ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உலகப் பிரசித்தம். இது பாலும்
சர்க்கரையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஓர் இனிப்புப் பலகாரம். தமிழகம்,
பிற மாநிலங்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இது விரும்பி
உண்ணப்படுகிறது. இதன் வரலாறு பல நூற்றாண்டுப் பின்புலம் உடையது. ஆனால்
1970களில் இருந்துதான் இங்கே பால்கோவா தயாரிக்கப்பட்டு உலகப் புகழை
அடைந்தது. பால் மற்றும் அது சார்ந்த உணவுப் பொருட்களைத் தொடக்க காலத்திலே
நாம் பயன்படுத்தி இருக்கிறோம்.