Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

Thursday, July 23, 2015

இயற்கை எழில் குறையாத மாஞ்சோலை


திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை.

Sunday, November 16, 2014

தலையணை – அறியப்படாத சுற்றுலாப் பகுதி!


தலையணை பகுதி அமைந்துள்ள களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையின் எழில்மிகு தோற்றம்
தலையணை – நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மனதை மயக்கும் அமைதியான சூழல் கொண்ட பகுதி.

Friday, September 26, 2014

மூணாறு


சுற்றுள்ள தளம் மூனார் பற்றிய தகவல் !!!



இப்ப நம்ம தமிழ் நாட்டில் ரெம்ப சூடு அதிகமாகிவிட்டது .அதனால் மக்கள் அனைவரும் விடுமுறையே கழிக்க மலை பகுதியே நோக்கி செல்கிறார் .அப்படி போகும் இடங்களில் மூனார் முக்கிய இடத்தை பிடிக்கும் .அதை பற்றிய சில தகவல்கள் . இன்னும் உங்களுக்கு எதாவது மூனாரை பற்றிய தகவல்கள் இருந்தால் கம்மேன்ட்டில் பதிவு செய்யவும் . 

இந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். . நல்ல இயற்க்கை சூழ்ந்த மழை வாசஸ்தம். தேயிலை எஸ்டேட் நிறைந்த இடம். மூன்று ஆறுகள் சந்திக்கும் இடம் அதனால் மூனார் என்று அழைக்கப்படுகிறது. முத்திரப்புழா, சண்டுவரை மற்றும் குண்டலா என்ற மூன்று ஆறுகள் தான் அவை. கண்கவர்மேகங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. தமிழ்நாட்டிலிரிருந்து போடிநாயக்கனூர் வழியாக செல்ல வேண்டும். இந்த நகரை அடையும் முன்னர் போடி மெட்டு என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரம்.

Tuesday, April 8, 2014

இயற்கை எழில் கொஞ்சும் கோவளம்

இயற்கை எழில் கொஞ்சும் கோவளம் ( கேரளா ) – கன்னியா குமரியிலிருந்து மிக அருகில்

கோவளம் மூன்று அடுத்தடுத்த வளைவான கடற்கரையைக் கொண்ட ஒரு உலகப் புகழ்பெற்ற இடமாகும். இது சுற்றுலாப்பயணிகளின் விருப்பமான அழகிய இடம். குறிப்பாக ஐரோப்பியர்கள் 1930லிருந்து வந்து குவியும் இடமாகவும் உள்ளது. கடற்கரையில் குவிந்து கிடக்கும் பெரிய பாறைகள் அங்கேயே கடல் நீரைத் தடுத்து, ஒரு அழகிய வளைகுடாப் பகுதியை ஏற்படுத்தியுள்ளதால், இந்த அமைதியான நீர் குளிப்பதற்கு ஏற்றதாக உள்ளது.

Thursday, February 6, 2014

பாலக்காடு கோட்டை (திப்புவின் கோட்டை)

பாலக்காடு கோட்டை (திப்புவின் கோட்டை)  பாலக்காடு –  ஓர் உல்லாச சுற்றுலா

கேரளாவில் மேற்குதொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு மாவட்டம் பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான நெல் வயல்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. கேரளாவின் அரிசி உற்பத்தியில் மிகப்பெரிய பங்காற்றி வரும் பாலக்காடு மாவட்டம் ‘கேரளாவின் நெற்களஞ்சியம்’ மற்றும் ‘தானியக் களஞ்சியம்’ என்ற சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படுகிறது.

Tuesday, February 4, 2014

ஜாலி சுற்றுலா! – தென்மலை

இந்த வாரம்  ஜாலி சுற்றுலா! – தென்மலை

ஒரு நாள் முழுக்க இயற்கையை நேசிக்க கற்றுத்தரும் சுற்றுலாத் தலம் தான் தென்மலை. கூடவே பயணத்தின் இறுதியில் ரிலாக்ஸாக இசைப்பாடலுக்கு தகுந்தபடி நடனமாடும் நீருற்றையும் கண்டு ரசிக்க தென்மலையை விட்டால் வேறு இடம் கிடைக்காது.

Monday, December 30, 2013

வசீகரிக்கும் வால்பாறை

வால்பாறையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மேடு பள்ளங்களாக அந்த மலைப்பகுதியில் எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று கம்பளி போர்த்தப்பட்டது போல தேயிலைத் தோட்டங்கள்.

அழகிய இந்திய மலைப்பாதை ரயில்கள்!


இந்தியாவில் மலை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதில் மிகப்பெரிய அரசியல் பின்னணி உள்ளது. அதாவது இந்தியாவின் மலைப்பகுதிகளில் தங்களின் காலனியாதிக்கத்தை நிறுவுவதற்காகவும், அதன் மூலம் அவ்விடங்களில் இராணுவ தளத்தை அமைக்கவும் திட்டமிட்ட ஆங்கிலேயர்கள் மலைப்பாதைகள் அமைக்க முடிவெடுத்தார்கள்.

குற்றாலத்திலே குளிச்சது போல இருக்குதா...

இயற்கை எழில் கொஞ்சும் குற்றாலம்…!

தமிழ்நாட்டில் பார்த்திராத பல இடங்கள் பல இருக்கின்றன. திரும்ப திரும்ப சென்ற இடங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், ஆண்டு தோறும் போய்வரும் ஒரு இடம் குற்றாலம்.
எப்பொழுது சீசன் களை கட்டுகிறதோ அப்பொழுது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பஸ் ஏறிவிடுவதுண்டு!

Thursday, November 14, 2013

அமைதியான நதி‌யினிலே...


ஆடி முடிந்தது. ஆவணி பிறந்தது. மனம் சிறகடிக்க திருமணம் முடிந்தது. அடுத்தது என்ன? தேன்நிலவு தான். எங்கே போவது? அருகிலேயே கடவுளின் தேசம் இருக்க குழப்பம் ஏன்? குமரகம். இங்கு குதூகலத்திற்கு அளவே இல்லை. இயற்கை அன்னை தன் செல்வங்களை எல்லாம் வாரி, வாரி இந்த குமரகத்திற்கு தானமாக கொடுத்து விட்டாளோ! என்ற எண்ணம் அங்கு சென்றதும் நிச்சயம் ஏற்படும். திரும்பிய இடமெல்லாம், நிலமங்கை பசுமை போர்வை போர்த்தி இருக்கிறாள். ஒரு புறம் செழித்து வளர்ந்த நெற்கதிர்களுடன் காணப்படும் வயல்கள்...

Friday, June 15, 2012

மனிதன் காலடித்தடம் பதிக்காக 10 இடங்கள்



மனிதன் காலடித்தடம் பதிக்காக 10 இடங்கள்!! – புகைப்படங்கள்

மனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் இருக்கிறது! – (The Unexplored Area)
அதில் முக்கிய பத்து (10) இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
1. Northwest Siberia – வடமேற்கு சைபீரியா

2. Caves – குகைகள்
இன்றும் பல குகைகள் உலகில் கண்டறியப்படவில்லை, இதன் காரணம் அதில நிறைந்த பல மர்மங்கள், பல அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்பதால் மனிதன் இன்னும் தயங்குகிறான்.

3. Amazon Rain-forest – அமேசான் மழைக்காடுகள்!

4. Antarctica – அண்டார்டிகா

5. Mariana Trench & Deep Sea Ocean – மரியானா அகழி & ஆழ்கடல்கள்!

6. Deserts – பாலைவனங்கள்!

7. Gangkhar Puensum, Bhutan – கங்க்கார் பியுன்சும் – புட்டான்

8.Icecap; Greenland – உறைபனிக்கட்டி, கிரீன்லாந்து

9. Mountains of Northern Columbia – வட கொலம்பியாவின் மலைகள்

10. Central Range, New Guinea – புது குனியா மலைத்தொடர்கள்
Engr.Sulthan

Monday, May 21, 2012

தனுஷ்கோடி நினைவலைகள்!!

தனுஷ்கோடி நினைவலைகள்!!

1964ம் வருடம், டிசம்பர் திங்கள் 23ம் நாள் நெல்லையிலிருந்து சென்னை செல்லும் இரயிலில் (மாணவப் பருவம்) சென்னையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன். இரவு 9 மணி மதுரையை வந்தடைந்தது இரயில். அனைவரும் தூங்க ஆரம்பித்து விட்டனர், இன்னும் கொஞ்ச நேரத்தில் நிகழப் போகும் பேரழிவைப் பற்றி எதும் அறியாமல். நானுந்தான். நடுநிசி மதுரையை விட்டு கிளம்பிய ரயில் திரும்ப மதுரைக்கே திருப்பப்பட்டது. என்னவென்று விசாரித்தால் புயல் மழையால் அந்த வழி தடத்தில் போக முடியவில்லையென்றும், மானா மதுரை வழியாக செல்லும் எனக் கூறினார்கள். காலைப் பொழுது இரயில் போய்க் கொண்டிருக்கிறது. வழியெங்கும் புயலின் உக்கிரத் தாண்டவத்தின் அழிவுகளை பார்க்க முடிந்தது. எங்கும் மழை வெள்ளம். ரயில் மெதுவாக ஊர்ந்து செல்கிறது. அப்போது கூட தெரியாது அருகிலிருக்கும் தனுஷ்கோடி என்ற ஊர் முற்றிலும் அழிந்து விட்டது என்று. பிறகு தான் தெரிந்தது. புயலின் கோரப் பசிக்கு அதன் வாயின் அருகிலே சென்று மீண்டவர்கள் நாங்கள் என்று.. போட் மெயில் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டது. மறு நாள் காலை தான் சென்னை வந்தடைந்தோம்.
தனுஷ்கோடி என்ற ஊர் இலங்கை மேற்கு தலைமன்னாருக்கு 18 கிலோ மீட்டர் தொலைவு தானாம் ! ஏறக்குறைய 45 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ்கோடிக்கும் எழும்பூருக்கும் இரயில் போக்குவரத்து இருந்திருக்கிறது. அதற்கு போட் மெயில் என்று பெயராம். தனுஷ்கோடியில் இறங்கி நீராவிப் படகு மூலம் இலங்கைக்குப் பயணம் செய்துள்ளனர்.danoshkodi church1
23-12-1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலில் எழுந்த பெரும் கடல் அலைகளால் தனுஷ்கோடி நகரம் முற்றிலும் கழுவி விடப்பட்டது போல் காணாமல் போனது. அப்போது தொடர்வண்டியில் பயணம் செய்த 128 பேர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு தொடர்வண்டிப் போக்குவரத்து இராமேஸ்வரத்தோடு நின்றுவிட்டது. தனுஷ்கோடி மீண்டும் புத்துயிர் பெறவில்லை. நிகழ்வு நடந்த 45 ஆண்டுகளுக்குப் பிறகும் அழிவின் சாட்சியாய் வெள்ளையர் காலத்து மாதா கோயில் உள்ளிட்ட சில இடிந்த கட்டடங்கள் நம்மை அன்றைய சூழலுக்கு அழைத்துச் செல்கின்றன.
danoshkodi 1இப்போது அங்கே நிலையாக யாரும் வாழவில்லை. ஒரு பெட்டிக்கடை உள்ளது. கடை நடத்தும் அவரும் இரவு தங்குவது இல்லையாம். தொழில் நிமித்தமாக மீனவர்கள் நடமாடுகின்றனர். அமாவாசை என்றால் கொஞ்சம் பேர் வருவார்களாம். ஓரிரு படப்பிடிப்புகள் இங்கே நடைபெற்றதாகச் சொன்னார்கள்.
தனுஷ்கோடியை பற்றி இன்றும் நினைவில் வரும் போது, அழிந்து போன அந்த ஊர் தந்த வெறுமை, அதன் காற்றில் மாண்டு போனவர்களின் ஓலங்களை கேட்பது போல் உணர்கிறேன்.
நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் என்பவரின் தனுஷ்கோடி பற்றிய கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.--Engr.sulthan

தனுஷ்கோடி


அழிந்து சிதலமாகி நிற்கும் தனுஷ்கோடியின் கரையில் நின்று கொண்டிருந்தேன். கடல் அடங்கியிருந்தது. மாலை நேரம். வெளிறிய நீல வானம். மேற்கில் ஒளிரும் சூரியன். மிதமான காற்று. கடல் கொண்டது போக எஞ்சிய இடிபாடுகள் கண்ணில் விழுகின்றன. ஒரு நாய் அலையின் முன்பாக ஒடியாடிக் கொண்டிருக்கிறது.


கடலின் அருகாமை நம் சுபாவத்தையே மாற்றிவிடுகிறது. பலநேரங்கள் பேச்சற்று அதை பார்த்து கொண்டேயிருக்கிறோம்.கடலை எப்படி உள்வாங்கி கொள்வது. கண்களால் கடலை ஒரு போதும் அறிய முடியாது.அலைகள் அல்ல கடலின் வசீகரம். அலைகள் கடலின் துள்ளாட்டம். சிறகசைப்பு அவ்வளவே. கடலைப் புரிந்து கொள்வது எளிதில்லை. அது ஒரு நிலைகொள்ளாமை.தவிப்பு. காற்றில் பறக்கும் பட்டம் போல சதா மாறிக்கொண்டிருக்கும் பேரியக்கம்.



கடலும் கரையும் கொண்டிருக்கும் உறவு விசித்திரமானது. ஒன்றையொன்று நெருங்குவதும் பிரிவதுமான முடிவற்ற தவிப்பு.கண்ணால் பார்க்கும் போது கடல் உப்பரிப்பதில்லை.



கடல் நம் மனதில் நிரம்புவதற்கு அதன் ஊடாகவே வாழ வேண்டும். கடலோடு பேசவும் கடலை நேசிக்கவும் தெரியாதவனை கடல் தன்னுள் அனுமதிப்பதில்லை என்று ஒரு மாலுமியின் குறிப்பு ஒன்றில் படித்திருக்கிறேன்.

நடந்து வந்த மணல்வெளியின் அடியில் தனுஷ்கோடி புதைந்துகிடக்கிறது. பாதி கடலுக்குள்ளும் இருக்க கூடும். வாழ்வதற்கு தகுதியற்ற இடம் என்று அரசு தனுஷ்கோடியை கைவிட்டுவிட்டது. ஆனால் இந்த இடிபாடுகளுக்கு இடையில் பாசிமாலைகள், குளிர்பானங்கள் விற்கும் கடைகளும் குடும்பங்கள் வசிக்கிறார்கள். இரண்டு ஆசிரியர்கள் உள்ள பள்ளி ஒன்று கூட இங்குள்ள மீனவ சிறுவர்களுக்காக நடக்கிறது. வாழ்ந்தாலும் செத்தாலும் தனுஷ்கோடியை விட்டு போவதில்லை என்று பிடிப்பு கொண்ட பல குடும்பங்கள் இன்னமும் அங்கு இருக்கின்றன. அதில் ஒருவரிடம் பேட்டரியில் இயங்கும் தொலைக்காட்சி பெட்டி கூடயிருக்கிறது.


ஆனால் அழிவு அதன் வலிய கரத்தால் நகரத்தை இன்னமும் தன் பிடிக்குள் தான் வைத்திருக்கிறது. நீண்ட மண்பாதையின் வெறுமையும் அரித்து போன தண்டவளாங்களும் அதை நினைவு கொள்ள செய்கின்றன.

என்றோ ஒடி மறைந்து போன ரயிலின் ஒசை இருளுக்குள் புதைந்திருக்கிறது. கடற்பறவைகள் மணலில் எதையோ தேடியலைகின்றன. சுற்றுலா வந்த சிறுமி ஒருத்தி மண்மேடுகளை தன் கால்களால் எத்தி சிப்பிகளை தேடிக் கொண்டிருக்கிறாள். கண்ணாடி அணிந்த வயதான பெண்மணி கடலின் முன்னே நின்றபடியே தன்னை புகைப்படம் எடுத்து தர சொல்லிக் கொண்டிருந்தாள். கடலின் முன்னே இவள் யார்? புகைப்படத்தில் உள்ள கடல் அலையடிப்பதில்லை தானே. மீனவர்களின் குலசாமியான கூனிமாரியம்மன் கோவில் ஒன்று தனுஷ்கோடியிலிருக்கிறது. அதன் சொல்லுக்கு கடல் அடங்கி போகும் என்பது மீனவ நம்பிக்கை.


மண்ணுக்குள் புதையுண்ட எலும்புகள் இன்றும் விழித்து கொண்டுதானிருக்கின்றன. அது எவரெவர் வழியாகவே தன் நினைவுகளை மீள்உரு கொள்ள செய்தபடியே இருக்கின்றன. தனுஷ்கோடி ஒரு அழிவின் மணல் புத்தகம். அதன் உள்ளே முடிவில்லாத கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. மணலை வாசிக்க தெரிந்த மனிதன் அதை புரிந்து கொள்ள கூடும்.


அழிந்து போன இடங்களை பார்த்தவுடன் ஏன் மனது வருத்தம் கொண்டுவிடுகிறது.. அழிந்த நகரங்கள் பலவற்றை பார்த்திருக்கிறேன்.அதற்குள் சென்றவுடன் உடல் பதற்றம் கொள்ள துவங்கிவிடுகிறது. மனது விழித்து கொள்கிறது. ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைக்க. யாரோ உற்று பார்க்கிறார்கள் என்பது போன்ற பிரமை உருவாகிறது. நெருக்கமான எதையோ இழந்துவிட்ட துயர் மனதில் வலிக்க துவங்குகிறது.
danoshkodi
பள்ளி நாட்களில் இருந்து இன்று வரை பலமுறை தனுஷ்கோடிக்கு சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அது தனித்த அனுபவமாகவே இருக்கிறது. பத்து வருசங்களுக்கு முன்பு ஒரு புதுவருசப்பிறப்பின் இரவில் விடியும் வரை தனுஷ்கோடியில் இருந்தேன். கடலுக்கும், இருளில் புதைந்த மனிதர்களுக்கும் வாழ்த்து சொல்லி பிறந்தது அந்த புதுவருசம். பின்னரவில் தனுஷ்கோடி கொள்ளும் அழகு ஒப்பற்றது. அது மணப்பெண்ணின் வசீகரம் போன்றது.அந்த புது வருச கொண்டாட்டம் அற்புதமானது.


இன்று தனுஷ்கோடி அடங்கியே இருந்தது. பார்த்துக் கொண்டிருந்தபோதே மாலை வடிந்து இருள் துவங்கியிருந்தது. கடலுக்குள் வீழ்ந்திருந்தது சூரியன். இனி இரவெல்லாம் அதை மீன்கள் தின்னக்கூடும்.


தனுஷ்கோடியில் மின்சார வெளிச்சமில்லை. ஆனால் பார்வை புலனாகும் அளவில் குறைந்த வெளிச்சம் இருளுக்குள் ஒழுகிக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் எவர் முகமும் தெளிவாக தெரிவதில்லை.குரல்கள் தான் நகர்கின்றன. இடிபாடுகளை நிரப்புகிறது இருள். கடல் அரித்து போன தேவாலயம் இருளில் முணுமுணுத்து கொள்கிறது தன் கடந்த காலத்தின் நினைவுகளை.


என் அருகில் நீண்ட தாடி வைத்த மீனவக் கிழவர் வந்து நிற்கிறார். கடலை பார்த்தபடியே முந்திய நாள் பெய்த மழையை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். மழை பெய்யும் போது எங்கிருந்தீர்கள் என்று கேட்டேன். இதே இடத்தில் நின்று கொண்டுதானிருந்தேன். நான் மழைக்கு ஒடி ஒதுங்குற ஆள் இல்லை. மழை நம்மளை என்ன செய்ய போகுது. கடல் புரண்டுதிமிறுவதை பார்த்து கிட்டே இருந்தேன். பத்து வயசு பையன்ல இருந்து கடலை பாத்துகிட்டு தானே இருக்கேன். அதுக்கு என்னை நல்லா தெரியும் என்றார்.


பிறகு தன் பையிலிருந்து ஒரு பீடியை எடுத்துக் கொண்டு பற்ற வைக்க முயற்சித்தார். காற்று நிச்சயம் தீக்குச்சியை அணைத்துவிடும் என்று நினைத்தேன். அவர் தீக்குச்சியை உரசிய விதமும் அதை கைக்கூட்டிற்குள் காப்பாற்றி நெருப்பில் பீடி பற்ற வைத்த விதமும் வியப்பாக இருந்தது. அவர் காற்று இன்னைக்கு வேகமில்லை என்றபடியே புகைக்க துவங்கினார்.


இருட்டிற்குள்ளாகவே பாசி விற்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஈரமேறிய கடல் மணல் அருகே போய் நின்றேன். கால்களில் அலை படும்போது மணல்கள் கரைந்து போக குறுகுறுப்பாகிக் கொண்டிருந்தது.


நட்சத்திரங்கள் உலகை பார்த்தபடியே இருக்கின்றன.அதற்கு தனுஷ்கோடி என்றோ, மச்சுபிச்சு என்றோ, பேதமில்லை. அது பூமியை தன் விளையாடுமிடமாக மாற்றியிருக்கிறது. இருண்ட கடற்கரையிலிருந்தபடியே நட்சத்திரங்களின் வெளிச்சத்தை காண்பது அலாதியானது. காற்றும் சேர்ந்து கொண்டது. கண்முன்னே பிரபஞ்சம் இயங்கி கொண்டிருப்பதை காண முடிகிறது.
கடல் மணலில் கிடந்த கல் ஒன்றை குனிந்து எடுத்தேன். எதன் மிச்சமது. இடிந்த ரயில் நிலையமா? வீடா, தேவாலயமா? குடியிருப்பா. இல்லை எங்கிருந்தாவது கடல் கொண்டு வந்த போட்டதா? அந்த கல் ஈரமேறியிருந்தது. உலகில் உள்ள எல்லா கற்களும் பழையதாகவே இருக்கின்றன. புத்தம் புதிய பூவை காண்பது போல இன்று பிறந்த கல் என எதையும் காண முடியவேயில்லை. எல்லா கற்களும் ஏதோவொன்றின் சிறு பகுதி தானில்லையா?



கடல் சப்தம் சீராக வந்து கொண்டிருந்தது. அந்த வயதானவர் அதிகம் பேசுகிறவராக இல்லை. அவரும் இருளுள் உட்கார்ந்திருந்தார்.காற்று அதிகமாகிக் கொண்டேயிருந்தது. உலகின் மிக தொன்மையான கடலின் முன்பாக உட்கார்ந்திருக்கிறேன் என்ற உணர்வு மேலோங்கியிருந்தது. கடற்கரையில் இருளுக்குள்ளும் நாய் அலைந்துகொண்டிருக்கிறது. அதற்கு கடலிடம் பயமில்லை.


ஒரு சிறுமி இருளுக்குள்ளாகவே நடந்து சாப்பிட அழைப்பதாக கிழவனை அழைத்தாள். அவர் வானத்தை ஏறிட்டு பார்த்துவிட்டு இன்னும் மணி ஒன்பது கூட ஆகியிருக்காது. பிறகு வர்றேன் என்றார்.


இயற்கை தான் அவர்களது கடிகாரம். அதன் நகர்வோடு தங்களையும் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். மனித உள்ளுணர்வை விட மேலான இயந்திரம் என்ன இருக்கிறது.


கடற்காற்று, தனிமை, கடலிடம் பயங்கொள்ளாத நெருக்கம், நாளை பற்றிய கவலையில்லாத ஏகாந்தமான மனநிலை. என்றிருந்த அந்த கிழவனை பார்த்து கொண்டிருந்தேன். அந்த நிமிசத்தில் உலகின் மிகச் சந்தோஷமான மனிதன் அவரே.

மிக பெரிய சந்தோஷங்கள் எதுவும் விலை கொடுத்து வாங்காமல் கிடைக்க கூடியதே அந்த நிமிசத்தில் தோன்றியது. தனுஷ்கோடி ஒவ்வொரு முறையும் ஏதோவொன்றை கற்றுகொடுக்கிறது. நினைவுபடுத்துகிறது. அன்றும் அப்படியே உணர்ந்தேன்.
எஸ்.ராம கிருஷ்ணன்
Engr.Sulthan

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

துறைமுகம்
மன்னார் வளைகுடா அருகே இது அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம். இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறுபக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரும்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு இந்நகரிலுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த் துறை ஒன்று தனியாக இங்கே ஏற்படுத்தப்பட்டது. 1இங்கு 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்று தனியாக நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்குமதி வசதியுடைய தானியங்கியும் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு மணிக்கு 700 லிட்டர் பெட்ரோலிய எண்ணெப் பொருள்களை இறக்குமதி செய்யத் தேவையான சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர்

தூத்துக்குடியிலிருந்து 32கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் கோவிலின் அருகே கடற்கறையை கொண்டுள்ள ஓரே முருகன் கோவில் என்னும் சிறப்புக்குரியது.இங்கு வருவோர் தங்குவதற்கு வசதியாக கோவிலின் அருகே விடுதிகள் குறைந்த கட்டணத்தில் அமைந்துள்ளது.சூரபத்மனைப் போரில் வென்று செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது.


பாரதியார் நினைவு மண்டபம்
தூத்துக்குடியிலிருந்து சுமார் 35கீ.மீ தொலைவில் மகாகவி பாரதியார் பிறந்த இடமான எட்டயபுரம் உள்ளது.அவரது நினைவை போற்றும் விதமாக கட்டப்பட்டது பாரதியார் நினைவு மண்டபம் மிக எழிலுடன் காட்சியளிக்கின்றது. 1945 ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளர் கல்கியால் கட்டப்பட்டது.1981இல் பாரதியின் நூற்றாண்டு விழாவின்போது தமிழக அரசு இந்த நினைவிடத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது.

குலசேகரபட்டிணம்

அழகிய கடற்கரை கிராமமான குலசேகரப்பட்டினம் குலசை என அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம் திருச்செந்தூரிலிருந்து 12 கிமி தொலைவிலும் உள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் கடலோர கிராமமான குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தப்படியாக நவராத்திரி பண்டிகை படு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது ஒரு சரித்திர புகழ் வாய்ந்த பழமையான ஊர். தற்போது இங்கு தான் உடன்குடி அனல் மின் நிலையம் தொடங்க, ஆயத்த வேலைகள் நடந்து வருகிறது.முன்பு இது ஒரு பெரிய துறைமுக பட்டணமாக விளங்கியது. இன்றும் அதற்கான ஆதாரங்கள் பலவும் சிதைந்த நிலையில் இங்கு காணப்படுகின்றன.


மணப்பாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரைக் கிராமமாகும். இது மணவை என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.கடற்கரை. பக்கத்திலேயே கடல் மணலால் அமைந்த சிறு மலை போன்ற மேடு. உச்சத்தில், ஒரு தேவாலயம். பின்னால், கலங்கரை விளக்கம். இடத்தின் அமைப்பைப்போல, இடத்தின் வரலாறும் ஆச்சரியப்படுத்தும்.இங்கு ஒரு குகையும், நாழிக்கிணறும் திருச்செந்தூரில் உள்ளது போல் இருக்கிறது. மணல்மேடு முழுவதும் நிறைய சிலுவைகள்.


அய்யனார் சுனை

திருச்செந்தூரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. பாலைவனம் போன்ற இப்பகுதியில் அய்யனார் கோயிலும் அருகில் ஊற்று ஒன்றும் உள்ளன. இதனை அய்யன் சுனை என்று அழைக்கிறார்கள்.இங்கு செல்பவர்கள் தங்குவதற்கு விடுதிகளும் உள்ளது.சுனைக்கு செல்லும் வழியில் அழகான பாரஸ்ட் ஓன்றும் அமைந்துள்ளது

ஸ்ரீவைகுண்டம்
திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கும் இங்குதான் கண்ணபிரான் கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலின் மாபெரும் கோபுரமும் பெயர் பெற்றது. திருவேங்கட முதலியார் என்பவரால் கட்டப்பட்ட மண்டபத்தில், யாளிகள், யானைகள், வீரர்கள் போன்ற அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தைச் சேர்ந்த 6 கல்வெட்டுகளும் இங்கு உள்ளன.பார்க்க வேண்டிய இடங்கள் வைகுண்ட பெருமாள் திருக்கோயில்,சிவன் கோயில்,முதவிலுள் ஹயிரத் மசூதி,புனித சந்தியாகப்பர் ஆலயம்,நாராயணப் பெருமாள் கோயில் ஆகியவை இங்கு காணவேண்டிய இடங்கள்...இங்குள்ள சிலைகள் அனைத்தும் மிக துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளது.

வ.உ.சி நினைவில்லம்
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்த ஊர்தான் ஒட்டப்பிடாரம். வெள்ளையருக்கு எதிராகச் சொந்தமாக சுதேசிக் கப்பல் வாங்கி ஓட்டிய மாபெரும் தியாகச் செம்மல். வ.உ.சி வாழ்ந்த இல்லம் நினைவகமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 167.12 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நினைவிடத்தில், அவரது திருவுருவச்சிலை, அரிய புகைப்படங்கள், வாழ்க்கை வரலாறு போன்றவை இடம் பெற்றுள்ளன. முகவரி: 2/119, வ.உ.சி தெரு, ஒட்டப்பிடாரம்.அவர் சிறையில் இருந்த போது அவர் இழுத்த செக்கு சென்னையில் பாதுகாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

பாஞ்சாலங்குறிச்சி

ஓட்டபிடாரத்திற்கு அருகிலுல்ல பாஞ்சாலங்குறிச்சி தான் ஆங்கில சகாப்தியத்தை எதிர்த்து முதலில் வாளெடுத்துப் போர்புரிந்த மாவீரன் கட்ட பொம்மன் பிறந்தது ஊர். அவர் வீற்றிருந்த கோட்டை அழிவுற்றதால் 1974 ஆம் ஆண்டு அரசினால் இவர் நினைவாக கட்டப்பட்ட நினைவிடம் இங்குள்ளது.இது அரசினால் பராமரிக்கப்பட்டு வருகிறது கட்டபொம்மன் தனது தெய்வமாகக் கருதி வழிபட்ட ஜக்கம்மா கோயிலும் இங்கு உள்ளது. பார்வையாளர் நேரம்: காலை 8-1 மாலை 2-6 மணி வரை. கட்டணம் பெரியோர் ரூ1. சிறுவர்கள் 0.50 பைசா.


ஆதிச்சநல்லூர்

சீனிக் கல் பாறைகள் நிரம்பிய மேட்டு நிலம் ஆகும் இப்பறம்பு அமைந்துள்ள இடத்தைத் தொட்டடுத்து ஆதிச்சநல்லூர் என்ற சிற்றூர் அமைந்திருப்பதால் இது ஆதிச்சநல்லூர்ப் பறம்பு என வழங்கப்படுகிறது. தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள மிகத் தொன்மையான ஊர். சுடுமண் பாத்திரங்களும், முதுமக்கள் தாழிகளும் தொல்பொருள் ஆய்வுத் துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஊர் தற்போது தொல்லியல் துறையின் மேற்பார்வையில் உள்ளது.


வாஞ்சி மணியாச்சி

ஆங்கிலேயர் காலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷ்துரையை, வாஞ்சி நாதன் இந்த இரயில் நிலையத்தில்தான் சுட்டான். அத்தோடு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தான். இந்தத் தியாகத்தைப் போற்றும் வகையில்தான், இந்த ஊரை வாஞ்சி மணியாச்சி என்று அழைக்கும் பழக்கம் வந்தது.


கொற்கை துறைமுகம்
தற்போது இது ஒரு சாதாரண கடற்கறை கிராமம்தான். ஆனால், 12 ஆம் நூற்றாண்டில், சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் காலத்தில் பரபரப்பான துறைமுகம் இருந்தது. திருச்செந்தூரிலிருந்து 29கி.மீ.தொலைவில் இருக்கும் இந்தத் தொன்மைச் சிறப்பு வாய்ந்த ஊரின் வரலாற்றை மேலும் கண்டறிய அகழ்வாராய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.

தெய்வச் செயல்புரம்
தூத்துக்குடியிலிருந்து 25கீ.மீ தொலைவில் உள்ள இவ்டத்தில் 78அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் ஆலயம் நிறுவப்பட்டுள்ளது.
இது மிக உயரமான சிலை என கருதப்படுகிறது.

திருக்கோலூர்
ஆழ்வார்த்திருநகர் மற்றும் தென் திருப்பேரைக்கு இடையில் திருக்கோலூர் உள்ளது. இங்கு செல்ல பரல்குளம் பேருந்து நிலையத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.

கயத்தாறு

இவ்வூரில் உள்ள புளிய மரத்தில்தான் 16.10.1799 அன்று மாவீரன் கட்டபொம்மனை ஆங்கிலேய அரசு தூக்கிலிட்டுக் கொன்றது.
இணையத்திலிருந்து திரட்டியவை
Engr.Sulthan

Sunday, May 20, 2012

எங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி

நான் பிறந்த சீமை, வளர்ந்து வாழ்ந்து வரும் நெல்லைச் சீமை, படித்ததும் இச் சீமையில் தான். அன்று கல்லூரி நாட்களில் நெல்லை மாநகரை தினம் தினம் சுற்றி திரிந்து மகிழ்ந்த நாட்களை மறக்க முடியாது. சிந்து பூந்துறை ஆற்றுப் படிக்கட்டு, ரெட்டைப் பாலம், இன்றைய பழைய பஸ் ஸ்டாண்டு, மைசூர் கஃபே, நெல்லை லாட்ஜ், சுல்தானியா ஹோட்டல், சென்ட்ரல்,ரத்னா,பார்வதி,ராயல், லட்சுமி, பாலஸ்-டீ-வேல்ஸ் போன்ற திரையரங்குகள், நெல்லையப்பர் கோவில் அமைந்திருக்கும் நெல்லை டவுண், இரவு முழுதும் சுறு சுறுப்பாக இயங்கும் இரவு டிஃபன் கடை(ஜங்ஷனில்), இவை போன்று இன்னும் பல இடங்கள் தினமும் நான் பார்த்துப் பார்த்து ரசித்த இடங்கள். மறக்க முடியா பழைய இனிமையான நினைவுகள். பாளையில் ஜான்ஸ், ஷேவியர், சாரா டக்கர் கல்லூரிகள், அப்பா காலேஜ், இன்றும் எங்கள் சீமைக்கு மகுடம் சூட்டிக் கொண்டிருக்கின்றன.பாளை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு எனும் பெயர் பெற்றது. இன்று சென்னையில் கொடி கட்டி பறக்கும் போத்தீஸ், RMKV போன்றோர் இந்த சீமையைச் சேர்ந்தவர்கள் தான். சரவணா பவன்,ஸ்டோர்ஸ், புகாரி குரூப் VGP போன்றோரும் நெல்லையைச் சேர்ந்தவர்கள் தான். இன்னும் எங்க ஊரைப் பர்றி சொல்லிக் கொண்டே போகலாம். தொடர்ந்து இரண்டு நண்பர்கள் நெல்லைச் சீமையைப் பற்றி எழுதிய பதிவை படியுங்கள்.

Er..சுல்தான்


எங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி

திருநெல்வேலி என்று சொன்னாலே உங்களுக்கு அல்வா என்றுதான் ஞாபகத்தில் வரும். இங்கு தயாரிக்கப்படும்அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் நெல்லை டவுணில் உள்ளஇருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும்
ருசியே தனிதான். அந்த கடையில் ஒரே ஒரு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என்ற பெயர். கூட்டம் அலைமோதும் அந்த கடையில் வியாபாரம் ஓஹோ. திருநெல்வேலிக்கு வருபவர்கள் இங்கே அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள்.

திருநெல்வேலிக்கு பெயர்க்காரணம் இந்துமத நம்பிக்கையின்படி, ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.

"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.

வற்றாத ஜீவநதிகளுள் ஒன்றான தாமிரபரணி வளம்கொழிக்கும் நெல்லைக்கு பல வரலாற்று சிறப்புகள் உண்டு. நம்நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பல வீரர்களை வித்திட்டபூமின்னு சொல்லலாம். வீரபாண்டிய கட்டபொம்மன், கான்சாகிப், வாஞ்சிநாதன், ..சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, ஊமைத்துரை மற்றும் வரலாற்று ஏடுகளில் சொல்லப்படாதவர்களும் வாழ்ந்த ஊர்ன்னு சொல்லலாம்.

தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் பேசப்படும் வட்டாரமொழிகளில் நெல்லைத்தமிழும் பிரசித்தி பெற்றது. நெல்லையும் தூத்துக்குடியும் பிரிக்கப்பட்டாலும் இன்னும் இங்குள்ள மக்களின் சகோதரத்துவமும் பேச்சுவழக்கும் பழக்கவழக்கங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறன்றன.

நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தென்காசி, கடையந்ல்லூர், சங்கரன்கோவில், அம்பை (அம்பாசமுத்திரம்), சேரன்மகாதேவி, ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் போன்ற 10 சட்டமன்ற தொகுதிகளில் முக்கிய நகரங்கள்உண்டு.

திருநெல்வேலியும்பாளையங்கோட்டையும்இரட்டை நகரங்களாகும். திருநெல்வேலியிலும், பாளையங்கோட்டையிலும் நிறைய கல்விநிறுவனங்கள் நிறைந்துள்ளன. பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படுகிறது.

பாளையங்கோட்டையில்புகழ்பெற்ற மத்திய சிறைச்சாலையும் உள்ளது.

நெல்லை ஜங்சனில் ஆசியாவில் முதல் ஈரடுக்கு மேம்பாலம் போக்குவரத்து சிக்கல் இல்லாமல் காக்கிறது.

இங்குள்ள மக்களில் முஸ்லிம்கள், கிருஸ்துவர்களும் பெருமளவில் இந்து சமுதாயத்தவரும் நிறைந்து காணப்படுகின்றனர். ஒரு சிலபகுதி மக்களை தவிர்த்து மற்ற அனைவரும் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் இங்கு உண்டு. ‌பேட்டை, மேலப்பாளையம் மற்றும் சிலஊர்களில் உள்ள பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களில்திருமணமாகாத பெண்கள் தங்கள் வருங்கால வாழ்க்கைக்கு பெற்றோர் தயவை எதிர்பார்க்காமல் தம்மால் இயன்றளவுக்கு பொருளீட்டி சம்பாதிக்கின்றனர்.

நெல்லையில் சுற்றிப்பார்க்க நெல்லையப்பர் கோவில், அறிவியல் மையம், ஜூன் ஜூலை மாதங்களில் அரசு சார்பிலும் தனியாரும் பொருட்காட்சி நடத்துவார்கள். சில சமயங்களில் சர்க்கஸ்ம் நடத்துவார்கள். மக்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும். தங்களுடைய ஓய்வு நேரங்களில் இதுமாதிரியான இடங்களுக்கு செல்வார்கள். விடுமுறை நாட்களில் அருகிலுள்ள ஜங்சன் பகுதி, கோபாலசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி ஆற்றுக்கு குடும்பத்தினரோடு சென்று பொழுதை கழிப்பார்கள்.

இதுபோக பாபநாசம், குற்றாலம் அருவிகளுக்கும் மற்றைய சுற்றுலாத் தளங்களுக்கு செல்வார்கள்.

இங்குள்ள மக்களுக்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்துவருகிறது. அதெல்லாம் அப்போ... என்று சொல்லுமளவுக்கு இன்று எங்கும் விளைநிலங்கள் மனைகளாகவும் ரியல்எஸ்டேட் தொழில் செய்பவர்களின் கையில் தஞ்சம் அடைந்துள்ளது வேதனைக்குரியது. எங்கு பார்த்தாலும் அங்கே இத்தன சென்ட் நிலம் குறைவான தொகை, இங்கே இவ்வளவு தொகை என்று கூவிகூவி மக்கள் தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலம் விளம்பரம். காண சகிக்கலை.

இது நெல்லையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும்தான்.

நன்றி:ensaral.blogspot






திருநெல்வேலி -கொஞ்சம் விரிவாக
எங்கூரு கதை மொத்தத்தையும் இந்த கட்டுரைல சொல்லணும்கிறது தாமிரபரணி ஆத்த சொம்புக்குள்ள அடைச்சி வைக்கிற மாதிரி ஆயிடும். அதனால இப்போ சொல்ற எல்லாமே ட்ரைலரா நெனச்சுகிடுங்க. மெயின் பிச்சர ஒரு தொடரா பின்னாடி எழுதலாம்.தாமிரபரணி! பேரக்கேட்டாலே சும்மா ஜில்லுன்னு இருக்குல்ல... அதாண்ணேஎங்கூரோட முதுகெலும்பு. ஆனா அதுல மண்ணள்ளி.. இல்ல இல்ல, அதுல மண்ணெடுத்து ஆத்தையே முடமாக்கிகிட்டு இருக்காங்க பாவி பயலுவ. சரி இப்ப அந்த சோகம் எதுக்கு நாம ஊரச் சுத்தி பார்க்கலாம் வாங்க., உங்களுக்கொரு விசயம் தெரியுமா? திருநெவேலி 2000 வருஷத்துக்கு முன்னாடியே தோன்றுன ஆத்தங்கரை நாகரீகம்ணே. ஊரை பத்தி பேசுறதுக்கு பதிலா ஆத்தபத்தி பேசினாலே மொத்த ஊரும் அதுக்குள்ள வந்துரும். ஆறு போற எடம் பூரா பச்ச பசேல்னுட்டு கண்ணுக்கெட்டுன தூரம் பூராவயல் வரப்பும், வாய்க்காலுமா இருக்கும் இப்போ அதுல பாதி எடத்த ப்ளாட் போட்டு விக்கிறாங்க அது வேற கத.நம்ம மணி அண்ணனோட ரோஜா படத்துல, மதுபாலாக்காசின்ன சின்ன ஆசைன்னுபாடிக்கிட்டே ஒரு அருவில குளிக்கும்ல‌,அதான் பாணதீர்த்த அருவி. பொதிகை மலையில இருந்து விழும் பாணதீர்த்த அருவி தரை தொட்டு தாமிரபரணியா மாறுத அழக பார்த்துகிட்டே இருக்கலாம்ல. அங்கன ஒருடேம் இருக்கு வெள்ளக்காரன் கட்னது.டேம் உள்ள ஊரு பேரு காரையார்.
இங்கதான், எப்பேர்பட்ட மஞ்சக்காமாலையையும் தன்னோட மூலிகை மருந்தால குணப்படுத்தும் 100 வயசான அன்னம்மாள்பாட்டி இருந்தாங்க(இப்ப இல்ல). நான் கல்கத்தால இருந்தப்ப மஞ்சகாமாலை வந்து, அதனால ஊர் வந்து இவங்ககிட்ட மருந்து சாப்பிட்டு, அவங்க சொன்ன மாதிரி ஆத்துல ஒரு முங்கு போட்டேன். ரெண்டுமாசமாதீராம இருந்த மஞ்சக்காமாலை மருந்து சாப்பிட்ட ஒரு வாரத்துல படிப்படியா கொறஞ்சிட்டுது. அதுதாம்ணே தாமிரபரணி மகிமை.
அப்டி மலையில இருந்து கீழ எறங்குற ஆறு முதல்ல தொடுற இடம் பாபநாசம். இந்த ஊருக்கு இடப்பக்கம் 30 கிமி தள்ளி குற்றாலம் இருக்கு வலப்பக்கம் 20 கிமி தள்ளி மணிமுத்தாறு இருக்கு, அது மேல மாஞ்சோலை எஸ்டேட் இருக்கு. ஊட்டி, கொடைக்கானல் போறவங்க மாஞ்சோலை எஸ்டேட்டுக்கு போகலாம் அவ்வளவு அழகான தேயிலை தோட்டங்கள் நிறைந்த ஊர். போற பாதை செம த்ரிலிங்க இருக்கும்.

அதுல இருந்து அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, வீரவ நல்லூர், சேர்மாதேவி, கல்லூர், சுத்தமல்லி, கோபலசமுத்திரம், கருங்காடு, குன்னத்தூர், மேலப்பாளையம், குறுக்குத்துறை வழியா திருநெல்வேலி சந்திப்ப அடையுது. அங்கிருந்து சிந்துபூந்துறை, கருங்குளம், திருவைகுண்டம், ஆத்தூர் வழியா போய்புன்னக்காயலில் கடல்ல கலக்குது. நெல்லை தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்தில்முடியுது நம்ம ஆறு.



ஆறு பக்கத்துல இருக்கும் போது மீன்கள பத்தி கேட்கவா வேணும்! கெண்டை, கெளுத்தி,விரால்,அயிரைன்னு நிறைய வகைகள் உயிரோட கிடைக்கும். இது போக வாய்க்கால்ல மட்டும் கிடைக்க கூடிய விலாங்கு, ஆரா மீன்கள் ரொம்ப ஸ்பெஷல்.

இதுல சுத்தமல்லி ஊர்ல இருந்து 5 கிமி தள்ளி இருக்குது பேட்டை.கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் பிறந்த அந்த பேட்டை தான் எங்க சொந்த ஊர். 200 வருடங்கள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார்பள்ளிலதான் எட்டாம் வகுப்பு வரையும், அதற்கப்புறம் நெல்லை சாப்டர் மேனிலைப்பள்ளியிலும் படிச்சேன்.பேட்டையில காமராஜர் மேனிலைப்பள்ளி, ராணி அண்ணா பெண்கள் மேனிலைப்பள்ளி, மா.தி.தா இந்து கல்லூரி, அரசு .டி.,பக்கத்துல உள்ள பழைய பேட்டையில் மகளிர் கல்லூரி என முழுமையான படிப்பு வசதி உள்ள ஊர் பேட்டை. சுற்றியுள்ள கிராமங்கள்ல இருந்தெல்லாம் வந்து இங்கு நிறைய பேர் படிக்கிறாங்க.பேட்டைக்குள்ளேயே இருக்குற தொழிற்பேட்டையில, பல சிறிய தொழிற்சாலைகள் நடந்துகிட்டுஇருக்கு, எல்லாத்துக்கும் மேலதென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை(பேட்டை மில்) இங்கே இருக்கும் போது நல்ல பணப்புழக்கமும் இருந்துச்சு.இங்குஊதுற சங்குசத்தத்தை வச்சுத்தான் எங்கூர்ல மணியே சொல்வாங்க. இதுக்கு முந்தைய .தி.மு. ஆட்சியில அதுக்கும் சங்கு ஊதிட்டாங்க. அதுக்குபின்னாடி வந்த ஆட்சியில திறக்கிறேனாங்க. இன்னிக்கு வரைக்கும் இல்ல.மா.தி,தா இந்து கல்லூரியோட பள்ளி நெல்லை சந்திப்புல இருக்கு.மகாகவி சுப்பிரமணிய பாரதியார்படிச்ச பெருமையும் இந்த பள்ளிக்கு இருக்கு.நெல்லை நகரோடஒரே பொழுதுபோக்கு தியேட்டர்கள்தான் நீங்க இறங்குற எந்த பஸ் ஸ்டாப்பு பக்கத்துலயும் ஒரு தியேட்டர் இருக்கும். உண்மையைச் சொல்ல போனா தியேட்டரை கணக்கு பண்ணித்தான் பஸ்ஸ்டாப்பே இருக்கும்.அதுக்கு அடுத்ததா ஜங்ஷன் தாமிரபரணி ஆத்து பாலத்தை ஒட்டி மாவட்ட அறிவியல் மையம் அமைஞ்சிருக்கு. இங்கும் குழந்தைகளோட நிறைய பேர் போவாங்க. இங்குள்ள டிஜிட்டல் கோளரங்கம் பார்க்கவேண்டிய ஒன்னு.பேட்டையில இருந்து மூணுகிலோமீட்டர் தூரத்துலதான் நெல்லை டவுண், இங்கே இருக்கும் புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவிலை சுத்தி இருக்கிற நாலு ரதவீதியும் தான் நெல்லையோட தெற்கு உஸ்மான் சாலை. ஆரெம்கேவி, போத்தீஸ், நாவல்டி, சோனா அப்படின்னு இங்கே இல்லாத துணிக்கடைகளே இல்லை ( இப்ப ஆரெம்கேவியை வண்ணார்பேட்டைக்கு மாத்திட்டாங்க) அதுபோலவே அனைத்து தங்க நகைக்கடைகளும் இங்கதான் இருக்கு.கல்யாணம், காதுகுத்து, சடங்கு, வளைகாப்புன்னு எல்லா விசேஷத்துக்கும் சாமான் வாங்க சொந்த பந்தத்தையெல்லாம் கூட்டிட்டு படைபடையா இங்க தான் வந்து எறங்குவோம். ஒரு பட்டு எடுக்க ஊரையே கூட்டிட்டு போற பெருமையை நாங்க யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்ல.அப்புறம் துணிமணி, நகை நட்டெல்லாம் எடுத்துட்டு, எல்லாத்தையும் கூட்டிட்டு ஒரு ஹோட்டலுக்கு போய் டிபனோ அல்லது ஒரு டீயும் வடையுமோ வாங்கி கொடுக்கலைன்னு வைங்க. உங்க பேரு ஊரு பூரா நாறிப்போயிரும்.நெல்லை புரோட்டா சால்னாவுக்கும், சைவச் சாப்பாட்டுக்கும் ரொம்ப பேமஸ் கொறஞ்ச விலையில தரமான சாப்பாடு ஊரைச்சுத்தி கிடைக்கும். இவ்வளவு சொல்லிட்டு இருட்டுக்கடையை பத்தி சொல்லாமலா... நெல்லையப்பர் கோவிலுக்கு எதிர்த்தாப்லதான் இருட்டுக்கடை அல்வா இருக்கு. சாயந்திரம் 5 மணில இருந்து 10 மணி வரைக்கும்தான் வியாபராம் ச்ச்சே.. வியாபாரம். (பாருங்க அல்வாவப்பத்தி பேசுனா எழுத்தே வழுக்குது).இந்த கடைக்கு பேர் போர்டெல்லாம் கிடையாது. ஆனா ஊரைச்சுத்தி இருட்டுக்கடை அல்வான்னு போர்டு தொங்குற கடைகளெல்லாம் ஒரிஜினல் இருட்டுக்கடை கிடையாது. அதே போர்டு வைக்க முடிஞ்சவங்களுக்கு அல்வால அதே டேஸ்ட்ட வைக்க முடியலை.


வெள்ளையடிக்கிற கடைதான் இருட்டுக்கடை

அது போல ஜங்ஷன்ல இருக்குறசாந்தி ஸ்வீட்ஸ்லாலா கடையும் அல்வாவுக்கும் மிக்சர் ,ஸ்வீட்ஸ்க்கும் ரொம்ப பேமஸ். மொய்க்க எடம் கொடுக்காத அளவுக்கு எந்நேரமும் கூட்டம் மொச்சிக்கிட்டு நிக்கும்.
ஊரெல்லாம் சாந்தி ஸ்வீட்ஸ்ன்னு பேர் வச்ச கடைகள் இருந்தாலும் இதுதான் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ்.
அதுமாதிரி சாந்திக்கு ஸ்வீட்ஸ்க்கு எதிர்த்தாப்ல‌ இருக்குற லட்சுமி விலாஸ் லாலா கடையிலும், அரசன் ஸ்வீட்ஸிலும் தரமான அல்வா கிடைக்கும்.
நெல்லை நகரத்துக்கு இணையா ஆத்துக்கு அந்த புறம் இருக்கிற நகரம் பாளையங்கோட்டைதென்னகத்தின் ஆக்ஸ்போர்டுங்கிற பெருமைக்குரிய நகரம். இங்கதான் நம்ம சித்ராக்கா பிறந்தாங்கங்கிறது இன்னும் சிறப்பு.
இந்த ரெண்டு நகரத்தையும் இணைக்கிற ஆத்துபாலம் வெள்ளைக்காரங்க காலத்துல நமது சுலோச்சன முதலியார் அவங்களால கட்டப்பட்டது.
நன்றி:சிநேகிதன்.blogspot

Engr.Sulthan