நாட்டு கோழி - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 1/4 கிலோ சீரகம் - 2 ஸ்பூன் மல்லி - 4 ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் வர மிளகாய் - 4 பூண்டு - 2 பல்லு தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
காயல்பட்டிணத்தில் கல்யாண வீட்டில் நடக்கும் விருந்து சாப்பாடான களறி கறி சாப்பாடு மிகவும் ஃபேமஸ்! களறி எனபது கூட்டமாகச் சேர்ந்து உண்பதற்கு சொல்லப்படும் பெயர். இதனை பெரிய தாம்பளத்தில் (இதனை தாளம் என்று எங்க ஊரில் சொல்லுவோம்) வைத்து அதில் சாதம் 2 சின்ன கிண்ணத்தில் இந்த கறியும், ஒரு கிண்ணத்தில் கத்திரிக்காய் மாங்காயும் வைப்பாங்க. இது மிகவும் சுவையாக இருக்கும்.ஒரு தாளத்தில் பெண்கள் என்றால் 3 பேரும், ஆண்கள் என்றால் 2 பேரும் வட்டமாக கீழே உட்காந்து சாப்பிடுவாங்க.அந்த தாளத்தில் இருக்கும் சாப்பாடை சமமாக பிரித்து சாப்பிடுவாங்க.
சமையல் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது ஒரு கலை.
ஆனால், இந்தக் காலத்தில் பெண்கள், ஆண்களுக்கு இணையாக, ஏன், அவர்களுக்கும்
மேலாக அலுவலகங்களில் சென்று பணியாற்றுகின்றனர். இதனால், அவர்களுக்கும்
விதம் விதமான உணவினைத் தயாரிப்பது குறித்துக் கற்றுக் கொள்ள நேரம்
இருப்பதில்லை. தங்கள் மகள்களுக்குக் கற்றுக் கொடுக்கவும்,
பழக்கப்படுத்தவும் முன் வருவதில்லை.
30 வகை எண்ணெய் இல்லாத சமையல்
”எதுக்குத்தான் இப்படி எண்ணெயைக் கொட்டி கத்திரிக்காயைச் சமைப்பியோ..?!”
என்று தெறித்து ஓடும் அளவுக்கு பலரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது,
உணவில் மிதமிஞ்சி பயன்படுத்தப்படும் எண்ணெய்!
கோடை காலத்திற்கேற்ற மிகவும் எளிமையான ஜில்லென்ற பான்ம சம்பங்கூழ்தான். அதை வருமானத்தில் கீழ்த்தட்டு மக்களின் பானம் என்ற அனைவரம் ஒதுக்கி விடுகிறோம். ஆனால் வெயிலில் அனைத்துத் தரப்பினரும் தினமும் அருந்தி குளிர்ச்சி பெறலாம். இதைத் தவிர அவரவர் வசதிக்கேற்ப வேறு சில பானங்களும் அருந்தலாம். சிலர் ஃபிரிட்ஜ் இருந்தால்தான் ஜூஸ் குடிக்க முடியும் என்று எண்ணலாம். அது தவறு. இளநிரை வாங்கியவுடன் குளிர்ந்த நீரில் போட்டுவிடுங்கள். வெளியில் வேளையில் இளநீரில் ஒரு ஸ்பூன் குளுக்கோஸ் கலந்து நுங்கு தோலுரித்து சிறு துண்டுகளாக்கி அதில் போட்டுக் கலந்து குடித்துப் பாருங்கள். உடலே குளிர்ந்துவிடும்.
என்னென்ன தேவை? சர்க்கரை பாகு, - அரை கப், எலுமிச்சைச்சாறு - கால் கப், புதினா சாறு - கால் கப், உப்பு ஒரு சிட்டிகை, சோடா - ஒரு பாட்டில், அலங்கரிக்க உப்புத்தூள் சிறிது.
எப்படிச் செய்வது?
ஒரு கிளாஸ் டம்ளரை கவிழ்த்து கெட்டியான எலுமிச்சைப் பழச் சாற்றில் தோய்த்து உடனே உப்புத் தூளில் மீண்டும் தோய்த்தால் அது டம்ளரில் ஒட்டிக் கொள்ளும். அந்த டம்ளரை திக்ஷீமீமீக்ஷ்மீ செய்யவும். அரைமணி நேரம் கழித்து பின் எடுத்து வைத்துக் கொண்டு முதலில் எலுமிச்சைச் சாறு, பின் புதினா சாறு தலா 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து பரிமாறும் போது சோடாவை சேர்த்து பரிமாறவும். ஐஸ் கட்டிகள் சேர்த்தும் பரிமாறலாம்.
விதை நீக்கிய பலாச்சுளை - 5, பால் - 2 கப், சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது? பலாச்சுளையை சின்னத் துண்டுகளாக நறுக்கி, பால், சர்க்கரை சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அதைக் குளிர வைத்து, மேலே தேன் சேர்த்துப் பரிமாறவும்.