Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Thursday, November 21, 2013

‘ஏவுதளம்’ இங்கே வந்திட ஏன் வீண் தயக்கம்?



மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியைச் சேர்ந்த திரவ எரிவாயு மையத்தில்
பணிபுரிவோர் அனுப்பிய வேண்டு கோளினை பரிந்துரை செய்து நான் கடந்த 19-8-2013 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம்
அனுப்பியிருந்தேன். கனிமொழி என்னிடம் வேண்டுகோள் கடிதத்தைக் கொடுத்ததோடு, மாநிலங்கள் அவையிலும் அதைப்பற்றி எழுப்பிய கேள்விக்கு,
அளிக்கப்பட்ட பதிலில், ""“ISRO has two operational launching pads located at Satish Dhawan Space Centre, Sriharikota - the First Launch Pad and the Second Launch Pad, with necessary infra structure to support eight launches per year. The launching infra structure at Sriharikota will be strengthened with the addition of Second Vehicle Assembly Building at SLP, which will enhance the launch frequency to twelve launches per yearby 2017”" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Sunday, October 27, 2013

என்றுதான் விடியுமோ விவசாயிகளின் வாழ்வு?


கலைஞர் பதில்கள்
கேள்வி :- போலீஸ் பக்ருதீன் கைது விவகாரம் பெரிதாகிக்கொண்டு போகிறதே?
கலைஞர் :- அதைப்பற்றி நான் முன்பே விரிவாக எழுதியிருக்கிறேன். கொலைக் குற்றவாளிகள் போலீஸ் பக்ருதீன் குழுவினரா? அல்லது ஏற்கனவே டி.ஜி.பி. அறிக்கையில் தெரிவித்திருந்த நபர்களா? பக்ருதீன் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார்? கைது செய்த போலீஸ் அதிகாரி யார்? என்பதற்கான விளக்கங்களையெல்லாம் அரசு தெளிவு படுத்த வேண்டு மென்று எழுதியிருந்தேன். ஆனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களைப்போக்கிடும் வகையில் அரசு அதைப்பற்றி விளக்கமளிக்க வில்லை. இதற்கிடையே வேலூரில் செய்தியாளர்களிடம் போலீஸ் பக்ருதீன் தான் கொலையாளி அல்ல என்றும், அவ்வாறு சொல்லக் காவல் துறையினர் வலியுறுத்துவ தாகவும் தெரிவித்தார்.

Friday, October 25, 2013

அரசு திட்டங்களில் இரட்டை சிலை சின்னம்:


அரசு திட்டங்களில் இரட்டை சிலை சின்னம்: மக்கள் நிதியா? அ.தி.மு.க. நிறைவேற்றியதா?: கலைஞர்
 சென்னை: அரசு பேருந்துகளில் இரட்டை இலை சின்னம் போடப்பட்டுள்ளது. குடிநீர் பாட்டிலிலும் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மக்கள் நிதியிலிருந்து செய்யப்பட்டதா? அல்லது அ.தி.மு.க. நிறைவேற்றியதா? என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Thursday, September 12, 2013

அண்ணாவின் இறுதி நாட்கள்


அண்ணாவின் இறுதி நாட்கள் பற்றி கருணாநிதி உருக்கம்


ழைகளை கரையேற்றிடப் புறப்பட்ட கருணைக் கப்பல் கவிழ்ந்துவிட்டது என்று அண்ணாவின் இறுதி நாட்கள் பற்றி கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என் நினைவு 1969-ம் ஆண்டு பிப்ரவரி திங்களுக்குச் செல்கிறது. அதற்கு முன்பே 1968-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் தொடக்கத்திலேயே அண்ணாவுக்கு அடிக்கடி வயிற்று வலி.