பெற்ற தாய்தந்தையை தவிர அனைத்துப் பொருட்களும் கலப்படமாக உள்ளது என்று கூறும் அளவுக்கு இன்று கடைகளில் வாங்கும் பொருட்களில் கலப்படம் கலந்துள்ளது. உப்பு முதல் உயர்ந்த தங்கம் வரை கலப்படம் இல்லாத பொருட்களே இல்லை. நுகர்வோர்களாகிய நாம்தான் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
மஞ்சள்தூள், மிளகாய்தூய், மிளகு, சர்க்கரை, பருப்பு என எல்லாவற்றிலும் கலப்படம் உள்ளது. இதனை தவிர்க்கவேண்டுமெனில் அக்மார்க் முத்திரையிடப்பட்ட பொருட்களையும், ஐ.எஸ்.ஐ. தரம் உள்ள பொருட்களையும் கேட்டு வாங்கவேண்டும்.