Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, October 19, 2013

சிந்திக்க!!..


தகவல்களை கொட்டித்தரப்போகுது நவீன நிழற்குடைகள்


சென்னையில் நிழற்குடை உள்ள பஸ் நிறுத்தங்கள் ரொம்பவே குறைவு. எங்கு அதிகமான பயணிகள் வருகிறார்களோ அங்கு நிழற்குடை இருக்காது. ஆளே இல்லாத நிறுத்தங்களில் அல்லது பஸ்சே நிற்காத நிறுத்தங்களில் பளபளவென நிழற்குடை அமைத்திருப்பார்கள். இதற்கு காரணம் வியாபார நோக்கத்துக்காக மட்டுமே நிழற்குடைகள் அமைக்கப்படுவதுதான்.

இந்தியாவில் பசுமை புரட்சி ஆரம்பம்.!!

புதிய 100 புதிய 100 டாலர் நோட்டு


அதிநவீன சிறப்பம்சங்களுடன்... அமெரிக்காவில் புதிய 100 டாலர் நோட்டு வெளியீடு.!!
****************************************************
இந்த புதிய 100 டாலர் நோட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு புழக்கத்திற்கு வெளியிடப்படுவதாக முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆனால், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தாமதமாக நேற்று வெளியிடப்பட்டது.

சூரிய மின்சாரம் தயாரிக்கும் ஹெட்போன்கள்


செல்பேசிகள் மற்றும் எம்பி3 பிளேயர்களிலிருந்து ஒலிகேட்க பயன்படும் ஹெட்போனை பயன்படுத்தி சூரிய எரிசக்தியிலிருந்து மின்சாரம் தயாரித்து, அதைக்கொண்டு செல்பேசிகள் உள்ளிட்ட சிறு மின்னணு உபகரணங்களின் மின்சாரத் தேவையை நிறைவு செய்யமுடியும் என்று கிளாஸ்கோவில் இருக்கும் வடிவமைப்பாளர் ஆண்ட்ரூ ஆண்டர்சன் தெரிவித்திருக்கிறார்.

”வாங்க... இயற்கைக்குத் திரும்புவோம்!”


'சென்னை தியாகராய நகர் வடக்கு போக் சாலையில் உள்ள 'தானியம் - ஆர்கானிக் ஸ்டோர்’ பற்றி உங்களுக்குத் தெரியுமா? தேன், தினை மாவு, வரகு, சாமை, கோதுமைப் புல், கைக்குத்தல் அரிசி, சிவப்பு அரிசி, நாவல் மரத் தேன், சுக்குக் கருப்பட்டி என இங்கு கிடைக்கும் அனைத்தும் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்டவை. இந்தக் கடையைப் பற்றி என் விகடனில் எழுதலாமே?’ - இது விகடன் வாசகர் ரமேஷ்பாபு நம்முடைய வாய்ஸ் ஸ்நாப்பில் தந்த தகவல்.

வேலையில் ஜெயிக்க வெற்றிச் சூத்திரங்கள்!

வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் சிறப்பானவராகத் திகழவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல்தானே தவிக்கிறோம்; தெரிந்தால் ஜமாய்த்துவிடுவோமே என்றுதானே நினைக்கிறீர்கள்! கேரியர் வார்ஃபேர் என்கிற இந்தப் புத்தகத்தைப் படித்தால், உங்கள் பாஸை உங்களை நோக்கி நிச்சயம் திரும்பிப்பார்க்க வைப்பீர்கள்.

Friday, October 18, 2013

சிறந்த சித்தமருத்துவக் குறிப்புகள்

உடல்வலி குணமாக : வில்வ இலைச் சாறு, அருகம்புல் சாறு கலந்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர, குணம் பெறலாம்.

ஞாபக சக்தி பெருக : வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து உண்ணலாம்.

வைட்டமின் ‘D’ ஏற்படும் நோய்கள்

 
993757_573098576045795_404112258_n.jpg
உயிர்சத்து வைட்டமின் ‘D’ ஏற்படும் நோய்கள் மற்றும் பயன்கள்

உடல், மன ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது உயிர்சத்துக்கள்தான். இவை நமது உடலில் பிற சத்துக்களுடன் சரி விகிதத்தில் சேர்வதனாலேயே நமக்கு முழுமையான ஆரோக்கியம் கிடைக்கிறது. உடலுக்கு உயிர்சத்துக்களை நீண்டகாலம் தேக்கி வைக்கும் தன்மை கிடையாது.

சித்த மருத்துவம் --- இய‌ற்கை வைத்தியம்:-



வேப்பமர பிசினை தூளாக்கி பசும்பாலில் உட்கொள்ள கரப்பான் மற்றும் சரும நோய்கள் குணமாகும்.

பச்சை மஞ்சள் கிழங்கை அரைத்து கோலி குண்டு அளவு காலை - மாலை உட்கொள்ள குடல் பிணிகள் அகலும்.

மூலிகை குடிநீர்

ஆவாரம்பூ குடிநீர்:-

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள்


:
-

மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை.

குடலைக் காக்கும் சித்த மருத்துவம்


           பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஜீரண மண்டலக் கோளாறுகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், பரபரப்பு காரணமாக செரிமான நோய்கள் அதிகரித்து வருகின்றன. செரிமான நோய்களுக்குச் சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. செரிமானக் கோளாறுகளுக்குச் சித்த மருத்துவத்தில் உள்ள சிகிச்சை குறித்து விரிவான தகவல்கள்.

எளிய வீட்டு வைத்தியம்


கீழாநெல்லி இலையுடன் கரிசாலை இலையை சேர்த்து பாலில் கலந்து கொடுத்து வந்தால் இரண்டு மூன்று நாட்களிலேயே காமாலை நோய் நீங்கும்.

கற்றாழைச்சாற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தேய்த்துவந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

நபி மருத்துவம் – ஜவ்வரிசி


இஸ்லாம் தோன்றிய காலத்தில், அரபு நாட்டில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நோய்களால் பலர் பலவீனமடைந்திருந்தார்கள். அவர்களுக்கு நிவாரணியாக “ஜவ்” என்னும் பார்லி அரிசி அமைந்தது. இதை ஜவ்வரிசி என்று அழைப்பார்கள்.
பார்லி ரொட்டியுடன் சுரைக்காய், இறைச்சிக் குழம்பு சேர்த்து சாப்பிடுவது என்றால் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று புகாரி, முஸ்லிம் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது. பார்லி ரொட்டிக்கு குழம்பாக பேரீச்சம் பழத்தைச் சேர்த்து பெருமானார் அவர்கள் சாப்பிட்டதாக அபூதாவூத் ஹதீஸ் கூறுகிறது. பார்லி அரிசியை இடித்து அதைப் பாலில் கொதிக்க வைத்து, சுவைக்காக தேன் கலந்த ஒருவிதமான கஞ்சியை பெருமானார் வீட்டில் சமைப்பார்கள்

சர்வ சத்துள்ள கொய்யா பழம்…


பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில்
வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும்,
தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

Sunday, October 13, 2013

இளநீர் மருத்துவகுணம்

ளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink). இது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

ஒரு வரி மருத்துவம்

ரோஜா அர்த்தர் : முக வசீகரம் கூடும்.

பாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்

கதர் சன சூரணம் : காய்ச்சல் நிற்கும்

ஆத்திப்பழம் : அம்மை குணமாகும்

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி

புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும்
கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள்,
அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா
என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பூவின் மருத்துவ குணம்


முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.
முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.
முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.

இளமை காக்கும் உணவு முறைகள்!

இளமை காக்கும் உணவு முறைகள்! உடல் நலக் குறிப்புகள்!! இளமை காக்கும் உணவு முறைகள்! உடல் நலக் குறிப்புகள்!! பிளட் பிரஷ்ஷர் உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். எனவே, காரணம் இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி தலைவலி வந்தால் உடனே டாக்டரிடம் உங்கள் பிரஷ்ஷரைப் பார்க்கும்படி சொல்ல வேண்டும். இந்தக் காலத்தில் சிலர் தங்களுக்கு பிளட் பிரஷ்ஷர் இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

உடலுக்கு வலிமை தரும் சுவைமிகுந்த கிஸ்மிஸ் பழம்

உடலுக்கு வலிமை தரும் சுவைமிகுந்த கிஸ்மிஸ் பழம் செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?



40 முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது.
இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும்.
அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை
ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால்
நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.

என்னென்ன நோய்கள் வரும்?

குழந்தைகள் பாதுகாப்பு – சில டிப்ஸ்


• உறவுகளில் திருமணம் செய்து கொள்வது பிறக்கும் குழந்தைகள் குறையுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.

• கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.

• சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.

விடையில்லா வினாக்கள்



அண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக்குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கிவிட்டனர். அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தனர்.
SETC bus
நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒரு மோட்டலில் (சாலை வழி உணவகம்) பஸ் நின்றது. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் பலத்த சத்தத்தில் ஒரு டப்பாங்குத்து பாட்டு கத்தியது.

அரஃபா நோன்பு


அரஃபா நோன்பு

 
ரமலான் மாதக் கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான நோன்பு அரஃபாதின நோன்பாகும். ரமலானைத் தொடர்ந்து வரும் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரஃபா தினமாகும்.
அதாவது ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கியக் கடமைச் செயற்பாடுகளுள் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும்.