மேட்டூர் அணை சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில், மேட்டூரில் அணை கட்டுவதற்கு பிரிட்டீஷ் அரசு முயன்றது. ஆனால், அதற்கு அப்போதைய மைசூர் சமஸ்தானம் ஆட்சேபனை தெரிவித்ததால், பிரிட்டீஷ் அரசாங்கம் தனது முயற்சியை கைவிட்டது.