கேரளாவில் மேற்குதொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு மாவட்டம் பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான நெல் வயல்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. கேரளாவின் அரிசி உற்பத்தியில் மிகப்பெரிய பங்காற்றி வரும் பாலக்காடு மாவட்டம் ‘கேரளாவின் நெற்களஞ்சியம்’ மற்றும் ‘தானியக் களஞ்சியம்’ என்ற சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படுகிறது.