வெளியூரில் உள்ள மனையின் பாதுகாப்பும் பராமரிப்பும்...
நம் வசதிக்கு ஏற்ப, வாய்ப்பிருக்கும் ஓர் ஊரில் மனை வாங்கிப்போடுவதில் தப்பில்லை. ரியல் எஸ்டேட் துறை எந்த அளவுக்கு கவர்ச்சிகரமாக இருக்கிறதோ அதே அளவுக்கு மோசடிகளும் நிரம்பி இருக்கிறது. நமக்கு சம்பந்தமே இல்லாத வெளியூரில் வாங்கும் சொத்துக்களைப் பராமரிக்க ஆளில்லாமல் மோசடிக்காரர்கள் கையில் மாட்டிக்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அந்த இடத்தைப் பார்க்கச் சென்றபோது, அந்த இடத்தை ஆக்கிரமித்து குடிசை போட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு, அடாவடி அதிகரித்துவிட்ட நிலையில் வெளியூரில் இடம் வாங்கிப் போட்டுள்ளவர்கள் கவனிப்பை அதிகப்படுத்திக்கொள்ளாமல் இருந்தால் இதுபோன்ற பாதிப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.