்கள் இமயமலையில் உள்ள கார கோரம் மலைத்தொடரில் உள்ளது. உலகில் 24 ஆயிரம் அடிக்கு மேல் உயரமுள்ள 109 மலைச் சிகரங்கள் இந்த காரகோரம் மலைத் தொடரில் இருக்கின்றன.

கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகரம் வென்சுவான் என்ற நகரமே. திபெத்தைச் சேர்ந்த இந்த நகரம் 1955-ம் ஆண்டு 16 ஆயிரத்து 732 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.

ஆட்டு ரோம ஆடைகள் பண்டைய காலம் தொட்டே மனி தனுக்கு பரிச்சயமான ஒன்று. ஆட்டு ரோமத்தால் செய்த ஆடை களை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனியர்கள் விதவிதமாகத் தயாரித்து அணிந்தனர்.

அமெரிக்காவில் கி.மு.140 ஆண்டுக்குப் பிறகுதான் ஆட்டு ரோம ஆடைகள் அறிமுகம் ஆயின.

நமது நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் தரகர்கள் மூலம் திரு மணம் நிச்சயம் செய்வது இன்றும் நடக்கிறது. ஆப்பிரிக்க கண் டத்தில் சில நாடுகளிலும் தரகர்கள் மூலம் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா, ஜப்பான் போல வேறு எந்த நாட்டிலும் அதிக அளவில் திருமணத் தரகர்கள் கிடையாது.

சீனர்கள் மலேசியாவில் உள்ள பினாங்கில் குடியேறியபோது குவான் யுன் டிங் என்ற தங்களது பெண் தெய்வத்திற்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள். பிற்காலத்தில் சுருக்கமாக இந்த தெய் வத்தை குவான்யின் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

சீனர்களுடன் புத்த மதத்தினர், டாவோ மதத்தினர், கன்பூஷியஸ் மதத்தினர் என பலதரப்பட்டவர்களும் தங்களுக்கு உள்ள மனக் குறை முதலியவற்றை இந்த தெய்வத்திடம் வந்து சொல்லி பிரார்த்தனை செய்கிறார்கள். புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டால் ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம்தான் என்று சீனர்கள் நம்பு கிறார்கள்.


1880-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹன்னே என்ற விஞ்ஞானியும் 1893-ல் பிரான்ஸ் நாட்டின் ஹென்றி மாய்சன் என்னும் விஞ்ஞானியும் 1906-ல் சர் வில்லியம் கிருக்ஸ் என்னும் இன் னொரு இங்கிலாந்து விஞ்ஞானியும் செயற்கை வைர தயாரிப்பில் தனித் தனியாக ஆராய்ச்சி நடத்தி ஓரளவு வெற்றி கண்டார்கள்.

ஆனால், அப்படி உருவான வைரம் தரமானதாக இருக்கவில்லை. 1954-ம் ஆண்டு ஒரு சில மாற்றங்களுடன் செயற்கை வைரம் உருவாகத் தொடங்கியது. என்றாலும் 1960-ம் ஆண்டு தான் விற்பனைக்கு வந்தது.

உலகின் மிக நீளமான ஆறு எது என்பதில் தென் அமெரிக் காவில் உள்ள அமேசான் நதியா அல்லது ஆப்பிரிக்க கண்டத் தில் உள்ள நைல் நதியா என்ற சர்ச்சை நீண்ட கால மாகவே இருந்து வந்தது.

கடைசியாக அது கடந்த நூற்றாண்டின் மத்தியில்தான் தீர்த்து வைக்கப்பட்டது. நைல் நதியின் நீளம் 4 ஆயிரத்து 146 மைல் என்றும் அமேசான் நதியின் நீளம் 4 ஆயிரத்து 7 மைல் என்று இறுதியாக நிர்ணயிக்கப்பட்டு, நைல் நதியே இந்தப் போட்டியில் வென்றது.

பாட்டில், மற்றும் டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையான குளிர்பானங் களில் கார்பன் வாயு நிரப்பப் பட்டிருக்கும். இந்த வாயுவுடன் குளிர்பானத்தைச் சேர்ந்து குடித்தால் உடலுக்குத் தீங்குதான் ஏற்படும். எனவே அதில் இருக்கும் வாயுக்கள் முற்றிலுமாக வெளியேறியப் பின் குடிப்பதே நல்லது. வாயுக்கள் வெளியேற குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்களாவது ஆகும். ஆகவே அதன் பின் இந்தக் குளிர்பானங்களைக் குடித்தால் உடலுக்கு எந்தத் தீங்கும் இருக்காது.
*உங்களுக்கு தெரியுமா ஒரு பவுண்ட் தேன் எடுப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து மகரந்தத்தை தேனீக்கள் சேகரிக்க வேண்டும் என்பது. இந்த வேலையை வேலைக்கார தேனீக்கள் தான் செய்யும். இவை மிகவும் கடினப்பட்டு உழைத்து பூவிலுள்ள மகரந்தத்தை கொண்டு வந்து தேன் கூட்டில் வைத்து பாதுகாத்து தேனை உருவாக்கும். பூவின் மகரந்தம் மற்றும் தேனீக்களின் எச்சில் சேர்ந்து உருவாவதே தேனாகும்.

*ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டேவ் ராபட்ஸ் என்பவர் 1976ம் ஆண்டு கலந்து கொண்டார். அப்போது போட்டியின் போது தன்னுடைய போல்வால்ட் குச்சிகளை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்து திகிலுற்றார். தன்னை எப்படியும் போட்டியிலிருந்து நீக்கிவிடுவர் என்று பயந்தார். அப்போது உலக சாம்பியனாக இருந்தார் ஈல்பெல். 18 அடி 71/4 இன்ச்சஸ் என்ற முறையில் சாதனை படைத்திருந்தார். இவரது சங்கடத்தை உணர்ந்து உதவிக்கு வந்தார். தன்னுடைய போல்ஸ்ஸை கொடுத்து விளையாடும்படி கூறினார்.

ஈலின் போல்ஸ்ஸை கொண்டு விளையாடிய டேவ் ராபெட்ஸ் அவரது உலக சாதனையை முறியடித்தார். 18 அடிக்கு 81/4 இன்ச்சஸ் தாண்டி ஈல்பெல்லின் சாதனையை முறியடித்தார்!

* டார்டர் என்ற பறவை இந்தியாவிலுள்ள துணை கண்டங்களில் எல்லாம் வசிக்கிறது. இதன் கழுத்து பாம்பை போன்று இருக்கும். கூரிய அலகை உடையது. கருப்பு நிறத்தில் உள்ள இதன் உடல் முழுவதும் சில்வர் க்ரே கலர் கோடுகள் காணப்படும் உள்ள. இதன் தலையும், கழுத்தும் வெல்வெட் ப்ரவுன் கலரில் இருக்கும். தாடையும் தொண்டையும் வெள்ளை கலரில் இருக்கும். நீந்தும் பொழுது இதன் உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும். கழுத்தும் மூக்கும் மட்டுமே பாம்பு போல் வெளியில் தெரியும். இதன் விருப்ப உணவு மீன். இப்பறவை குஞ்சு பொறிக்கும் காலங்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை. தண்ணீர் ஓரம் உள்ள மரங்களில் கூடுகள் அமைத்து குஞ்சு பொறிக்கும். ஒரே சமயத்தில் முட்டைகளை இடும். முட்டைகள் கிரீனிஷ் புளூ கலரில் இருக்கும். 

முழு அளவு படத்தைப் பார்
இணைய தள கடலில் மூழ்கி உங்களுக்காக முத்துக்கள் எடுத்து கோர்த்து தருபவன்,
Engr.Sulthan