குழலினிது யாழினிது என்பார் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதார்’ என்று ஒரு குறள் உண்டு. யாழின் இசை இனியது அதைவிட இனிது மழலைச் சொல் என்று யாழின் பெருமையையும் கூறுவர். யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு நரம்புகளால் ஆக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர்.