Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label பற்கள். Show all posts
Showing posts with label பற்கள். Show all posts

Friday, November 14, 2014

பற்களை பராமரிப்பது ஈஸி...

பல் போனால் சொல் போச்சு என்பார்கள். இந்தப் பொன்மொழி எப்போது தோன்றியது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பல காலமாக பற்களை சரிவர பராமரிக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்லி வருகிறார்கள். ஏனெனில் பற்கள் தான் ஆரோக்கியத்துக்கான வாசல் என்கிறார் பிரபல பல் மருத்துவமனையில் பல் நிபுணராக பணிபுரியும் டாக்டர் தீபாலட்சுமி. 

Sunday, November 3, 2013

முத்து (பற்கள்) நம் சொத்து!


சிறிய வயதில்தான் சொத்தைப் பற்கள் வர அதிக வாய்ப்புண்டு. எனவே அதிக கவனம் சிறிய வயது குழந்தைகளிடம் தான் தேவை. முக்கியமாக தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் வாயில் பாட்டிலை கடித்துக் கொண்டே தூங்கி விடுவதுண்டு.
தாய்ப்பாலில் சர்க்கரை கிடையாது. தாய்ப்பாலுக்குப் பதிலாக நாம் கொடுக்கும் பசும்பால், புட்டிப் பால் முதலியவற்றில் நாம் சர்க்கரையை சேர்த்துதான் கொடுக்கிறோம். இது சரியல்ல. சர்க்கரை சேர்க்காமல் அப்படியே தான் கொடுக்க வேண்டும்.

பளபள பற்கள்...



சுக்கு - 50 கிராம், கருவேலம் பட்டை - 25 கிராம், கடுக்காய் தோல் - 25 கிராம், களிப் பாக்கு - 25 கிராம், டேபிள் சால்ட் - 25 எடுத்துக் கொள்ளுங்கள். சுக்கைத் தோல் நீக்கிக் கொள்ளுங்கள். பாக்கை இடித்து, வறுத்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் மிக்ஸியில் போட்டுச் சன்னமாகப் பொடி செய்து கொள்ளுங்கள். அதில் டேபிள் சால்ட்டையும் போட்டுக் கலந்து, ஒரு மண்சட்டியில் போட்டு, துணியால் வேடுகட்டி, (ஒரு மெல்லிய சுத்தமான துணியால் மூடி) 2 மணி நேரம் வெயிலில் வைத்து, பின் ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகிக்கலாம். இத்துடன் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், கிராம்பு சேர்த்து சாப்பிட்டால், வாயில் உள்ள துர்நாற்றம் போய்... வாய் மணக்கும்!

Sunday, October 20, 2013

பற்கள்: இறுதிவரை உறுதி பெற…


- வைட்டமின் `சி’ சத்து குறைபாடு!
- மது அதிகமாக அருந்துதல்!
- சத்துள்ள உணவுகளை சாப்பிடாமல் இருத்தல்… போன்றவைகளால் பல் ஈறு நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
சிகரெட், `பான்’, புகையிலை, பல்குச்சி உபயோகம் இவைகளும் ஈறு நோயை உண்டுபண்ணும். சொத்தைப் பல், பல்லில் பெரிய ஓட்டை, செயற்கைப் பல் செட் சரியாக பொருந்தாமை, பற்கள் வரிசையாக சீராக இல்லாமை, இவைகளும் ஈறு நோயை உண்டு பண்ணும். சர்க்கரை வியாதி, கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிடுதல் இவைகளும் ஈறுநோயை உருவாக்கும்.